புதுச்சேரி,செப்-23
விளை நிலங்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று புதுச்சேரி அரசை விவசாயிகள் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச 11வது மாநாடு, பாகூரில் உள்ள தோழர்.என்.வி நினைவரங்கத்தில் (தர்மராஜா திருமண நிலையத்தில்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இம்மாநாட்டின் கொடியை சங்கத்தின் பிரதேசக்குழு உறுப்பினர் கோ.இராமசாமி ஏற்றிவைத்தார்.கொம்யூன் குழு செயலாளர் த.முத்துலிங்கம் பிரதிநிதிகளை வரவேற்றார். சங்கத்தின் பிரதேச தலைவர் வே.கு.நிலவழகன் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்.விவசாயிகள் சங்கத்தின் தமிழ்மாநில பொருளாளர் ஏ.நாகப்பன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,கொம்யூன் குழு செயலாளர் தமிழ்ச்செல்வன்,வி.தொ.ச வின் பிரதேச செயலாளர் மணிபாலன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார்கள்.சங்கத்தின் பிரதேச செயலாளர் பத்மநாபன் வேலை அறிக்கை தாக்கல் செய்தார்.வரவு செலவு அறிக்கையை பொருளாளர் சரவணன் வாசித்தார்.அதனை தொடர்ந்து விவசாயிகள் சங்கத்தின் நாகைமாவட்ட செயலாளர் வி.சுப்புரமணியன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.
புதிய நிர்வாகிகள்
சங்கத்தின் புதிய பிரதேச தலைவராக மீண்டும் வே.கு. நிலவழகன்,செயலாளராக வி. சங்கர்,பொருளாளராக எஸ்.எம்.தமீம் உள்ளிட்ட 15பேர் கொண்ட புதிய பிரதேசக்குழு தேர்வு செய்யப்பட்டது.
தீர்மாணங்கள்
காரைக்காலுக்குரிய காவிரி நீரைப்பெற மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள காரைக்கால் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக இந்த ஆண்டு அறிவித்து ஏக்கருக்கு ரூ.10ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும்.அதேபோல் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு தலா 10ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3500 வழங்க வேண்டும்.எல்.ஆர்.கூட்டுறவு சர்கக்கரை ஆலை வழங்க வேண்டிய பாக்கி தொகை ரூ.45கோடியை விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும். பால்கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.25 வழங்க வேண்டும்.மாட்டு தீவனம் மாண்ய விலையிலும்,உரம் பூச்சி கொள்ளி மருந்துகளை உரிய காலத்தில் தட்டுபாடின்றி கிடைக்கவும்,மானியத்துடனும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.
விளை நிலங்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று புதுச்சேரி அரசை விவசாயிகள் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச 11வது மாநாடு, பாகூரில் உள்ள தோழர்.என்.வி நினைவரங்கத்தில் (தர்மராஜா திருமண நிலையத்தில்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இம்மாநாட்டின் கொடியை சங்கத்தின் பிரதேசக்குழு உறுப்பினர் கோ.இராமசாமி ஏற்றிவைத்தார்.கொம்யூன் குழு செயலாளர் த.முத்துலிங்கம் பிரதிநிதிகளை வரவேற்றார். சங்கத்தின் பிரதேச தலைவர் வே.கு.நிலவழகன் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்.விவசாயிகள் சங்கத்தின் தமிழ்மாநில பொருளாளர் ஏ.நாகப்பன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,கொம்யூன் குழு செயலாளர் தமிழ்ச்செல்வன்,வி.தொ.ச வின் பிரதேச செயலாளர் மணிபாலன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார்கள்.சங்கத்தின் பிரதேச செயலாளர் பத்மநாபன் வேலை அறிக்கை தாக்கல் செய்தார்.வரவு செலவு அறிக்கையை பொருளாளர் சரவணன் வாசித்தார்.அதனை தொடர்ந்து விவசாயிகள் சங்கத்தின் நாகைமாவட்ட செயலாளர் வி.சுப்புரமணியன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.
புதிய நிர்வாகிகள்
சங்கத்தின் புதிய பிரதேச தலைவராக மீண்டும் வே.கு. நிலவழகன்,செயலாளராக வி. சங்கர்,பொருளாளராக எஸ்.எம்.தமீம் உள்ளிட்ட 15பேர் கொண்ட புதிய பிரதேசக்குழு தேர்வு செய்யப்பட்டது.
தீர்மாணங்கள்
காரைக்காலுக்குரிய காவிரி நீரைப்பெற மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள காரைக்கால் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக இந்த ஆண்டு அறிவித்து ஏக்கருக்கு ரூ.10ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும்.அதேபோல் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு தலா 10ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3500 வழங்க வேண்டும்.எல்.ஆர்.கூட்டுறவு சர்கக்கரை ஆலை வழங்க வேண்டிய பாக்கி தொகை ரூ.45கோடியை விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும். பால்கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.25 வழங்க வேண்டும்.மாட்டு தீவனம் மாண்ய விலையிலும்,உரம் பூச்சி கொள்ளி மருந்துகளை உரிய காலத்தில் தட்டுபாடின்றி கிடைக்கவும்,மானியத்துடனும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.
