Pages

ShareThis

Powered by Blogger.
 
Saturday, October 6, 2012

ஈரான், ஆப்கானில் போருக்காக அமெரிக்கா செலவு செய்த பணத்தை உலகநாடுகள் வறுமையைப் போக்க 14 முறை செலவிடலாம்

0 comments
 
புதுச்சேரி, அக். 5-

ஈரான், ஆப்கானிஸ்தா னில் அமெரிக்கா போருக் காக செலவு செய்த பணத்தை உலக நாடுகளின் வறுமை யைப் போக்க 14 முறை செல விட்டிருக்கலாம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப் பினர் சீத்தாராம்யெச்சூரி எம்.பி பேசினார்.அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழக சர்வ தேசிய மாநாடு புதுச்சேரி யில் வெள்ளியன்று (அக். 5) துவங்கியது. கம்பன் கலை யரங்கத்தில் நடந்த இந்த மாநாட்டுக்கு வரவேற்பு குழுத் துணைத் தலைவர் லட் சுமிநாராயணன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். அமைப்புக்குழு பொதுசெய லாளர் நாரா.கலைநாதன் வரவேற்றார். புதுச்சேரி முதல்வரும், அமைப்புக் குழு தலைவருமான என். ரங்க சாமி மாநாட்டை துவக்கி வைத்தார்.மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம்யெச்சூரி எம்.பி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது:இந்த மாநாடு புதுச்சேரி யில் நடைபெறுவது இக்கால கட்டத்தில் உகந்ததாக உள்ளது. புதுச்சேரி முதல் வரே மாநாட்டில் பங்கேற்று வழிநடத்துவது வரவேற்கத் தக்கது. இந்த அமைப்பு ஏதோ ஒருகுடையின் கீழ் உள்ள அமைப்பல்ல. இந்த நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளும் இந்த அமைப் பில் அங்கமாக உள்ளன. இது வானவில் போன்ற அமைப்பாகும். இன்றைக்கு உலகில் அனைத்து நாடுகளி லும் போர் பதற்றங்கள் உரு வாவதற்கு அமெரிக்காவே காரணம். இந்த 21 ஆம் நூற் றாண்டு அமெரிக்க ஏகாதி பத்திய நூற்றாண்டாக தான் விளங்குகிறது. அமெரிக்கா தனது பட்ஜெட்டில் 41 விழுக்காடு தொகையை ராணுவத்திற்கு செலவு செய்கிறது. ஈரான், ஆப்கானிஸ் தான் நாடுகளில் அமெரிக்க ராணுவம் செலவு செய்த தொகை மட்டும் ஆறு டிரில்லியன் டாலர் தொகையாகும். இந்த தொகையை வைத்து உலக நாடுகளில் உள்ள மக்களின் வறுமையை ஒழிப்பதற்கு 14 முறை செலவு செய்யமுடியும். உலக நாடுகளில் உள்ள எண்ணெய் வளம், எரிவாயு உள்ளிட்ட இயற்கை வளங் களை கபளீகரம் செய்வ தற்கு அமெரிக்க ஏகாதிபத் தியத்தின் தலையீடு இன் றைய கால கட்டத்தில் அதி கரித்துள்ளது. அதன் ஒரு பகுதியாகவே லிபியா, சிரியா உள்ளிட்ட நாடுகள் மீதான தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

இதற் கெல்லாம் ஒரு முடிவை தீர் மானிக்ககூடிய வகையில் இந்த மாநாட்டின் முடிவு கள் அமைய வேண்டும்.இவ்வாறு அவர் பேசி னார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலா ளர் டி.ராஜா எம்.பி. பேசுகை யில், எந்த ஒரு பிரச்சனை களுக்கும் ராணுவத்தின் மூலம் தீர்வு காண முடி யாது. உலகம் முழுவதும் அமைதி திகழ வேண்டும் என்பது தான் இந்த மாநாட் டின் நோக்கமாகும் என்றார்.புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி பேசுகையில், சிரியா மாநிலமான புதுச் சேரி அமைதியை விரும்பக் கூடியது. தொழிலாளர் களுக்கு எட்டு மணிநேர வேலை உரிமை கேட்டு போராடிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுப்பையா வும், பாரதியாரும், பாரதி தாசன், அரவிந்தர் ஆகியோர் வாழ்ந்த இடம். மனித நேயத் தோடும் நட்டுபுறவோடும், சகோதரத்துவத் தோடும் வாழவேண்டும். அத்தகைய நிலையை இந்த உலகத்திற்கு ஏற்படுத்த இந்த மாநாடு வழிவகுக்க வேண்டும் என்றார்.

பரூன்முகர்ஜி எம்.பி, சிபிஎம் மத்தியக்குழு உறுப் பினர் நிலோத்பல்பாசு மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பல்லப்சென் குப்தா, யாதவ் ரெட்டி, புதுச் சேரி சபாநாயகர் சபாபதி, அமைச்சர்கள் மற்றும் தமிழகம், ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களில் இருந்து வருகை தந்த 300 பிரதிநிதிகளும், கியூபா, வியட்நாம், கிரீஸ், பங்களாதேஷ், தென்ஆப் பிரிக்க, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளின் பிரதிநிதி களும் இம்மாநாட்டில் பங் கேற்றுள்ளனர். தொடர்ந்து சனிக்கிழமை நடைபெறும் இம்மாநாடு ஞாயிறன்று (அக். 7) முடிவடைகிறதுதமிழகத்தில் இருந்து இந்த மாநாட்டில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப் பினர்கள் கே.பாலகிருஷ் ணன் எம்எல்ஏ, என்.குண சேகரன், புதுவை பிரதேச செயலாளர் வி.பெருமாள், பிரதேச செயற்குழு உறுப் பினர் தா.முருகன் உள்ளிட் டோர் பங்கேற்றுள்ளனர்

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com