
புதுச்சேரி மார்ச் 27
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசக்குழுக்கூட்டம் கட்சியின் செயற்க்குழு உறுப்பினர் எல்.கலிவரதன் தலைமையில் அஜிஸ்நகரில் ஞாயிற்றுக்கிழமை அவசரமாக நடைப்பெற்றது.இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன், செயற்க்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,நிலவழகன்,ராமசாமி,முருகன்,ராமச்சந்திரன்,உலகநாதன்,உள்ளிட்ட பிரதேசக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு,
புதுச்சேரி சட்டமன்றத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாஹே நீங்களாக போட்டியிடக்கூடிய திருபுவனை(தனி) ,இலாஸ்பேட்,பாகூர் ஆகிய *மூன்று தொகுதிகளில் போட்டியிடுவதற்க்கு அதிமுக தலைமையோடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. முழுமையான பேச்சு வார்த்தை நடைபெறாமாள் மாஹே தொகுதி மட்டும் என்று அதிமுக அறிவித்துள்ளதை பிரதேசக்குழு ஏற்கவில்லை.
இப்பேச்சு வார்தையில் உடன்பாடு ஏற்படாததால் இம்மூன்று தொகுதிகளிலும் மார்ச்சிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடுவதென்று முடிவு செய்யப்பட்டது .மேலும் கட்சியின் மாநிலக்குழு வழி காட்டுதலின் படி புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவது.மார்ச்சிஸ்ட் கட்சி போட்டியிடக்கூடிய தொகுதிகளை தவிர்த்து மற்றதொகுகிகளில் அதிமுக-எண் ஆர் காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. என்று கட்சியின் பிரதேச செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.