
புதுச்சேரி,டிச-18
உடல் உழைப்போர் சங்கத்தின் புதிய பெயர்பலகை திறப்பு விழா புதுச்சேரியில் நடைபெற்றது.
புதுச்சேரி பிரதேச உடல் உழைப்போர் சங்கம் சிஜடியு- வின் புதிய பெயர்பலகை திறப்பு விழா காந்திவீதி, முத்துமாரியம்மன் கோவில்வீதி சந்திப்பில் நடைபெற்றது.சங்கத்தின் பொருளாளர் கே.குமார் தலைமையில் நடந்த இவ்விழாவில் சங்கத்தின் கொடியை மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் ஏற்றிவைத்து பேசினார்.புதிய பெயர்பலகையை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலகுழு உறுப்பினர் தா.முருகன் திறந்து வைத்தார்.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகிலஇந்திய பொதுச்செயலாளர் சுதாசுந்தரராமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.சிஜடியு மாவட்ட துணைத்தலைவர் ராஜாங்கம்,ஆட்டோ சங்க நிர்வாகிகள் மணவாளன்,மாதிவானன்,சிபிஎம் நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.சங்க செயலாளர் ராமசாமி,நிர்வாகிகள் நாகமாணிக்கம்,சாதிக்பாஷா,சபாபதி,பாலையா,சரவணன்,பஸ்கர்,சங்கர்,மாலா உள்ளிட்ட திரளானோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.முன்னதாக சங்கத்தின் அடையாள அட்டையும் இவ்விழாவில் வழங்கப்பட்டது.