சிபிஎம் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
சென்னை, மார்ச் 25-
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வெள்ளியன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மதுரவாயல் தொகுதி வேட் பாளர் க.பீம்ராவ் பொன்னேரி வரு வாய் கோட்டாட்சியர் கந்தசாமியி டம் வெள்ளியன்று வேட்பு மனு தாக் கல் செய்தார். கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பெரம்பூர் தொகுதியில் போட்டி யிடும் அ.சவுந்தரராசன், பெரம்பூர் வட்டாட்சியர் சையது ஹூமா யூனியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.
சிதம்பரம் தொகுதியில் போட்டி யிடும் கே.பாலகிருஷ்ணன் கோட் டாட்சியர் இந்துமதியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி யில் போட்டியிடும் ஆர்.ராமமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் உள்ள மாவட்ட வழங்கல் அதிகாரி சண்முகத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அரூர் (தனி) தொகுதி வேட்பாளர் பி.டில்லிபாபு, கோட்டாட்சியர் சுப்புலெட்சுமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பெரியகுளம் (தனி) தொகுதி வேட்பாளர் ஏ.லாசர், கோட்டாட் சியர் இளங்கோவனிடமும், திண் டுக்கல் தொகுதி வேட்பாளர் கே. பாலபாரதி, கோட்டாட்சியர் அலு வலகத்திலும், விளவங்கோடு தொகுதி வேட்பாளர் ஆர்.லீமா றோஸ் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள பிற்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடமும் வேட்புமனு தாக்கல் செய்தனர். மதுரை தெற்கு தொகுதி வேட்பாளர் இரா.அண்ணாதுரை, மதுரை மாநக ராட்சி கிழக்கு மண்டல அலுவல கத்தில் உதவி ஆணையர் ஆறு முக நயினாரிடமும், கீழ்வேளூர் (தனி) தொகுதிவேட்பாளர் நாகை மாலி என்ற வி.பி.மகாலிங்கம், கீழ் வேளூர் வட்டாட்சியர் அலுவலகத் திலும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளர் கே.தங்கவேல் மற்றும் பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளர் வீ.பழனி ஆகியோர் வியாழனன்றே வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட்டனர்.
Friday, March 25, 2011
Subscribe to:
Post Comments (Atom)