புதுச்சேரி,ஆக-24
ஊழல் செய்துள்ள கிரிமினல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் நடைபயண பிரச்சாரம் நடைபெற்றது.ரொஷன் கடைகளில் ஒற்றை அவியல் அரிசியை உடனே வழங்க வேண்டும்.அத்தியாவசிய உணவு பண்டங்களை தங்குதடையின்றி வழங்கவேண்டும்.பேருந்து கட்டணம்,பால் கட்டணம்,மின்கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும்.மண்ணனென்னைக்கு பதில் பணம் தரும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்.இயற்கை வளங்களில் ஊழல் செய்துள்ள கிரிமினல் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிiக்கைகளை வலியுறுத்தி இப்பிரச்சாரம் நடைபெற்றது.புதுச்சேரி மதகடிப்பட்டில் நடைபெற்ற நடைபயண பிரச்சாரத்திற்கு சிபிஎம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார்.செயற்குழு உறுப்பினர் எல்.கலிவரதன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் உலகநாதன்,ஆவணியப்பன்,சங்கர்,உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் உட்பட திரளானோர் இப்பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.இப்பிரச்சாரத்தில் மத்திய அரசின் ஊழல்களை அப்பலபடுத்தியும் பேசினார்கள்.மண்ணாடிப்பட்டு கொம்யூன் முழுவதும் இப்பிரச்சாரம் சனிக்கிழமையும் நடைபெறுகிறது.
ஊழல் செய்துள்ள கிரிமினல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் நடைபயண பிரச்சாரம் நடைபெற்றது.ரொஷன் கடைகளில் ஒற்றை அவியல் அரிசியை உடனே வழங்க வேண்டும்.அத்தியாவசிய உணவு பண்டங்களை தங்குதடையின்றி வழங்கவேண்டும்.பேருந்து கட்டணம்,பால் கட்டணம்,மின்கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும்.மண்ணனென்னைக்கு பதில் பணம் தரும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்.இயற்கை வளங்களில் ஊழல் செய்துள்ள கிரிமினல் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிiக்கைகளை வலியுறுத்தி இப்பிரச்சாரம் நடைபெற்றது.புதுச்சேரி மதகடிப்பட்டில் நடைபெற்ற நடைபயண பிரச்சாரத்திற்கு சிபிஎம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார்.செயற்குழு உறுப்பினர் எல்.கலிவரதன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் உலகநாதன்,ஆவணியப்பன்,சங்கர்,உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் உட்பட திரளானோர் இப்பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.இப்பிரச்சாரத்தில் மத்திய அரசின் ஊழல்களை அப்பலபடுத்தியும் பேசினார்கள்.மண்ணாடிப்பட்டு கொம்யூன் முழுவதும் இப்பிரச்சாரம் சனிக்கிழமையும் நடைபெறுகிறது.
