Pages

ShareThis

Powered by Blogger.
 
Tuesday, February 22, 2011

பால் உற்பத்தியாளர் ஆர்ப்பாட்டம்

0 comments

புதுச்சேரி பிப் 12
அரசு மருத்துவமனை பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்காத காங்கிர° அரசைக் கண்டித்து மார்க்சி°ட் கட்சி சார்பில் புதுவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு குறைந்த விலையில் கோதுமை தவிடு உள்ளிட்ட தீவினங்களை அரசு நிறுவனங்கள் மூலம் குறைந்த விலையில் வழங்க வேண்டும். புதுச்சேரி அரசு அறிவித்த பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு லிட்டருக்கு ரூ. 2.50 மானியம் வழங்க வேண்டும். பால் தட்டுப்பாட்டை போக்கி, தரமான பால் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைப்பெற்றது. காந்தி வீதியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகர கமிட்டி செயலாளர் சீனுவாசன் தலைமை தாங்கினார். சிபிஎம் தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், ராமச்சந்திரன், உழவர்கரை நகர செயலாளர் லெனின்துரை, பிரதேசக்குழு உறுப்பினர் பிரபுராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இப்போராட்டத்தில் திரளான பால் உற்பத்தியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com