Pages

ShareThis

Powered by Blogger.
 
Sunday, January 30, 2011

ஆலோசனைக் கூட்டம்

0 comments


புதுச்சேரி ஜன 30
புதுச்சேரி காங்கிர° - திமுக கூட்டனி அரசை வீழ்த்த அதிமுக, மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
உப்பளம் அதிமுக தலைமைக் அலுவலகத்தில் தலைமை கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, முன்னால் அமைச்சர் செம்மலை, புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஓம்சக்தி சேகர், ஓமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் மார்க்சி°ட் கட்சியின் பிரதேச செயலாளர் பெருமாள், செயற்க்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், நிலவழகன் ஆகியோர் கலந்து கொண்டு, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிர° - திமுக அரசை வீழ்த்துவதற்கான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்றது.
Read more...
Friday, January 28, 2011

அரசியல் விளக்கப் பொதுக் கூட்டம்

0 comments


மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக் குழு சார்பில் அரசியல் விளக்கப் பொதுக் கூட்டம் லா°பேட்டையில் நடைப்பெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு சிபிஎம் செயற்க்குழு உறுப்பினர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். கட்சியின் உழவர்கரை கமிட்டி செயலாளர் லெனின் துறை வரவேற்புரை ஆற்றினார். நகர கமிட்டி செயலாளர் சீனுவாசன் முன்னிலை வகித்தார். சிபிஎம் தமிழ்மாநில செயற்க்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்று பேசுகையில், நாட்டு மக்களை விலைவாசி உயர்வில் சிக்க வைத்துள்ள காங்கிர° கட்சி ஆந்திராவைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் இரண்டாக பிளவு ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரச்சனையை மறந்து, தங்களின் பதவிக்காக சண்டைப் போட்டுக் கொள்ளும் நிலை தான் தற்போது புதுச்சேரியில் ஏற்பட்டுள்ளது.
126 ஆம் ஆண்டு விழாக் கொண்டாடும் காங்கிர° கட்சி, பல மாநிலங்களில் மக்களால் தோற்கடிக்கப் பட்டு வருகிறது. இந்தநிலை புதுச்சேரியிலும் விரைவில் ஏற்படும் என்றார். அன்றாடம் மூட்டைத் தூக்கம் தொழிலாளிக்கு தெரிகின்ற விலைவாசி உயர்வு, ஏன் உலக வங்கியில் பணியாற்றி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தெரியவில்லை என்று கேள்வி எழுப்பினார். தற்போது ஊழலில் சிக்கியுள்ள காங்கிர° - திமுக °பெக்ட்ரம் அலைக்கற்று ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து ஏன் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை அமைக்க முன் வரவில்லை. எனவே வரும் சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சிகளை மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும் என்றார். முன்னதாக கட்சியின் பிரதேச செயலாளர் பெருமாள், மாநில காங்கிர° ஆட்சியின் அவல நிலையை எடுத்துரைத்து பேசினார். செயற்க்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், நிலவழகன், முருகன், கலிவரதன், ராமசாமி, உலகநாதன் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
Read more...
Tuesday, January 11, 2011

DEMONSTRATION AT THIRUBAINAI AGAINST CORRUPTION

0 comments

CITU CONDUCTED DEMONSTRATION AT THIRUBAINAI AGAINST CORRUPTION. ALL LEADERS OF CITU PARTICIPATED IN THIS PROGRAM
Read more...

புதுச்சேரியில் நடந்த பேரணி ஆர்ப்பாட்டம்

0 comments



மக்கள் விரோத காங்கிர° ஆட்சியை அகற்றுவோம் என்ற கோஷ்த்தை முன்வைத்து இந்திய கம்யூனி°ட் கட்சியின் சாhபில் புதுச்சேரியில் நடந்த பேரணி ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள் பங்கேற்று பேசினார்.அருகில் அக்கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா,மாநில செயலாளர் நாரா.கலைநாதன்,அன்பழகன் (அதிமுக) ,மணிமாறன்(மதிமுக),லெனின் (ஆர்எ°பி),முத்து (பார்வர்டு பிளாக்) சட்டமன்ற உறுப்பினர்கள் விசுவநாதன்,ஓம்சக்திசேகர் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
Read more...

CPI(M) ,CPI,AFBP, RSP – ALL LEFT FORCE RALLY IN FRONT OF SAMPLE AGAINST ESSIENTIAL COMMODITIE PRICE HIKE ON APRIL 2010

0 comments




Read more...
Friday, January 7, 2011
Wednesday, January 5, 2011

பொய் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையை கண்டித்து

0 comments

புதுச்சேரி ஜன 3
புதுச்சேரி ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையை கண்டித்து சிஜடியூ உள்ளிட்ட அனைத்து ஆட்டோ சங்கங்களின் சார்பில் நேருவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை ஏர்போர்ட்டில் உளவு பிரிவு அதிகாரியாக பணியாற்றுபவர் ஈ°வர் சந்திரபெகரா. இவர் குடும்பத்துடன் டிசம்பர் 30ல் அரவிந்தர் ஆசிரமத்தை சுற்றிப் பார்ப்பதற்கு புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்து ஆட்டோ மூலம் ஆசிரமம் செல்வதற்கு பாக்குமுடையான் பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன் ஆட்டோவை சவாரி பேசியுள்ளார். ரூ. 60க்கு சவாரி பேசி ஆசிரமம் சென்று இறங்கிய ஈ°வர் சந்திரபெகரா ரூபாய் 50 ஐ மட்டும் கொடுத்துள்ளார். ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன் மீதி தொகை ரூபாய் 10ஐ கேட்டதற்கு தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் பெரியக்கடை காவல் நிலையத்தில் புகார் செய்ததில் ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன் மீதே காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் உண்மை நிலையை விசாரிக்காமல் வெங்கடேசன் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும். ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய ஈ°வர் சந்திரபெகரா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆசிரமத்திற்கு துணை போகும் காவல்துறையைக் கண்டித்து இப்போராட்டம் நடைப்பெற்றது. போராட்டத்திற்கு சிஐடியூ ஆட்டோ சங்க பிரதேசத் தலைவர் ராஜாங்கம் தலைமைத் தாங்கினார். சங்கத்தின் கவுரவத் தலைவர் முருகன், சிஐடியூ மாவட்ட துணைத் தலைவர் நிலவழகன், ஆட்டோ சங்க பொதுச்செயலாளர் சீனுவாசன் மற்றும் அனைத்து ஆட்டோ சங்கத் தலைவர்கள் சந்திரசேகர், மணிவண்ணன், ஏழுமலை, பிராக்ளின், வேலு, மூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஏஐடியூசி, தொமுச, ஏடியூ, புமாஆச, காமராஜர் ஆட்டோ சங்கங்களைச் சேர்ந்த திரளான ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com