Pages

ShareThis

Powered by Blogger.
 
Friday, March 25, 2011

அரியாங்குப்பம் - வீராம்பட்டின கிராமத்து மக்களின் இயல்பு வாழ்கை திரும்பிட புதுச்சேரி அரசு தலையிட வேண்டும்

0 comments
புதுச்சேரி மார்ச் 23
அரியாங்குப்பம் - வீராம்பட்டின கிராமத்து மக்களின் இயல்பு வாழ்கை திரும்பிட புதுச்சேரி அரசு தலையிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுருத்தி உள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,அரியாங்குப்பம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல்பாடல் நிகழ்ச்சிகள் நடந்துள்ளது.பொதுவாக இதுபோல காலச்சார சீரழிவு கலை நிகழ்ச்சிக்கு இளைஞர்கள் மத்தியில் ஈர்ப்பு இருந்து வருகிறது.இந்த நிகழ்ச்சியில் விரும்ப தகாத மோதலுக்கு வழிவகுத்துள்ளது.இம்மோதல் ஏற்பட்ட போது காவல் துறையினர் வேடிக்கை மட்டுமே பார்த்து இருந்தாக தெரிகிறது.
அதனை யொட்டி வீராம்பட்டினம்,அரியாங்குப்பம் மக்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் பிரச்சனையால் தொடர்சியாக ஏற்பட்ட சேதாரங்களும் மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது.இரண்டு கிராம மக்களிடையே இருந்து வருகிற பாரம்பரிய உறவில் விரிசலும் ஏற்பட்டுவிட்டது.இதனால் வீராம்பட்டினம் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது.ஆண்கள்,இளைஞர்கள் அணைவரும் தலைமறைவாக உள்ளனர்.அம் மீனவமக்கள் சொல்லொன்னா துயரத்திலும்,பெண்கள்,குழந்தைகள்,முதியவர்கள் அறிவிக்கபடாத உணவு முற்றுகையை சந்தித்து வருகின்றனர்.மொத்தத்தில் அம் மக்கள் கிராமத்திலேயே முடங்கியும் நல்லது ,கெட்டது நிகழ்ச்சிக்குகூட வெளியில் வரமுடியாத நிலை உள்ளது.
எனவே புதுச்சேரி அரசு உடனடியாக தலையிட்டு சேதமடைந்த வீடுகள்,கார்கள்,இருசக்கர வாகனங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும்,விராம்பட்டினம்-அரியாங்குப்பம் கிராம மக்களிடையே பொது அமைதியை ஏற்படுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுருத்துகிறது.மேலும் இரண்டு கிராமமக்கள் பொது நியதி சார்ந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திட மார்க்சிஸ்ட் கட்சி உள்ளார்ந்த வெண்டுகோளை விடுக்கிறது.
இவ்வாறு பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com