Pages

ShareThis

Powered by Blogger.
 
Monday, September 16, 2013

மத்திய அரசின் முகவராக செயல்படுவதா? : புதுச்சேரி ஆளுநரை திரும்பப்பெற டி.கே.ரங்கராஜன் எம்பி வலியுறுத்தல்

0 comments
புதுச்சேரி,செப். 12-

மத்திய காங்கிரஸ் அர சின் முகவராக புதுச்சேரி துணை நிலை ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்று டி.கே.ரங்கராஜன் எம்.பி வலியுறுத்தினார்.மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் எம்.பி புதுச்சேரியில் வியாழன்று (செப்.12) செய்தி யாளர்களுக்கு பேட்டியளிக் கையில் கூறியதாவது:-

ஓய்வூதியர்களுக்கு எதி ராகவே மத்திய அரசு புதிய ஓய்வூதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இந்த மசோதாவை எதிர்த்து இடதுசாரி மற்றும் அதி முக எம்பிக்கள் மட்டுமே வாக்களித்தனர். ஆனால், பாஜக-வினர் மத்திய அர சுக்கு ஆதரவாகவே வாக் களித்தனர்.மத்திய ஆட்சியாளர் களின் தவறான தொழிற் கொள்கையால் காங்கிரஸ் ஆட்சி செய்யாத மாநிலங் கள் மட்டுமின்றி, புதுச்சேரி போன்று காங்கிரஸ் ஆட்சி பல்வேறு மாநிலங்களிலும் தொழில் நெருக்கடி ஏற்பட் டுள்ளது. இதனால் சமூக குற்றங்கள் அதிகரித்துள் ளன. காங்கிரஸ், பாஜக ஆளும் மாநிலங்களிலும் சட்டம்-ஒழுங்கு சீர்கெட் டுள்ளது. முதல்வர் என். ரங்கசாமி தலைமையிலான புதுச்சேரி அரசின் செயல் பாட்டில் மார்க்சிஸ்ட் கட் சிக்கு கடும் அதிருப்தி உள்ளது.

எனவே, சட்டம்-ஒழுங்கு பிரச்சனையில் மாநிலங்களுக்கு தேவை யான சமூக முன்னேற்ற திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து பெற்று கொடுக்க வேண்டியது ஆளுநரின் செயலாகவே இருக்க வேண்டும். மாநில அந்தஸ்து, உள் ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளில் துணை நிலை ஆளு நர் வீரேந்திர கட்டாரிய ஈடுபட்டிருக்க வேண்டும். மேலும், தற்போது எழுந்துள்ள சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து முதல்வ ரோடு பேசி தீர்க்க வேண்டும். ஆனால், பத்திரிகை யாளர்களிடம் கூறுவது பிரச்சனையை திசைதிருப் பவும், அதிகாரி களுக்கு ஊக் கமும் அளிக்கதான் பயன்படும்.
மத்திய அரசின் முகவராக செயல்படும் துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவை உடனே திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.பேட்டியின்போது மாநில செயற்கு உறுப்பினர் என்.குணசேகரன், புதுவைப் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன், நிலவழகன் ஆகியோர் உட னிருந்தனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com