Pages

ShareThis

Powered by Blogger.
 
Monday, March 24, 2014
Wednesday, October 16, 2013

கந்துவட்டிகாரர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

0 comments
புதுச்சேரி,அக்.7-

கந்துவட்டிகாரர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அநியாய வட்டி வசூல் செய்யும் கந்து வட்டி கும்பல் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெத்துசெட்டிப்பேட்டை கொல்லிமேடு மைதானத்தை மீட்டு விளையாட்டு மைதானம் அமைத்து கொடுக்க வேண்டும்.உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தெசிய நெடுஞ்சாலையில் மதுபானகடைகள் அமைப்பதை புதுச்சேரியில் தடை செய்ய வேண்டும்.லாஸ்பேட்டை சென்பக விநாயகர் கோவில் எதிரில் நீண்ட காலமாக குடியிருக்கும் மக்களுக்கு இலவச மணைப்பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்த்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உழவர்கரைநகரக்குழு செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் பெருமாள் கண்டன உரையாற்றினார்.பிரதேசக்குழு உறுப்பினர் நடராஜன்,கமிட்டி உறுப்பினர்கள் குணசேகரன்,குப்புசாமி,பாஸ்கர்,சந்துரு,ஜெயலக்ஸ்மி,மற்றும் முருகதாஸ் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கந்துவட்டி கொடுமையால் தூக்கில் தொங்கும் அவல நிலை உள்ள மாதிரி காட்சியை பிரதிபலித்தனர்.
Read more...
Wednesday, October 2, 2013

புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

0 comments
புதுச்சேரி,அக்.2-

புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மத்திய பல்கலைகழத்தில் முதலாம்ஆண்டு பயிலும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொள்ளை கொடுத்தும், கொலை மிரட்டல் விடுத்த சீனியர் மாணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாலியல் தடைச்சட்டத்தின் கீழ் புதுச்சேரி பல்கலைகழகத்தில் பாலியர் புகார் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.அன்டை மாநிலங்களில் உள்ளதை போல் புதுச்சேரியில் ராக்கிங் தடைச்சட்டம் இயற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி காந்திவீதி நேருவீதி சந்திப்பில் நடைபெற்ற கண்ட ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் பிரதேசக் செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் தலைமை தாங்கினார்.கட்சியின் செயற்குழு உறுப்பினர் தா.முருகன் கண்டன உரையை துவக்கி வைத்து பேசினார்.பிரதேச செயலாளர் வெ.பெருமாள் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரதேச துணைத்தலைவர் சுமதி,கட்சியின் செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,இடைகமிட்டி செயலாளர்கள் பிரபுராஜ்,லெனின்துரை மற்றும் பாதிக்கப்பட்ட பல்கலைகழக மாணவ மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.
Read more...
Sunday, September 29, 2013

இடதுசாரிகளின் மாற்றுப்பாதை விளக்க பிரச்சார நடைபயணம்

0 comments

புதுச்சேரி,செப்.29-
இடதுசாரிகளின் மாற்றுப்பாதை விளக்க பிரச்சார நடைபயணம் பதுச்சேரியில் நடைபெற்றது.

நிலச்சீர்திருத்தத்தை அமல்படுத்தி உபரி நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.கல்வி சுகாரதாரத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்.சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதை கைவிட வேண்டும் என்பன9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும்,கடந்த 20ஆண்டுகளாக காங்கிரஸ் ,பாஜக கட்சிகள் கடைபிடிக்கப்பட்ட பொருளாதார கொள்கைக்கு மாற்று இடதுசாரிகட்சிகள் முன்வைத்துள்ள கொள்கைபிரகடத்தை  வலியுறுத்தி இப்பிரச்சாரம் நடைபெற்றது.

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் துவங்கிய நடைபயணபிரச்சாரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சயின் நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ் தலைமை தாங்கினார்.கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார்.செயற்குழு உறுப்பினர் தா.முருகன் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.சிபிஎம் பிரதேச செயற்குழு உறுப்பினர்கள்  ராஜாங்கம்,சுமதி,இடைகமிட்டி உறுப்பினர்கள் சரவணன்,மணவாளன்,அழகர்ராஜ்,உள்ளிட்ட திரளானோர் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.முன்னதாக முத்தியால்பேட்டையல் துவங்கிய பிரச்சாரம் மணிகூண்டு,சின்னையாபுரம்,ஈஸ்வரன் கோவில்,காந்திவீதி,நேருவீதி ஆகிய பகுதிகளில் நடைபயணபிரச்சாரம் நடைபெற்றது.
Read more...

செவிலியர் நியமன தேர்வில் நடந்துள்ள முறைகேட்டை கண்டித்து புதுச்சேரி ஜிப்மர் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

0 comments
புதுச்சேரி,செப்.27- 




புதுச்சேரி ஜிப்மரில் காலியாக உள்ள 400க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் நடந்துள்ள முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஜிப்மர் தன்னாட்சி மசோதாவில் உறுதியளித்துள்ளபடி பி,சி,டி பிரிவு காலி பணியிடங்களுக்கு புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும்.ஜிப்மரில் கட்டுமானப்பணி மற்றும் பணிநியமனம்,பதவிஉயர்வு ஆகியவற்றில் நடைபெற்றுள்ள முறைகேடு பற்றி பொதுப்பணித்துறை,சுகாதாரத்துறை மூலம் துறைச்சார்ந்த விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட் கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைப்பெற்றது.

புதுச்சேரி ஜிப்மர் வாயில் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,நிலவழகன்,ராஜாங்கம்,இடைகமிட்டி செயலாளர்கள் லெனின்துரை,பிரபுராஜ்,தமிழ்ச்செல்வன்,முருகையன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் மதிவாணன்,நடராஜன்,மணிபாலன் உள்ளிட்ட திரளனோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக செவிலியர் தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கமிட்டனர்.
Read more...
Friday, September 20, 2013

ஜிப்மர் மருத்துவமனைக்கான செவிலியர்கள் தேர்வில் நடந்துள்ள மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக.

0 comments
ஜிப்மர் மருத்துவமனைக்கான செவிலியர்கள் தேர்வில் நடந்துள்ள மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக.

       காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சியாளர்களின் நவீன தாராளமயக் கொள்கையால் ஊழல் முறைகேடுகள் அதிகரித்துள்ளது. புதிய புதிய ஊழல்களும், முறைகேடுகளும் தொடர்ந்து அணிவகுத்து நிற்கிறது. இந்த வரிசையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனை நிர்வாகத்தின் செவிலியர்கள் தேர்வில் நவீன மோசடியும் அணிவகுத்துள்ளது.

       ஜிப்மர் மருத்துமனைக்காக 465 செவிலியர் பணியிடங்களுக்கு புதுச்சேரி, சென்னை, திருச்சி, திருவனந்தபுரம் ஆகிய மையங்களில் தேர்வு நடந்தது. 15996 பேர் தேர்வு எழுதினார்கள். 463 பேர் செவிலியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டவர்களில் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து 100 பேரும், புதுச்சேரியில் (காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட) 33 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் திருவனந்தபுரம் மையத்தில் இருந்து மட்டும் 330 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர்.

       மேலும் ஜிப்மர் epu;thf அலுவலர் உண்ணிக்கிருஷ்ணன் மேற்பார்வையில் நடந்த மையத்தில் இருந்து கணிசமானவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இந்த தேர்வில் விதிமுறைகளும், நடைமுறைகளும் மீறப்பட்டுள்ளது. தேர்வு நடத்திய அலுவலர்களும், ஜிப்மர் நிர்வாகமும் சேர்ந்து கூட்டாக முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதற்கான, பலகோடி ரூபாய் பணம் கைமாறியுள்ளதற்கான வலுவான முகாந்திரம் உள்ளது. ஆகவே, செவிலியர் நியமன பணித்தேர்வு குறித்து உயர்மட்ட நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

       ஜிப்மர் தன்னாட்சி மசோதா 2006 சட்டமாக நிறைவேற்றுகிற போது நடைமுறையில் இருந்துவருகிற இலவச மருத்துவசேவை, இலவச மருத்துவக்கல்வி, புதுச்சேரி இளைஞர்களுக்கு B, C மற்றும் D பிரிவு பணியிடங்களில் புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதியம் ஆகியவை தொடரும் என நாடாளுமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அனைத்தையும் ஜிப்மர் நிர்வாகம் மறுத்துவருகிறது. இது புதுச்சேரி மாநில மக்களுக்கும், ஊழியர்களுக்கும் இழைக்கப்படும் நம்பிக்கைத் துரோகமாகும்.

       ஆகவே, மத்திய அரசு இப்பிரச்சனையில் உடன் தலையிட்டு செவிலியர்கள் நியமனத் தேர்வில் நடந்துள்ள மிகப்பெரும் மோசடி கூட்டுச்சதி குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதுவரையில் செவிலியர் பணிநியமனத்தை நிறுத்திitf;f வேண்டும் vd khu;f;rp];l; fl;rp Nfl;Lf;nfhs;fpd;wJ. மேலும் ஜிப்மரில் B, C மற்றும்  D பிரிவு காலிப் பணியிடங்களுக்கு புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை mspj;J epug;g வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.  இக்கோரிக்கையை முன்வைத்து 27.09.2013ல் ஜிப்மர் மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடவும் மார்க்சிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது. இவ்வியக்கத்தில் அனைத்துப் பகுதி மக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுகிறோம்.

                                                       ,tz;

                                                                                                                      nt.ngUkhs;
gpuNjr nrayhsu;


Read more...
Monday, September 16, 2013

மத்திய அரசின் முகவராக செயல்படுவதா? : புதுச்சேரி ஆளுநரை திரும்பப்பெற டி.கே.ரங்கராஜன் எம்பி வலியுறுத்தல்

0 comments
புதுச்சேரி,செப். 12-

மத்திய காங்கிரஸ் அர சின் முகவராக புதுச்சேரி துணை நிலை ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்று டி.கே.ரங்கராஜன் எம்.பி வலியுறுத்தினார்.மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் எம்.பி புதுச்சேரியில் வியாழன்று (செப்.12) செய்தி யாளர்களுக்கு பேட்டியளிக் கையில் கூறியதாவது:-

ஓய்வூதியர்களுக்கு எதி ராகவே மத்திய அரசு புதிய ஓய்வூதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இந்த மசோதாவை எதிர்த்து இடதுசாரி மற்றும் அதி முக எம்பிக்கள் மட்டுமே வாக்களித்தனர். ஆனால், பாஜக-வினர் மத்திய அர சுக்கு ஆதரவாகவே வாக் களித்தனர்.மத்திய ஆட்சியாளர் களின் தவறான தொழிற் கொள்கையால் காங்கிரஸ் ஆட்சி செய்யாத மாநிலங் கள் மட்டுமின்றி, புதுச்சேரி போன்று காங்கிரஸ் ஆட்சி பல்வேறு மாநிலங்களிலும் தொழில் நெருக்கடி ஏற்பட் டுள்ளது. இதனால் சமூக குற்றங்கள் அதிகரித்துள் ளன. காங்கிரஸ், பாஜக ஆளும் மாநிலங்களிலும் சட்டம்-ஒழுங்கு சீர்கெட் டுள்ளது. முதல்வர் என். ரங்கசாமி தலைமையிலான புதுச்சேரி அரசின் செயல் பாட்டில் மார்க்சிஸ்ட் கட் சிக்கு கடும் அதிருப்தி உள்ளது.

எனவே, சட்டம்-ஒழுங்கு பிரச்சனையில் மாநிலங்களுக்கு தேவை யான சமூக முன்னேற்ற திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து பெற்று கொடுக்க வேண்டியது ஆளுநரின் செயலாகவே இருக்க வேண்டும். மாநில அந்தஸ்து, உள் ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளில் துணை நிலை ஆளு நர் வீரேந்திர கட்டாரிய ஈடுபட்டிருக்க வேண்டும். மேலும், தற்போது எழுந்துள்ள சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து முதல்வ ரோடு பேசி தீர்க்க வேண்டும். ஆனால், பத்திரிகை யாளர்களிடம் கூறுவது பிரச்சனையை திசைதிருப் பவும், அதிகாரி களுக்கு ஊக் கமும் அளிக்கதான் பயன்படும்.
மத்திய அரசின் முகவராக செயல்படும் துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவை உடனே திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.பேட்டியின்போது மாநில செயற்கு உறுப்பினர் என்.குணசேகரன், புதுவைப் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன், நிலவழகன் ஆகியோர் உட னிருந்தனர்.
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com