புதுச்சேரி ஏப் 27
புதுச்சேரி கவர்னரை திரும்பபெறக்கோரி முழு கடை அடைப்பு போராட்டம் மக்கள் ஆதரவோடு அமைதியாக நடைபெற்றது.
கருப்பு பண மோசடி மன்னன் ஹசன் அலிக்கு போலி பாஸ்போர்ட் எடுக்க பரிந்துரைத்த குற்றத்தில் சிக்கியுள்ள புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங் கை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.மேலும் புதுச்சேரி அமைச்சரவைக்கே தெரியாமல் தனது மகன்கள் இடம் பெற்றுள்ள சவுத் எஜிகேஷ்னல் டிரஸ்டிக்கு மருத்துவ கல்லுhரி துவங்க தடையில்லா சான்றிதழ் வழங்கியிருப்பது.அரியாங்குப்பத்தில் 40 ஏக்கரில் குருத்வாரகோவில் கட்ட இடம் ஒதுக்கியது என பல்வேறு குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கவர்னர் இக்பால்சிங் கை உடனடியாக திரும்ப பெற வலியுருத்தி புதன்கிழமை காலை 6 மணிமுதல் மாலை 6 மணி வரை முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அதிமுக,சிபிஎம்,சிபிஜ,தேமுதிக,பார்வர்டு பிளாக்,ஆர்எஸ்பி,பிஎஸ்பி,மற்றும் ஜனநாயக அமைப்புகள் அறைகூவல் விடுத்திருந்தனர்.
கடைகள் அடைப்பு
பந்த் போராட்டத்தை யொட்டி புதுச்சேரி நகரை சுற்றியுள்ள நேருவீதி,அண்ணாசாலை,காந்தி வீதி,மறைமலைஅடிகள் சாலை,காமராஜர் சாலை ஆகிய பகுதியில் உள்ள கடைகள் வர்த்தக நிறுவனங்கள்,திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தது. தனியார்பேரூந்துகல் முற்றிலும் இயக்கபடவில்லை ,ஆட்டோ,டேம்போக்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.வில்லியனுhர்,பாகூர்,திருக்னுhர் உள்ளிட்டகிராமப்புற பகுதிகளிலும் மக்கள் கடைகளைஅடைத்து போராட்டத்திற்கு ஆதரவலித்தனர்.ஒரு சில தமிழக அரசு பேருந்துகள் மட்டுமே காவல் துறை பாதுகாப்போடு புதுவை எல்லை வரை இயக்கப்பட்டது.
மறியலுக்கு தடை
பந்த் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிரபித்திருந்தார்.அதனால் ஊர்வலமாக சென்று மறியல் போராட்டம் செய்வதற்கு கட்சி தலைவர்களுக்கு அனுமதி அளிக்கபடவில்லை.மக்கள் பேராதரவோடு அமைதியாக பந்த் போராட்டம் நடைபெற்றதற்கு அதிமுக,சிபிஎம்,சிபிஜ,தேமுதிக,உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கடைவியாபாரிகளுக்கும் அனைத்து பகுதிமக்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.மக்கள் போராட்டத்திற்கு மதிப்பு அளித்து மத்திய அரசு கவர்னரை உடனே திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.இதேப்போல் காரைக்கால்,மாஹே,யாணத்திலும் பந்த் போராட்டம் அமைதியாக நடைபெற்றது.
கவர்னர் டெல்லிக்கு விரைவு
இந்நிலையில் கவர்னரை அமலாக்கபிரிவு அதிகாரிகள் இரண்டு நாட்களாக புதுச்சேரியில் விசாரணை நடத்தினர்.செவ்வாய் கிழமை இரவு 8.45 மணி வரை விடியோ கான்பிரன்சிங் மூலம் அமலாக்க பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி சென்ற உடன் 45 நிமிடங்கள் கழித்து கவர்னர் இக்பால்சிங் டெல்லி செல்வதற்க்காக தனது முகத்தை கூட பத்திரிக்கையாளர்களுக்கு தெரியாத வண்ணம் மறைத்தவாறு காரில் சென்னைக்கு புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் உள்ளது.