Pages

ShareThis

Powered by Blogger.
 
Sunday, September 29, 2013

செவிலியர் நியமன தேர்வில் நடந்துள்ள முறைகேட்டை கண்டித்து புதுச்சேரி ஜிப்மர் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

0 comments
புதுச்சேரி,செப்.27- 




புதுச்சேரி ஜிப்மரில் காலியாக உள்ள 400க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் நடந்துள்ள முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஜிப்மர் தன்னாட்சி மசோதாவில் உறுதியளித்துள்ளபடி பி,சி,டி பிரிவு காலி பணியிடங்களுக்கு புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும்.ஜிப்மரில் கட்டுமானப்பணி மற்றும் பணிநியமனம்,பதவிஉயர்வு ஆகியவற்றில் நடைபெற்றுள்ள முறைகேடு பற்றி பொதுப்பணித்துறை,சுகாதாரத்துறை மூலம் துறைச்சார்ந்த விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட் கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைப்பெற்றது.

புதுச்சேரி ஜிப்மர் வாயில் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,நிலவழகன்,ராஜாங்கம்,இடைகமிட்டி செயலாளர்கள் லெனின்துரை,பிரபுராஜ்,தமிழ்ச்செல்வன்,முருகையன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் மதிவாணன்,நடராஜன்,மணிபாலன் உள்ளிட்ட திரளனோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக செவிலியர் தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கமிட்டனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com