Pages

ShareThis

Powered by Blogger.
 
Sunday, March 6, 2011

குழந்தைகள் மருத்துவமனையின் பணி இடங்களை தனியாரிடம் ஒப்படைப்பதைக் கண்டித்து

0 comments
புதுச்சேரி பிப் 26

புதுச்சேரி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் பணி இடங்களை தனியாரிடம் ஒப்படைப்பதைக் கண்டித்து சிபிஎம், சிபிஐ, அதிமுக உள்ளிட்ட கூட்டனி கட்சிகள் சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.
புதுச்சேரி எல்லைப்பிள்ளைச் சாவடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு தேவையான பணி இடங்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும். மருத்துவமனை பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 1-ல் மருத்துவமனை முன்பு சிபிஎம், சிபிஐ, அதிமுக, மதிமுக உள்ளிட்ட கூட்டனி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தை விளக்கி நெல்லித்தோப்பில் நடந்த பிரச்சாரக் கூட்டத்திற்கு அதிமுக வார்டு செயலாளர் ராஜாராம் தலைமை தாங்கினார். சிபிஎம் பிரதேச செயலாளர் பெருமாள், அதிமுக நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகர், சிபிஐ -சலீம், பார்வர்டு பிளாக்-முத்து, ஆர்பிஐ-லயோன் ஆகியோர் பேசினார்கள்.
இதே போல் நேரு வீதியில் நடந்த பிரச்சாரத்திற்கு சிபிஎம் பிரதேசக் குழு உறுப்பினர் பிரபுராஜ் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், முருகன், சிபிஐ சட்டமன்ற உறுப்பினர் வி°வநாதன், நகர செயலாளர் ஆனந்து உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள். புதுச்சேரி, நெல்லித்தோப்பு, பாக்குமுடையான்பேட் ஆகிய பகுதிகளிலும் பிரச்சாரம் நடைப்பெற்றது.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com