Pages

ShareThis

Powered by Blogger.
 
Wednesday, March 9, 2011

உத்தபுரம் ஆலய நுழைவு போராட்டம்

0 comments





தமிழக அரசுக்குச் சொந்தமான புறம் போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உத் தப்புரம் முத்தாலம்மன் கோவிலில் துவக்க காலம் தொட்டே தலித் மக்கள் வழிபாடு செய்யவில்லை என்பது போன்ற ஆணை யை பேரையூர் வட்டாட்சியர் வடிவமைத் துள்ளது தலித் மக்களிடையே பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசியல் சாசனம் தலித் மக்க ளுக்கு வழங்கிய அரசியல் சட்ட உரிமை யைப் பாதுகாக்க மதுரை உத்தப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நடத்தி வரும் போராட்டத்தின் தொடர்ச்சி யாக ஜனவரி 31ந்தேதி முத்தாலம்மன் கோவிலில் ஆலய நுழைவுப்போராட்டம் நடத்தவிருக்கிறது.

இப்போராட்டத்திற்கு முன்பே அரசு இப்பிரச்சனையில் தலையீடு செய்ய வேண் டும் என தமிழக முதல்வர் கருணாநிதிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கடிதம் எழு தினார். அதற்கு இதுவரை பதில் இல்லை.

ஆலயநுழைவுப்போராட்டம் என அறி வித்த பின் அரசு நிர்வாகம் மிக வேக வேக மாக தலித் மக்களின் உரிமைகளைத் தடுக்க அனைத்து வேலைகளிலும் இறங்கி யுள்ளது. சட்டம்- ஒழுங்கு எனச்சொல்லி மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்களைத் தேடித்தேடி ஒரு ஆணையை வழங்கி வருகிறது. அந்த ஆணையை பேரையூர் வட்டாட்சியர் ஆர். மங்களராமசுப்ரமணியன் பிறப்பித்துள்ளார். அடுத்து அந்த ஆணையில், “முத்தாலம் மன் கோயில் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் வழிபாடுகள் செய்யப்பட்டு வந்தது” எனக்குறிப்பிட்டுள்ளது.

உத்தப்புரத்தில் காலகாலமாக முத்தா லம்மன் கோவிலில் எழுமலை, சீல்நாயக் கன்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, தங்ககவுண் டன்பட்டி, தச்சம்பட்டி, கோட்டைப்பட்டி, நல் லது நாயக்கன் பட்டி உள்ளிட்ட 18 கிரா மங்களைச் சேர்ந்த தலித் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களும் வழிபாடு நடத்தியுள்ளனர்.ஆனால் கடந்த 1989 ஆம் ஆண்டு எழுமலையில் நடந்த கட்டப்பஞ் சாயத்தில் தலித் மக்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது, அரசமரத்தை வழிபடக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு “முடி வுகளை” எடுத்தனர். இதன் பிறகு தான் தலித் மக்களைப் பிரிக்கும் வகையில் தீண் டாமைச் சுவர் கட்டப்பட்டது.

தமிழகம் முழுவதும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய ஆய்வின் ஒருபகுதி யாக உத்தப்புரம் தீண்டாமைச்சுவர் வெளி உலகத்திற்கு தெரியவந்தது. இச்சுவரை இதுவரை முழுமையாக அகற்ற மனமில்லாத தமிழக அரசு கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர்-8 ந்தேதி ஒருபகுதியை அகற்றியது. அந்த வழியாக இதுவரை தலித் மக்கள் வாகனத் தில் செல்லமுடியவில்லை. மிக கவனமாக காவல்துறை அப்பாதையில் தலித் மக்கள் செல்வதைத் தடுத்து தனது பணியை “ சிறப்பாக” செய்து வருகிறது.

இந்த நிலையில் தலித் மக்கள் தங்களது வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட ஆலய நுழைவுப்போராட்டம் நடத்தப்படும் என அறிவித்த சூழலில் ஜனவரி28 ந்தேதி பேரையூர் வட்டாட்சியர் ஆர்.மங்களராம சுப்ரமணியன் பிறப்பித்த ஆணையைப் படித்தால் மிகச்சிரிப்பாக இருக்கும். தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உத் தப்புரம் மக்களுக்காக சென்னையில் உள்ள சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதை கூட அறியாமல் அவர் பிறப்பித்த ஆணையில், “எழுமலை காவல் ஆய்வாளரின் அறிக் கையில், கடந்த 30.12.2010 அன்று சென்னை பனகல் பூங்காவில் இடது கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை முழக்கப்போராட் டம் நடத்திய தாகவும், எதிர்வரும் 31.1.2011 அன்று உத்தப்புரம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் தலித் மக்களின் ஆலய நுழைவுப்போராட்டம் நடைபெறும் என்றும்” அறிவித்துள்ளன எனக்குறிப்பிட் டுள்ளார்.

இதில் இருந்தே எதையும் முழுமையாக விசாரிக்காமல் ஒரு தரப்பாகத்தான் அதி கார வர்க்கத்தினர் செயல்படுகின்றனர் எனத் தெரிந்து கொள்ளலாம்.

தலித் மக்கள் தங்கள் உரிமையைக் கேட் டால், அதை ஒடுக்குவதற்காக ஆதிதிராவி டர்களுக்கும், பிற இனத்தவர்களுக்கும் இடையேயுள்ள பகைமை உணர்வு தணிந்து விட்டதாக கருத இயலாத சூழ்நிலையே தற் போதும் நிலவி வருவதாகவும் தனது ரகசிய விசாரணையில் தெரியவந்ததாகக் கூறி 144 தடையாணை பிறப்பித்தல் ஆணை யில் பேரையூர் வட்டாட்சியர் கூறியுள்ளார்.

மதுரையில் உத்தப்புரத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் சமீபத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது கூட, தலித் மக்களுக்கும், எங்களுக்கும் எந்தப் பகையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். உரிமை கேட்பவர்களை பகையாளியாக பார்ப்பது எந்த வகையில் நியாயம்?

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆலய நுழைவுப்போராட்டம் நடந்த போது வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கத்தார் ஒரு பிரசுரத்தை வெளியிட்டனர். “கோவில் தரிசனம் செய்பவர்களும், செய்து வைப்ப வர்களும், அனுமதிப்பவர்களும் மகத்தான அபசாரத்திற்கு ஆளாகி நீண்டகாலம் நரக வாசம் செய்ய வேண்டுமென்று ஆகமங்கள் முறையிடுகின்றன. சுருதி, ஸ்மிருதி, இதி ஹாஸ, ஆகம சாஸ்திரங்களில் நம்பிக்கை யுள்ள ஆஸ்திக மகாஜனங்களுக்கு இது விஷயம் ஞாபகப்படுத்தப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்கள். அது போல இருக் கிறது உத்தப்புரத்தில் ஆலயநுழைவுப் போராட்டம் நடத்த முடிவு செய்த நிலையில் வெளியிடப்பட்டுள்ள அரசு அதிகாரி 144 ன் கீழ் தடை யாணை பிறப்பிப்பு ஆணை.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com