Pages

ShareThis

Powered by Blogger.
 
Saturday, August 25, 2012

ஊழல் செய்துள்ள கிரிமினல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி

0 comments
புதுச்சேரி,ஆக-24
ஊழல் செய்துள்ள கிரிமினல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் நடைபயண பிரச்சாரம் நடைபெற்றது.ரொஷன் கடைகளில் ஒற்றை அவியல் அரிசியை உடனே வழங்க வேண்டும்.அத்தியாவசிய உணவு பண்டங்களை தங்குதடையின்றி வழங்கவேண்டும்.பேருந்து கட்டணம்,பால் கட்டணம்,மின்கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும்.மண்ணனென்னைக்கு பதில் பணம் தரும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்.இயற்கை வளங்களில் ஊழல் செய்துள்ள கிரிமினல் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிiக்கைகளை வலியுறுத்தி இப்பிரச்சாரம் நடைபெற்றது.புதுச்சேரி மதகடிப்பட்டில் நடைபெற்ற நடைபயண பிரச்சாரத்திற்கு சிபிஎம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார்.செயற்குழு உறுப்பினர் எல்.கலிவரதன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் உலகநாதன்,ஆவணியப்பன்,சங்கர்,உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் உட்பட திரளானோர் இப்பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.இப்பிரச்சாரத்தில் மத்திய அரசின் ஊழல்களை அப்பலபடுத்தியும் பேசினார்கள்.மண்ணாடிப்பட்டு கொம்யூன் முழுவதும் இப்பிரச்சாரம் சனிக்கிழமையும் நடைபெறுகிறது.
Read more...
Tuesday, August 21, 2012

ஜிப்மரில் கட்டணம் வசூலிப்பதை ஏற்று கொள்ளமுடியாது

0 comments
புதுச்சேரி,தமிழகம்,கேரளம்,ஆந்திரம்,கர்நாடகம் உள்ளிட்ட தென் இந்தியாவிலிருந்து நாள்தோறும் ஐந்தாயிரம் ஏழை எளிய மக்கள் இலவசமாக  ஜிப்மரில் மருத்துவம் பெற்று செல்கின்றனர்.  டெல்லியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும்  7மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதே மத்திய சுகாதாரத்துறை கட்டுபாட்டில் உள்ள ஜிப்மரில் மட்டும் கட்டணம் வசூலிப்பதை ஏற்று கொள்ளமுடியாது. எனவே நாடளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜிப்மர் தன்னாட்சி மசோதாவில்  இலவச மருத்துவம் தொடரும் என்ற உறுதிமொழியை  மீறுவதாக உள்ளது.  எனவே ஜிப்மரின் கட்டண வசூல் சுற்றறிக்கை உடனே திரும்ப பெற வேண்டும்.  50 ஆண்டுகளாக தொடர்ந்து அளிக்கப்படும் இலவச சிகிச்கை தொடரவேண்டும்.  காலியாக உள்ள ஆயிரத்தி 800 காலி பணியிடங்களில் பி,சி பிரிவுகளை  புதுச்சேரி வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துள்ள இளைஞர்களை கொண்டு நிரப்ப வேண்டும்.குறைந்த கட்டணத்தில் மருத்துவ கல்வி தொடர வேண்டும்.
Read more...
Wednesday, August 15, 2012

மறியல் போராட்டம்

0 comments
புதுச்சேரி,ஆக-3
உணவு பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த கோரி இடதுசாரிகட்சிகள் சார்பில் புதுச்சேரியில் ஏழு மையங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வரும் உணவு பாதுகாப்பு மசோதாவில் உரிய  திருத்தங்களுடன் மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும்.புதுச்சேரிக்கு வழங்க வேண்டிய அரிசி,கோதுமை,மண்ணெண்ணைய் அளவை குறைப்பதை கைவிட வேண்டும்.புதுச்சேரி அரசு இலவச அரிசி திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி,அத்தியாவசிய பண்டங்களை ரேஷன் கடைகளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மறியல்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமை பொருள் வழங்கும் துறை முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஐ தேசிக்குழு உறுப்பினர் நாhரா.கலைநாதன்,சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் முத்து ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.சிபிஎம் செயற்குழு உறுப்பினர் தா.முருகன்,நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் நடராஜன்,மதிவாணன்,சிபிஐ நிர்வாகிகள் சலீம்,சேதுசெல்வம் உள்ளிட்ட 20பெண்கள் உட்பட 300பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.முன்னதாக காவல்துறையினரின் தடையை மீறி அலுவலகம் எதிரில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருக்கனுhர்
திருக்கனுhர் பிஎ°என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஐ மாநில செயலாளர் ஆர்.விசுவநாதன்,சிபிஎம் செயற்குழு உறுப்பினர் கே.முருகன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.சிபிஎம் கொம்யூன் செயலாளர் சரவணன்,பிரதேசக்குழு உறுப்பினர் அன்புமணி,சிபிஐ தொகுதி செயலாளர் அருள் உள்ளிட்ட 30பெண்கள் உட்பட 102பேர்களை காவல்துறையினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவித்தனர்.
அரியாங்குப்பம்
அரியாங்குப்பம் கடலுhர் சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜாங்கம்,சிபிஐ நிர்வாகக்குழு உறுப்பினர் அபிஷேகம்,பார்வர்டு கட்சி நிர்வாகி தர்மராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.சிஐடியு இணை செயலாளர் சிவக்குமார்,ஜெகதீசன்,சிபிஐ நிர்வாகிகள் பூபதி,ஏழுமலை உள்ளிட்ட மறியலில் ஈடுபட்ட 50 பேர்கள் கைது செய்யப்பட்டனர்.
பாகூர்
பாகூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிபிஎம்செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,சிபிஐ நிர்வாகக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்.சிபிஎம் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன்,சிபிஜ நிர்வாகிகள் கலியமூர்த்தி,மாசிலாமணி உள்ளிட்ட 50 பெண்கள் உட்பட 98பேர்களை காவல்துறை கைது செய்தனர்.
வில்லியனுhர்
வில்லியனுhர் தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,சிபிஐ நிர்வாகக்குழு உறுப்பினர் கீதநாதன் ஆகியயோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.சிபிஎம் கொம்யூன் செயலாளர் முருகையன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் மணிபாலன்,தெய்வானை,சிபிஜ தொகுதி நிர்வாகிகள் அந்தோனி,பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 65 பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்டார் கோவில்
திருவண்டார் கோவில் மத்திய உணவு கிடங்கு முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஎம் செயற்குழு உறுப்பினர் கலிவரதன்,சிபிஐ நிர்வாகக்குழு உறுப்பினர் சரளா ஆகியோர் கூட்டாக  தலைமை தாங்கினார்கள்.சிபிஎம் பிரதேசக்குழு உறுப்பினர்கள் உலகநாதன்,ஆவணியப்பன்,சங்கர்,சிபிஐ நிர்வாகி டி.பி.ரவி உள்ளிட்ட 15 பெண்கள் உட்பட 65 பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
காரைக்கால்
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் வட்டசெயலாளர் வின்சென்ட்,சிபிஐ காரைபிரதேச செயலாளர் ராஜேந்திரன் கூட்டாக தலைமை தாங்கினர்.சிபிஎம் பிரதேசக்குழு உறுப்பினர் கலியபெருமாள்,இராமர்,சிபிஐ நிர்வாகிகள் தங்கராசு,முரளி உள்ளிட்ட 100பெண்கள் உட்பட 190 பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுச்சேரி முழுவதும் ஏழு மையங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Read more...

CPIM Demonstration

0 comments
CPIM Demonstration in front of Ariyankuppam commune office for basic facility development.
Read more...
Wednesday, August 8, 2012

தனியார் மருத்துவமனை நிறுவனங்கள் கொள்ளை இலாபம் பெற்றிட வழிவகுக்கும் – ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க மறுக்கும் ஜிப்மர் நிர்வாகத்தின் கட்டண உயர்வை அறிவிப்பைத் ரத்து செய்திடுக

0 comments

பத்திரிகைச் செய்தி

தனியார் மருத்துவமனை நிறுவனங்கள் கொள்ளை இலாபம் பெற்றிட வழிவகுக்கும் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க மறுக்கும் ஜிப்மர் நிர்வாகத்தின் கட்டண உயர்வை அறிவிப்பைத் ரத்து செய்திடுக

        1956ல் துவங்கப்பட்ட ஜிப்மர் மருத்துவமனை அனைத்துப் பகுதி மக்களுக்கு தரமான, கட்டணம் இல்லாத மருத்துவ சேவையினை செய்து வந்தது. புதுச்சேரி மற்றும் தமிழக மக்களுக்கு உயிர்காக்கும் மருத்துவமனையாக இயங்கிவருகிறது. இதில் பணியாற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள் பங்களிப்பும் மகத்தானதாகும். மேலும் ஜிப்மர் மருத்துவ கல்லூரி மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களையும் உருவாக்கி நாட்டிற்கு அர்ப்பணித்து வருகிறது.

      முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்மர் மருத்துவமனையை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனையாக மாற்றப் போகிறோம் என்ற பெயரில் மத்திய ஆட்சியாளர்களால் சட்டம் இயற்றப்பட்டது. புதுச்சேரி ஜிப்மர் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனச் சட்டம் 2008 இயற்றப்பட்டு ஜுலை 14 முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. ஜிப்மர் மருத்துவமனையை தனியார்மயத்திற்கு தள்ளிவிடும் காங்கிரஸ் தலைமையிலான பாமக, திமுக உள்ளிட்ட கூட்டணி ஆட்சியின் நடவடிக்கையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள், ஜிப்மர் ஊழியர்கள் உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்கள் போராட்டக்குழு அமைத்து தொடர்ந்து போராடி வந்தன. மத்திய, மாநில ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்த்த போராட்டமாக ஜிப்மர் மருத்துவமனை பாதுகாப்பு போராட்டம் அமைந்தது. இதன் விளைவாக ஜிப்மர் மருத்துவமனை தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு புதுச்சேரிக்கு வருகை தந்து அனைத்து அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள் மற்றும் மாநில அரசின் கருத்துக்களையும் கேட்டறிந்தது. ஆனாலும் காங்கிரஸ் தலைமையிலான ஜ.மு.கூ அரசும், சுகாதாரத்துறை அமைச்சர் திரு. அன்புமணியும் மக்களின் பெருவாரியான கருத்துகளுக்கு மாறாக சட்டம் இயற்ற முற்பட்டது.

      இலவச மருத்துவ சேவை, இலவச மருத்துவக் கல்வி, வேலைவாய்ப்பில் புதுச்சேரி இளைஞர்களுக்கு முன்னுரிமை மற்றும் ஊழியர் நலன் ஆகிய அம்சங்களை உறுதிப்படுத்திட வலியுறுத்தப்பட்டன. இறுதியாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்தால் நடைமுறையில் இருந்துவருகிற மேற்குறிப்பிட்ட அம்சங்களுக்கு குந்தகம் இல்லாமல் தொடர்ந்து பின்பற்றப்படும் என போராட்டக்குழுவிடம் ஆட்சியாளர்களால் உறுதியளிக்கப்பட்டது. ஜிப்மர் நிர்வாகம் 14.07.2012 தேதியிட்ட சுற்றறிக்கையில் 16.07.2012 முதல் அனைத்துவித நோய் கண்டறிதல், அறுவை சிகிச்சை மற்றும் உணவு கட்டணம் என அனைத்திற்கும் தனியார் நிறுவனத்திற்கு இணையான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மாத வருமான ரூ.2499க்கு மேல் உள்ள அனைவரிடமும் மருத்துவ சேவைக்கான கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜிப்மர் நிர்வாகத்தின் இத்தகைய மக்கள் விரோத கட்டண உயர்வு தனியார் மருத்துவமனைகளை ஊக்கப்படுத்தும் நடவடிக்கையாகும். உயர்த்தியுள்ள மருத்துவ சேவைக்கட்டணத்தை நிர்வாகம் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

{p.t.o }
      மத்திய ஆட்சியாளர்களின் நவீன தாரளமயக் கொள்கையின் அமுலாக்கத்தால் சமூகப் பொறுப்புகளில் இருந்து அரசு தன்னை விடுவித்துக்கொள்கிறது. அதன் ஒரு பகுதியாக சுகாதாரம் காசு பணம் உள்ளவர்களுக்குத்தான் என்ற நிலையை உருவாகியுள்ளது.  இத்தகைய தவறான கொள்கையை கைவிட வேண்டும். இலவச மருத்துவ சேவை, இலவச மருத்துவக் கல்வி, புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, ஊழியர் நலன் ஆகிய முந்தைய நடைமுறை தொடரும் என்று ஜிப்மர் போராட்டக்குழுவிற்கு அளித்த உறுதிமொழியை பின்பற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது. மேலும் மாநில மக்கள், அரசியல் மற்றும் ஜனநாயக சக்திகள் நமது ஜிப்மர் மருத்துவமனையை பாதுகாத்திட ஒன்றுபட்டு போராட முன்வரவேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இவண்


{வெ. பெருமாள்}
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com