
புதுச்சேரி,டிச-9
பெறுகியுள்ள வன்முறை சீரழிவுகளை தடுக்ககோரி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவல்துறை பாதுகாப்பில் இருந்த இளம் பெண் காணாமல் போன சம்பவத்திற்கு காரணமான வர்களை கைது செய்ய வேண்டும் .இவ்வழக்கு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். இளம் பெண்ணை பாலியலுக்கு உட்படுத்திய சம்பவத்தில் ஜி தங்கும் விடுதியின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும். இரவு நேரக் சலையோர டிபன் கடைகளை இரவு ஒரு மணிவரை நடத்திவதற்கு அனுமதிக்க வேண்டும்.புதுச்சேரியில் அதிகரித்துள்ள கொலை,கொள்ளைகளை தடுக்கதவரிய காவல்துறையை கண்டித்தும்,சட்டம் ஒழுங்கு பிரச்சனைகுறித்து அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக முதல்வர் கூட்ட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
நேருவீதி காந்திவீதி சந்திப்பில் நடந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நகரகமிட்டி செயலாளர் என்.பிரபுராஜ் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் ஆர்பாட்டத்தை துவக்கி வைத்த பேசினார்.இருதியாக போராட்டத்தை முடித்து வைத்து மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் பேசினார்.இப்போராட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,ராமச்சந்திரன்,நிலவழகன்,கலிவரதன்,சுமதி,ராமசாமி,முருகன் இடைகமிட்டி செயலாளர்கள் லெனின்துரை,தமிழ்செல்வன்,சரவணன்,முருகையன், உள்ளிட்ட பிரதேசக்குழு ,இடைகமிட்டி உறுப்பினர்கள்,மாதர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி டிச-9
ஜிப்மர் மருத்துவனையின் புதிய இயக்குநராக டாக்டர். ரவிக்குமார் பொறுப்பேற்று கொண்டார்.புதுச்சேரி கோரிமேட்டில் தன்வந்திரி நகரில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவமனை மத்திய சுகாதாரதுறையின் கீழ் இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையின் இயக்குநராக இருந்த டாக்டர்.சுப்பாராவ் ஓய்வு பெற்றதை தொடர்ந்து டாக்டர்.ரவிக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் நியூயார்க்கிலுள்ள ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் மருத்துவகல்லுhரியில் பணிபுர்ந்தவர்.மருத்துவத்துறையில் பல்வேறு புத்தகங்களை எழுதி விருதுகளை பெற்றுள்ளார்.புதனன்று (டிச-7) டாக்டர்.ரவிக்குமார் ஜிப்மர் இயக்குநராக பொறுப்பேற்று கொண்டார்.இவர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.