Pages

ShareThis

Powered by Blogger.
 
Wednesday, October 2, 2013

புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

0 comments
புதுச்சேரி,அக்.2-

புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மத்திய பல்கலைகழத்தில் முதலாம்ஆண்டு பயிலும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொள்ளை கொடுத்தும், கொலை மிரட்டல் விடுத்த சீனியர் மாணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாலியல் தடைச்சட்டத்தின் கீழ் புதுச்சேரி பல்கலைகழகத்தில் பாலியர் புகார் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.அன்டை மாநிலங்களில் உள்ளதை போல் புதுச்சேரியில் ராக்கிங் தடைச்சட்டம் இயற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி காந்திவீதி நேருவீதி சந்திப்பில் நடைபெற்ற கண்ட ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் பிரதேசக் செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் தலைமை தாங்கினார்.கட்சியின் செயற்குழு உறுப்பினர் தா.முருகன் கண்டன உரையை துவக்கி வைத்து பேசினார்.பிரதேச செயலாளர் வெ.பெருமாள் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரதேச துணைத்தலைவர் சுமதி,கட்சியின் செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,இடைகமிட்டி செயலாளர்கள் பிரபுராஜ்,லெனின்துரை மற்றும் பாதிக்கப்பட்ட பல்கலைகழக மாணவ மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com