

புதுச்சேரி துனை நிலை ஆளுநர் இக்பால்சிங் பதவி விலக வேண்டும் என்று சிபிஜ வலியுறுத்தியுள்ளது.
அசன் அலிக்கு பாஸ்போர்ட்டு வழங்க கடிதம் எழுதிய விவகாரத்தில் சிக்கியுள்ள புதுவை துனை நிலைஆளுநர் இக்பால்சிங் கை அமலாக்க பிரிவினர் விசாரணை நடத்த உள்ள நிலையில் ஆளுநர் உடனடியாக பதவி விளக வேண்டும் இல்லை என்றால் அவரை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று சிபிஜ மாநில செயலாளர் நாராகலைநாதன் திங்களன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் கூறுகையில், ஆளுநர் பதவி என்பது நடுநிலையானது கட்சி சாராதவராக இருக்க வேண்டும். அப்படி இருக்க நடந்த சம்பவங்களை காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து கூறிய பிறகே தான் பதவி விளகுவது குறித்து முடிவு எடுப்பேன் என்று ஆளுநர் இக்பால்சிங் கூறுவது கண்டனத்துகுறியது. என்று நாரா.கலைநாதன் கூறினார்.
ஆளுநர் இக்பால்சிங் மீதான குற்றச்சாட்டைஅடுத்து அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் கடந்த ஏப்ரல் 9ல் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.