
புதுச்சேரி மார்ச் 1
புதுச்சேரி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் பணி இடங்களை தனியாரிடம் ஒப்படைப்பதைக் கண்டித்து அதிமுக,சிபிஎம், சிபிஜ,மதிமுக, உள்ளிட்ட கூட்டனி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
புதுச்சேரி எல்லைப்பிள்ளைச் சாவடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு தேவையான பணி இடங்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும். மருத்துவமனை பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக, கூட்டனி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மருத்துவமனை முன்பு நடந்த போராட்டத்திர்க்கு சிபிஎம் பிரதேச செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ,சிபிஜ மாநிலசெயலாளர் நாரா.கலைநாதன்,மதிமுக-மணிமாறன்,பார்வர்டு பிளாக்-முத்து,ஆர்எ°பி-லெனின்,ஆர்பிஜ-லெயோன்,எல்ஜெபி-உமாசுதன், பிஎ°பி-சோமசுந்தரம், நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். முன்னதாக இப்போரட்டத்தில் ஆயிரத்திர்க்கும் மேற்பட்ட கூட்டணிகட்சி தலைவர்கள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.