Pages

ShareThis

Powered by Blogger.
 
Tuesday, August 21, 2012

ஜிப்மரில் கட்டணம் வசூலிப்பதை ஏற்று கொள்ளமுடியாது

0 comments
புதுச்சேரி,தமிழகம்,கேரளம்,ஆந்திரம்,கர்நாடகம் உள்ளிட்ட தென் இந்தியாவிலிருந்து நாள்தோறும் ஐந்தாயிரம் ஏழை எளிய மக்கள் இலவசமாக  ஜிப்மரில் மருத்துவம் பெற்று செல்கின்றனர்.  டெல்லியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும்  7மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதே மத்திய சுகாதாரத்துறை கட்டுபாட்டில் உள்ள ஜிப்மரில் மட்டும் கட்டணம் வசூலிப்பதை ஏற்று கொள்ளமுடியாது. எனவே நாடளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜிப்மர் தன்னாட்சி மசோதாவில்  இலவச மருத்துவம் தொடரும் என்ற உறுதிமொழியை  மீறுவதாக உள்ளது.  எனவே ஜிப்மரின் கட்டண வசூல் சுற்றறிக்கை உடனே திரும்ப பெற வேண்டும்.  50 ஆண்டுகளாக தொடர்ந்து அளிக்கப்படும் இலவச சிகிச்கை தொடரவேண்டும்.  காலியாக உள்ள ஆயிரத்தி 800 காலி பணியிடங்களில் பி,சி பிரிவுகளை  புதுச்சேரி வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துள்ள இளைஞர்களை கொண்டு நிரப்ப வேண்டும்.குறைந்த கட்டணத்தில் மருத்துவ கல்வி தொடர வேண்டும்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com