Pages

ShareThis

Powered by Blogger.
 
Wednesday, November 28, 2012

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி புதுச்சேரியில் ஐந்து மையங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.

0 comments
புதுச்சேரி,நவ-21 

புதுச்சேரியில் கடந்த மூன்று ஆண்டுகளில் 47 பெண்கள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.வன்புணர்ச்சிக்குள்ளானவர்களின் வழக்குகளும்,ஈவ்டீசிங்,வரதட்சணைக் கொடுமைகுள்ளான வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாலிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெண்கள் தாக்கப்படும் வழக்குகளை உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இத்தெருமுணைப்பிரச்சாரம் நடைபெற்றது.
உழவர்கரை சாமிப்பிள்ளை தோட்டத்தில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரத்திற்கு சிபிஎம் உழவர்கரை நகரகமிட்டி செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,பிரதேசக்குழு உறுப்பினர் நடராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

புதுச்சேரி அஜந்தா சிக்னல் எதிரில் நடைபெற்ற தெருமுனைக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரகமிட்டி செயலாளர் என்.பிரபுராஜ் தலைமை தாங்கினார்.கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,ஆர்.ராஜாங்கம்,வி.சுமதி,நகரகமிட்டி உறுப்பினர்கள் சரவணன்,மணவாளன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.பி.எஸ் பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் எல்.கலிவரதன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் அன்புமணி,உலகநாதன்,ஆவணியப்பன் ஆகியோர் பேசினார்கள்.

குருவிநத்தத்தில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரத்திற்கு பாகூர் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்று பேசினார்கள்.
மங்களத்தில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரத்திற்கு வில்லியனூர் கொம்யூன் செயலாளர் டி.முருகையன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் ஜி.இராமசாமி,பிரதேசக்குழு உறுப்பினர்கள் மணிபாலன்,தெய்வானை உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள்.ஐந்து மையங்களில் நடைபெற்ற இப்பிரச்சாரத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
Read more...

அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய புதுச்சேரி கவர்னர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு இந்தியாவின் உயரீய அரசியல் சாசன பெஞ்சுக்கு அனுப்பட்டுள்ளது.

0 comments
புதுச்சேரி,நவ-24


மார்க்சிஸ்ட் கம்யூனஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசை எதிர்த்து புதுச்சேரி,காரைக்கால்,பாகூர்,திருக்கனூர் ஆகிய பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் டிசம்பர் 15ஆம்தேதிக்குள் சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது.

விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய,மாநில அரசுகள் குறைந்த விலையில்  அனைத்து அத்தியாவசிய பண்டங்களை பொதுவினியோக முறையில் நியாயவிலை கடைகளில் வழங்க வேண்டும்.பொருட்களுக்கு மாற்று பணம் தரும் திட்டத்தை மாநில அரசு கைவிட வேண்டும்.தீபாவளி பண்டிகையொட்டி குறைந்த விலையில் 5மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.இத்திட்டத்தை மாநில அரசு நீடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுகொள்கிறது.


உள்ளாட்சி தேர்தல்
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை ஜனவரி 15 க்குள் நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் முன்றாவது முறையாக  காலஅவகாசம் வழங்கியுள்ளது.சுயோட்சையான அதிகாரம் கொண்ட மாநில தேர்தல் ஆணையம் இதுநாள் வரை தேர்தல் தேதி அறிவிக்காதது, மாநில என்.ஆர் காங்கிர° அரசுக்கு ஆதரவாக செயல்படுவது போல் உள்ளது.எனவே உள்ளாட்சி தேர்தல் தேதியை உடனே அறிவிக்க வேண்டும்.மாநில அரசும் உள்ளாட்சி தேர்தலை நடத்த முன்வர வேண்டும்.உள்ளாட்சி தேர்தலை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி நடத்தக்கோரி  மார்க்சஸ்ட் கட்சியின் சார்பில்  நவம்பர் 26  ஆம்தேதி காலை 10மணிக்கு லெனின்வீதியில் உள்ள கீர்த்தி மஹாலில்  சிறப்பு மாநாடும் நடைபெறுகிறது.


புதுச்சேரி கவர்னர் 


புதுச்சேரி கவர்னர் இக்பால்சிங் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது மகன் மற்றும் உறவினர்கள் பெயரில் மருத்துவகல்லுhரி துவங்குவதற்கு முயற்சி மேற்கொண்டார்.இச்சம்பவம் தொடர்பாக  மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில்  சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.இவ்வழக்கை ஏற்று கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் கவர்னர் உயர்பதவியில் இருப்பதால் அவர்மீதான நடடிக்கைக்கு மத்திய அரசை அனுகலாம் என்று தீர்ப்பு கூறப்பட்டது.இதனை எதிர்த்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இவ்வழக்கு கடந்த 19 ஆம்தேதி விசாரணைக்கு வந்தது, அப்போது கவர்னர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்கான முகாந்திரம் இருப்பதாக ஒப்பு கொள்ளப்பட்டது.அதே நேரத்தில் பெறப்பட்ட சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்கப்ட்டுவிட்டது எனவே இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கவர்னர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவர்னருக்கு தன்டனை வழங்க இந்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறதா? என்று ஆய்வு செய்ய 5பேர் கொண்ட இந்தியாவின் உயரிய பீடமான அரசியல் சாசன பெஞ்சுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

இவ்வழக்கின் மூலம் அதிகாரத்தில் உயர்ந்த பொருப்பில் உள்ள யாராக இருந்தாலும்  தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதற்கு முற்று புள்ளி வைக்கப்படும்.அதேப்போல் சுனாமி மறுவாழ்வுக்கு புதுச்சேரி அரசுக்கு வந்த 800கோடியில் ரூ.204கோடி மட்டுமே செலவு செய்ததற்கான கணக்கு காட்டப்பட்டுள்ளது.மீதி தொகையில் பெறும் ஊழல் நடைபெற்றுள்ளது.இதேப்போல் பாதாளசாக்கடை திட்டத்திலும் ஊழல் நடைபெற்றுள்ளது.இதன்மீது உரிய விசாரணை நடத்த விரைவில் மார்க்சஸ்ட் கட்சியின் சார்பில் நீதிமன்றம் செல்ல உள்ளதாக தெரிவித்தனர். 
Read more...

ஜனநாயக உரிமையை பாதுகாப்பதற்கான போராட்டத்தை தீவிரபடுத்த வேண்டும் என்று என்.குணசேகரன்

0 comments
புதுச்சேரி,நவ-26

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழு சார்பில்
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி சிறப்பு மாநாடும்,வழக்கை வாதாடி உரிய தீர்ப்பை பெற்றுதந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்டாலின்அபிமன்யுவிற்கு பாராட்டு விழா லெனின்வீதியில் உள்ள கீர்த்தி மஹாலில் நடைபெற்றது.இச்சிறப்பு மாநாட்டுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பிராதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை
தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜாங்கம் அனைவரையும் வரவேற்றார்.


என்.குணசேகரன்
சிபிஎம் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் சிறப்பு
அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில்,அடிமட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்கின்ற அமைப்பாக திகழும் உள்ளாட்சி அமைப்பை கொண்டு வரவேண்டும் என்று மகாத்மாகாந்தி அன்றைக்கே வலியுறுத்தியுள்ளார்.கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெறும் தலைவர் ஈஎம்எஸ் அவர்களும் சுய உரிமையை நிலைநாட்டும் உள்ளாட்சி அமைப்பை கொண்டு வரவேண்டும் என்று பதிவு செய்தார். 

உள்ளாட்சி மூலம் மக்களுக்கு உரிய திட்டங்களை அமல்படுத்துவதில் மேற்குவங்கம் திகழ்ந்ததால், இச்சட்டம் கொண்டுவருவதற்கு முன்னூதாரமாக திகழ்ந்தவர்கள் கம்யூனிஸ்டுகள். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் போராட்டம் நடத்திய பிறகே உள்ளாட்சி அமைப்பின் உரிமைக்கான அதிகாரம் பெறப்பட்டு அதற்கான சட்டதிருத்தங்களுடன் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியால் பஞ்சாய்த்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்டது.

உள்ளாட்சியின் ஜனநாயக நன்மைகள் மக்களுக்கு கிடைக்க இடதுசாரிகள் தொடர்ந்து போராட்டம் நடத்துவதோடு,நீதிமன்றத்தில் நடத்திய போராட்டத்தை ஒவ்வொரு வாக்காளரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

இம்மாநாட்டில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் க.பீமாராவ் எம்எல்ஏ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.விசுவநாதன்,ஹோப் தொண்டு நிறுவனர் ஜோசப்விக்டர்ராஜ்,சமூக ஆய்வாளர் ஆர்.தட்சணாமூர்த்தி,வழக்கறிஞர் ஸ்டாலின்அபிமன்யு ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். முன்னதாக என்.குணசேகரன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்டாலின்அபிமன்யுவை பாராட்டி கதராடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.


தீர்மாணம்
இச்சிறப்புமாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள் வருமாறு,
மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதின் விளைவாக  வரும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்ற தீர்ப்பின் படி, மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும்.ஒரு சில அரசியல் கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக வழக்கு தொடுத்து இருப்பதை காரணம் காட்டி தேர்தலை தள்ளி போடக்கூடாது.மாநில அரசும் தேர்தலை நடத்திட முன்வர வேண்டும் என்று மாநாடு வலியுறுத்தியுள்ளது.
Read more...
Friday, November 23, 2012

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி புதுச்சேரியில் ஐந்து மையங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது

0 comments
புதுச்சேரி,நவ-21 
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி புதுச்சேரியில் ஐந்து மையங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
புதுச்சேரியில் கடந்த மூன்று ஆண்டுகளில் 47 பெண்கள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.வன்புணர்ச்சிக்குள்ளானவர்களின் வழக்குகளும்,ஈவ்டீசிங்,வரதட்சணைக் கொடுமைகுள்ளான வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாலிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெண்கள் தாக்கப்படும் வழக்குகளை உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இத்தெருமுணைப்பிரச்சாரம் நடைபெற்றது.
உழவர்கரை சாமிப்பிள்ளை தோட்டத்தில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரத்திற்கு சிபிஎம் உழவர்கரை நகரகமிட்டி செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,பிரதேசக்குழு உறுப்பினர் நடராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
புதுச்சேரி அஜந்தா சிக்னல் எதிரில் நடைபெற்ற தெருமுனைக்கூட்டத்திற்கு மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் நகரகமிட்டி செயலாளர் என்.பிரபுராஜ் தலைமை தாங்கினார்.கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,ஆர்.ராஜாங்கம்,வி.சுமதி,நகரகமிட்டி உறுப்பினர்கள் சரவணன்,மணவாளன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
பி.எ° பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் எல்.கலிவரதன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் அன்புமணி,உலகநாதன்,ஆவணியப்பன் ஆகியோர் பேசினார்கள்.
குருவிநத்தத்தில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரத்திற்கு பாகூர் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்று பேசினார்கள்.
மங்களத்தில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரத்திற்கு வில்லியனூர் கொம்யூன் செயலாளர் டி.முருகையன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் ஜி.இராமசாமி,பிரதேசக்குழு உறுப்பினர்கள் மணிபாலன்,தெய்வானை உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள்.ஐந்து மையங்களில் நடைபெற்ற இப்பிரச்சாரத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
Read more...
Monday, November 5, 2012

வீடற்ற மக்களுக்கு மணைப்பட்டா வழங்க வலியுறுத்தி

0 comments
புதுச்சேரி,அக்-18
வீடற்ற மக்களுக்கு மணைப்பட்டா வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் வேன் பிரச்சாரம் நடைபெற்றது.

உயர்த்திய பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு விலையை உடனே குறைக்க வேண்டும்.சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதை கைவிட வேண்டும்.தானே புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும்.புதுச்சேரியில் நிலவும் சட்டஒழங்கு பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.விவசாய விளைநிலங்கள் வணிகமயமாவதை தடுக்க வேண்டும் என்பன மத்திய ,மாநில அரசுகளை வலியுறுத்தி இப்பிரச்சார வேன் பயணம் நடைபெற்றது.
கடலுhர் மாவட்டம் சிதம்பரத்தில் துவங்கிய பிரச்சாரப்பயணம் வியாழனன்று புதுச்சேரி எல்லையான பி.எஸ் பாளையத்தில் வந்தடைந்து.கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன் தலைமையில் விழுப்புரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன்,கடலுhர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வாலன்டினா,ரமேஷ்பாபு ஆகியோருடன் வந்தடைந்த பிரச்சாரபயணத்தை  சிபிஎம் புதுச்சேரி பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் கலிவரதன்,நிலவழகன், கொம்யூன்  கமிட்டி செயலாளர்கள்  சரவணன்,முருகையன்,தமிச்செல்வன்,லெனின்துரை,பிரபுராஜ் உள்ளிட்ட பிரதேசக்குழு உறுப்பினர்கள்,இடைகமிட்டி உறுப்பினர்கள் வரவேற்றனர்.
பிஎஸ்பாளையத்தில் துவங்கிய பிரச்சாரபயணம் மதகடிப்பட்டு,வில்லியனூர்,கரிகலாம்பாக்கம்,பாகூர்,அரியாங்குப்பம்,முத்தியாள்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
முன்னதாக இப்பிரச்சாரபயணத்தில் புதுச்சேரி சப்தர் ஹஸ்மி கலைக்குழுவினர்கள் அன்புமணி,விநாயகம்,செல்வம்,அமர்,சேகர் ஆகியோரது கிராமிய பாடல்கள் நிகழ்ச்சியும்  நடைபெற்றது.
Read more...

சிபிஎம் தர்ணா

0 comments
புதுச்சேரி,நவ-5
ஏனாமில் தொழிற்சங்கத் தலைவர் லாக் அப் படுகொலை உள்ளிட்ட சம்பவங்களை உயர்நீதிமன்ற  கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்த கோரி சிபிஎம் தர்ணா.
ஏனாம் ரீஜென்சி செராமிக் தொழிற்சங்க தலைவர் முரளிமோகன் படுகொலை சம்பவங்கள் உள்ளிட்ட விசாரணையில் சட்டமன்ற உறுப்பினர் மல்லாடிகிருஷ்ணராவையும் சேர்க்க வேண்டும்.ஏனாம் மண்டலத்தில் சட்டத்தின் ஆட்சியை உறுதிபடுத்த ஐஏஎஸ்  அதிகாரியை நியமிக்க வேண்டும்.இத்தொடர் சம்பவங்களின் விசாரணை அறிக்கை,சிபிசிஐடி விசாரணை அறிக்கைகளை அரசு வெளியிடவேண்டும்.காவல்நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட முரளிமோகன் குடும்பத்திற்கு ரூ.10லட்சமும்,துப்பாக்கிசூட்டால் படுகாயம் அடைந்த தொழிலாளர்களுக்கும் உரிய இழப்பீடு  வழங்க வேண்டும்.தொழிலாளர் நல உரிமைகளை பாதுகாக்கவும்,தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளடக்கிய கொள்கையை புதுச்சேரி அரசு ஏற்படுத்த வேண்டும் என்பன  கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இத்தர்ணா போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் கே.முருகன் தலைமை தாங்கினார்.தர்ணா போராட்டத்தை செயற்குழு உறுப்பினர் தா.முருகன் துவக்கி வைத்து பேசினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் இறுதியாக போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.இப்போராட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,நிலவழகன்,ராமசாமி,ராமச்சந்திரன்,சுமதி,இடைகமிட்டி செயலாளர்கள் பிரபுராஜ்,லெனின்துரை,முருகையன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் நடராஜன்,உலகநாதன்,மதிவாணன்,சங்கர் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com