புதுச்சேரி பிப் 3
தலித், பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையம் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என்று மார்க்சி°ட் கட்சியின் மாநில செயலாளர்ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதார மைய கட்டிடத் திறப்பு விழா லா°பேட்டை ஈ.சி.ஆர் சாலையில் நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு சிபிஎம் பிரதேச செயலாளர் பெருமாள் தலைமைத் தாங்கினார். மையத்தின் ஒருங்கிணைப்பாளர் எ°. ராமச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். சிபிஎம் தமிழ்மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தும், கணினி பயிற்சி மையத்தை துவக்கி வைத்து பேசுகையில், ஆலை முதலாளிகள், பன்னாட்டு தொழில் அதிபர்கள் நாங்கள் சேவை செய்கிறோம் என்று சொல்லி, தொழிலாளர்களின் உழைப்பை ஒருபுறத்தில் சுரண்டியும், மறுபுறத்தில், தொண்டு நிறுவனங்களை துவக்கி வருவதுதான் இன்றைக்கு இந்தியாவில் நடந்து கொண்டு இருக்கின்றது. இதற்கு மாறாகவும் ஒடுக்கப்பட்ட தலித், மீனவர்கள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் கல்வி, வேலை உள்ளடக்கிய எதிர்கால அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு நம்முன் உள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற மையங்களை துவங்குவதற்கு புதுச்சேரி விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையம் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
என். குணசேகரன்
தமிழ்நாடு மக்கள் வாழ்வுரிமை அறக்கட்டளையின் தலைவர் என். குணசேகரன் பேசுகையில், தாழ்த்தப்பட்ட, சமூக ரீதியாக பின்தங்கியவர்களை மேம்படுத்துவதற்காக, இம்மையம் துவங்கப்பட்டுள்ளது. தர்மபுரி அரூர் பகுதி தீர்த்த மலையில் இதுபோன்ற மையம் துவங்கப்பட்டு. 1000க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களுக்கு இலவச கணினி பயிற்சி மையத்தை நடத்தி வருகிறோம். வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தவர்களை திறமைப்பெற்றவர்களாகவும், தனித்துவம் பெற்றவர்களாக மாற்றுவதே இம்மையத்தின் நோக்கமாக அமையவேண்டும். அரசியல் சார்பற்றவையாக இந்த விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதார மையம் செயல்படும் என்று பேசினார். இவ்விழாவில் சமூக நல தொடக்க கல்வி இயக்கத்தின் நிறுவனர் ஆஸீய° தாம°, எல்ஐசி புதுவை முதன்மை மேலாளர் உத்தராபதி, தெரசா மருத்துவ மையத்தின் மருத்துவர். ஈவ் பீஷ், சூழலியல் மற்றும் ஊரக வளர்ச்சி மைய அதிகாரி ரகுநாத், இம்மைய அறக்கட்டளையின் நிர்வாகிகள் ராஜாங்கம், நிலவழகன், தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் தலைவர். ராமசாமி, சிஐடியூ மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் நடராசன், ஆர். எம். ராம்ஜி, கொளஞ்சியப்பன் உள்ளிட்ட திரளானோர் இவ்விழாவில் பங்கேற்றனர். இவ்விழவில் திரளானோர் கலந்து கொண்டனர்.