Pages

ShareThis

Powered by Blogger.
 
Thursday, October 11, 2012

மக்களுக்கு கிடைத்த வெற்றி - உள்ளாட்சி தேர்தல்

0 comments

புதுச்சேரி,அக்-8
புதுச்சேரி அரசு தாக்கல் செய்த மனுவை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை    ஜனவரி 15 தேதிக்குள்  நடத்தி  முடிக்க வேண்டும் என்று இறுதி கெடுவிதிப்பு.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 1968 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.அத்தேர்தலுக்கு பிறகு 38 ஆண்டுகளாக  உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.இதனை அடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததின் பேரில் உள்ளாட்சி தேர்தல் 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மூன்று கட்டங்களாக  நடைப்பெற்றது.அதன் படி  தேர்ந்தெடுக்கப்பட்டோர் பதவி காலம் கடந்த 2011 ஜூலை மாதம் முடிவடைந்ததை யொட்டி மாநில என்.ஆர் காங்கிரஸ் அரசு மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை.அதனை தொடர்ந்து  மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் சார்பில் 29.7.2011 ல் சென்னை உயர்நீதி மன்றத்தில்  தேர்தல் நடத்தகோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.இம்மனுவை விசாரித்த நீதிபதிகள்  2012  பிப்ரவரி  22தேதிக்குள் (6மாதத்திற்குள்) தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று  புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டு இருந்தனர்.இக்காலகெடு முடியும் இரண்டு தினங்களுக்கு முன்பு புதுச்சேரி அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.அம்மனுவில்  தேர்தல் ஆனையர் நியமிக்கபடவில்லை,வாக்காளர் தேர்வு சரிபார்க்கவேண்டும்  எனவே மேலும் 6 மாத கால அவகாசம் அரசு சார்பில்  கேட்கப்பட்டது.இம்மனு மீதான விசாரணை முடிவடைந்து  கடந்த 15.3.2012  மேலும் 6 மாதகால அவகாசம் அளித்த நீதிபதிகள் தேர்தலை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க  வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு  உத்தரவிட்டு இருந்தனர்.

புதுச்சேரி அரசின் மனு நிராகரிப்பு

இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டும் தேர்தலை நடத்தாத புதுச்சேரி அரசு  மிக தாமதமாக வாக்காளர் சரிபார்க்கும் பணியை தொடங்கியது.மேலும் புதுச்சேரி அரசு சார்பில் தேர்தலை நடத்த 5மாத கால அவகாசம் வேண்டும் என்று செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில்  மீண்டும் ஒரு மனுதாக்கல் செய்தது.இந்நிலையில்  திங்களன்று (அக்-8)  தலைமை நீதிபதி இக்பால்,நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் அரசு தாக்கல் செய்த மனுமீதான விசாரணை  நடைபெற்றது.அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முருகேசன் உள்ளாட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீடு பணியும்,வாக்காளர் சரிபார்க்கும் பணியும் நடைபெற்று கொண்டு இருக்கிறது எனவே மேலும் 5 மாதகால அவகாசம் வேண்டும் என்று வாதிட்டார்.உடனே மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்டாலின்அபிமன்யு ஆஜராகி  வாதாடுகையில் ஏற்கனவே இரண்டு முறை 6மாத காலஅவகாசம் வழங்கப்பட்டுவிட்டது.அப்போதும் தேர்தல் நடத்தாமல் வேண்டும் என்றே காலதாமதம் செய்கின்றனர். எனவே கால அவகாசம் வழங்ககூடாது என்று வாதிட்டார்.இரு தரப்பின் வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் இக்பால்,சிவஞானம் ஆகியோர் கொண்ட பென்ச் புதுச்சேரி அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததோடு,உள்ளாட்சி தேர்தலை 2013 ஜனவரி 15 ஆம்தேதிக்குள் நடத்தி முடித்தி உள்ளாட்சி பிரதிநிதிகளின் பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று இறுதி  உத்தரவு பிறபித்தனர்.

மக்களுக்கு கிடைத்த வெற்றி

இத்தீர்ப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் கூறுகையில்,இத்தீர்ப்பு ஜனநாயகத்திற்கும்,மக்களுக்கும் கிடைத்த  வெற்றி.நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளித்து மாநில அரசு உடனடியாக தேர்தலை நடத்தி அனைத்து முடிவுகளையும் அறிவிக்க வேண்டும் என பெருமாள் கேட்டுகொண்டுள்ளார்.
Read more...

சிஐடியு மினிலோடு கேரியர் சங்கத்தின் புதிய கிளை உதயம்

0 comments
புதுச்சேரி,அக்-10
இண்டேன் லாரி ஓட்டுநரை தாக்கிய சமூக குற்றவாளி மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது.
சிஐடியு இண்டேன் லாரி ஓட்டுநர்கள் சங்கத்தின் புதுச்சேரி கௌரவ தலைவர் குணசேகரன் வில்லியனுhர் காவல் நிலைய ஆய்வாளருக்கு அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
புதுச்சேரி ஒதியம்பட்டு அடுத்துள்ள திருக்காஞ்சியில் இயங்கிவரும இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான சமையல் எரிவாயு  நிரப்பும் தொழிற்சாலை இயங்கிவருகிறது.எரிவாயு நிரப்பட்ட சிலிண்டர்களை லாரியில் ஏற்றிக் கொண்டு சென்று ஏஜென்சிகளின் குடோனுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளைச் 50க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் செய்துவருகின்றனர்.சம்பவத்தன்று இப்பணியில் ஈடுபட்டிருந்த லாரி ஓட்டுநர் டி.முருகன் என்பவரை ஒதியம்பட்டு அருகே சமூக விரேத சக்திகள் வழிமறித்து தாக்கியுள்ளனர்.மேலும் முருகன் வைத்திருந்த ஐயாயிரம் ரூபாயைப் பறித்து கொண்டு மிரட்டியுள்ளனர்.ஏற்கனவே லாரியின் கண்ணாடிகளை உடைப்பது,பணத்தை பறிப்பது உள்ளிட்ட சம்பவங்கள் அப்பகுதியில் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது.இந்த தாக்குதலில் ஈடுபட்ட சமூகவிரோத சக்திகளை உடணடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு இன்டேன் லாரி ஓட்டுநர்கள் சங்கம் கேட்டுகொள்கிறது.
இதே நிலை நீடீத்தால் லாரி ஓட்டுநர்களின் சார்பில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.இவ்வாறு  வில்லியனுhர் காவல்நிலைய ஆய்வாளருக்கு அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரி,அக்-10
சிஐடியு  மினிலோடு கேரியர் சங்கத்தின் புதிய கிளை உதயம்.
புதுச்சேரி தவளகுப்பத்தில் சிஐடியு புதுச்சேரி பிரதேச  மினிலோடு கேரியர் சங்க புதிய பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.சங்கத்தின் கிளைத்தலைவர் ரவி தலைமை தாங்கினார்.கிளைசெயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார்.சங்கத்தின் கொடியை சிஐடியு மாவட்ட செயலாளர் கே.முருகன் ஏற்றிவைத்தார்.சிஐடியு ஆட்டோ சங்க கவுரவத்தலைவர் தா.முருகன் சங்கத்தின் புதிய பெயர்பலகையை திறந்து வைத்து பேசினார்.மினிலோடு கேரியர் சங்கத்தின் பிரதேச செயலாளர் மதிவாணன்,சிஐடியு மாவட்ட பொருளாளர் மது,ஆட்டோ சங்க நிர்வாகிகள் சீனிவாசன்,சேகர் மற்றும் மாகலிங்கம்,சுதாகர்,ரவிந்தர்,விஸ்வநாதன் உள்ளிட்ட திரளான மினிலோடு கேரியர் ஓட்டுநர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.
Read more...
Saturday, October 6, 2012

ஈரான், ஆப்கானில் போருக்காக அமெரிக்கா செலவு செய்த பணத்தை உலகநாடுகள் வறுமையைப் போக்க 14 முறை செலவிடலாம்

0 comments
 
புதுச்சேரி, அக். 5-

ஈரான், ஆப்கானிஸ்தா னில் அமெரிக்கா போருக் காக செலவு செய்த பணத்தை உலக நாடுகளின் வறுமை யைப் போக்க 14 முறை செல விட்டிருக்கலாம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப் பினர் சீத்தாராம்யெச்சூரி எம்.பி பேசினார்.அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழக சர்வ தேசிய மாநாடு புதுச்சேரி யில் வெள்ளியன்று (அக். 5) துவங்கியது. கம்பன் கலை யரங்கத்தில் நடந்த இந்த மாநாட்டுக்கு வரவேற்பு குழுத் துணைத் தலைவர் லட் சுமிநாராயணன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். அமைப்புக்குழு பொதுசெய லாளர் நாரா.கலைநாதன் வரவேற்றார். புதுச்சேரி முதல்வரும், அமைப்புக் குழு தலைவருமான என். ரங்க சாமி மாநாட்டை துவக்கி வைத்தார்.மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம்யெச்சூரி எம்.பி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது:இந்த மாநாடு புதுச்சேரி யில் நடைபெறுவது இக்கால கட்டத்தில் உகந்ததாக உள்ளது. புதுச்சேரி முதல் வரே மாநாட்டில் பங்கேற்று வழிநடத்துவது வரவேற்கத் தக்கது. இந்த அமைப்பு ஏதோ ஒருகுடையின் கீழ் உள்ள அமைப்பல்ல. இந்த நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளும் இந்த அமைப் பில் அங்கமாக உள்ளன. இது வானவில் போன்ற அமைப்பாகும். இன்றைக்கு உலகில் அனைத்து நாடுகளி லும் போர் பதற்றங்கள் உரு வாவதற்கு அமெரிக்காவே காரணம். இந்த 21 ஆம் நூற் றாண்டு அமெரிக்க ஏகாதி பத்திய நூற்றாண்டாக தான் விளங்குகிறது. அமெரிக்கா தனது பட்ஜெட்டில் 41 விழுக்காடு தொகையை ராணுவத்திற்கு செலவு செய்கிறது. ஈரான், ஆப்கானிஸ் தான் நாடுகளில் அமெரிக்க ராணுவம் செலவு செய்த தொகை மட்டும் ஆறு டிரில்லியன் டாலர் தொகையாகும். இந்த தொகையை வைத்து உலக நாடுகளில் உள்ள மக்களின் வறுமையை ஒழிப்பதற்கு 14 முறை செலவு செய்யமுடியும். உலக நாடுகளில் உள்ள எண்ணெய் வளம், எரிவாயு உள்ளிட்ட இயற்கை வளங் களை கபளீகரம் செய்வ தற்கு அமெரிக்க ஏகாதிபத் தியத்தின் தலையீடு இன் றைய கால கட்டத்தில் அதி கரித்துள்ளது. அதன் ஒரு பகுதியாகவே லிபியா, சிரியா உள்ளிட்ட நாடுகள் மீதான தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

இதற் கெல்லாம் ஒரு முடிவை தீர் மானிக்ககூடிய வகையில் இந்த மாநாட்டின் முடிவு கள் அமைய வேண்டும்.இவ்வாறு அவர் பேசி னார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலா ளர் டி.ராஜா எம்.பி. பேசுகை யில், எந்த ஒரு பிரச்சனை களுக்கும் ராணுவத்தின் மூலம் தீர்வு காண முடி யாது. உலகம் முழுவதும் அமைதி திகழ வேண்டும் என்பது தான் இந்த மாநாட் டின் நோக்கமாகும் என்றார்.புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி பேசுகையில், சிரியா மாநிலமான புதுச் சேரி அமைதியை விரும்பக் கூடியது. தொழிலாளர் களுக்கு எட்டு மணிநேர வேலை உரிமை கேட்டு போராடிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுப்பையா வும், பாரதியாரும், பாரதி தாசன், அரவிந்தர் ஆகியோர் வாழ்ந்த இடம். மனித நேயத் தோடும் நட்டுபுறவோடும், சகோதரத்துவத் தோடும் வாழவேண்டும். அத்தகைய நிலையை இந்த உலகத்திற்கு ஏற்படுத்த இந்த மாநாடு வழிவகுக்க வேண்டும் என்றார்.

பரூன்முகர்ஜி எம்.பி, சிபிஎம் மத்தியக்குழு உறுப் பினர் நிலோத்பல்பாசு மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பல்லப்சென் குப்தா, யாதவ் ரெட்டி, புதுச் சேரி சபாநாயகர் சபாபதி, அமைச்சர்கள் மற்றும் தமிழகம், ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களில் இருந்து வருகை தந்த 300 பிரதிநிதிகளும், கியூபா, வியட்நாம், கிரீஸ், பங்களாதேஷ், தென்ஆப் பிரிக்க, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளின் பிரதிநிதி களும் இம்மாநாட்டில் பங் கேற்றுள்ளனர். தொடர்ந்து சனிக்கிழமை நடைபெறும் இம்மாநாடு ஞாயிறன்று (அக். 7) முடிவடைகிறதுதமிழகத்தில் இருந்து இந்த மாநாட்டில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப் பினர்கள் கே.பாலகிருஷ் ணன் எம்எல்ஏ, என்.குண சேகரன், புதுவை பிரதேச செயலாளர் வி.பெருமாள், பிரதேச செயற்குழு உறுப் பினர் தா.முருகன் உள்ளிட் டோர் பங்கேற்றுள்ளனர்
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com