ஜிப்மர் மருத்துவமனைக்கான செவிலியர்கள் தேர்வில் நடந்துள்ள மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சியாளர்களின் நவீன தாராளமயக் கொள்கையால் ஊழல் முறைகேடுகள் அதிகரித்துள்ளது. புதிய புதிய ஊழல்களும், முறைகேடுகளும் தொடர்ந்து அணிவகுத்து நிற்கிறது. இந்த வரிசையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனை நிர்வாகத்தின் செவிலியர்கள் தேர்வில் நவீன மோசடியும் அணிவகுத்துள்ளது.
ஜிப்மர் மருத்துமனைக்காக 465 செவிலியர் பணியிடங்களுக்கு புதுச்சேரி, சென்னை, திருச்சி, திருவனந்தபுரம் ஆகிய மையங்களில் தேர்வு நடந்தது. 15996 பேர் தேர்வு எழுதினார்கள். 463 பேர் செவிலியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டவர்களில் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து 100 பேரும், புதுச்சேரியில் (காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட) 33 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் திருவனந்தபுரம் மையத்தில் இருந்து மட்டும் 330 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
மேலும் ஜிப்மர் epu;thf அலுவலர் உண்ணிக்கிருஷ்ணன் மேற்பார்வையில் நடந்த மையத்தில் இருந்து கணிசமானவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இந்த தேர்வில் விதிமுறைகளும், நடைமுறைகளும் மீறப்பட்டுள்ளது. தேர்வு நடத்திய அலுவலர்களும், ஜிப்மர் நிர்வாகமும் சேர்ந்து கூட்டாக முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதற்கான, பலகோடி ரூபாய் பணம் கைமாறியுள்ளதற்கான வலுவான முகாந்திரம் உள்ளது. ஆகவே, செவிலியர் நியமன பணித்தேர்வு குறித்து உயர்மட்ட நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
ஜிப்மர் தன்னாட்சி மசோதா 2006 சட்டமாக நிறைவேற்றுகிற போது நடைமுறையில் இருந்துவருகிற இலவச மருத்துவசேவை, இலவச மருத்துவக்கல்வி, புதுச்சேரி இளைஞர்களுக்கு B, C மற்றும் D பிரிவு பணியிடங்களில் புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதியம் ஆகியவை தொடரும் என நாடாளுமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அனைத்தையும் ஜிப்மர் நிர்வாகம் மறுத்துவருகிறது. இது புதுச்சேரி மாநில மக்களுக்கும், ஊழியர்களுக்கும் இழைக்கப்படும் நம்பிக்கைத் துரோகமாகும்.
ஆகவே, மத்திய அரசு இப்பிரச்சனையில் உடன் தலையிட்டு செவிலியர்கள் நியமனத் தேர்வில் நடந்துள்ள மிகப்பெரும் மோசடி – கூட்டுச்சதி குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதுவரையில் செவிலியர் பணிநியமனத்தை நிறுத்திitf;f வேண்டும் vd khu;f;rp];l; fl;rp Nfl;Lf;nfhs;fpd;wJ. மேலும் ஜிப்மரில் B, C மற்றும் D பிரிவு காலிப் பணியிடங்களுக்கு புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை mspj;J epug;g வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இக்கோரிக்கையை முன்வைத்து 27.09.2013ல் ஜிப்மர் மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடவும் மார்க்சிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது. இவ்வியக்கத்தில் அனைத்துப் பகுதி மக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுகிறோம்.
,tz;
nt.ngUkhs;
gpuNjr nrayhsu;