புதுச்சேரி,நவ-21
புதுச்சேரியில் கடந்த மூன்று ஆண்டுகளில் 47 பெண்கள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.வன்புணர்ச்சிக்குள்ளானவர்களின் வழக்குகளும்,ஈவ்டீசிங்,வரதட்சணைக் கொடுமைகுள்ளான வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாலிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெண்கள் தாக்கப்படும் வழக்குகளை உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இத்தெருமுணைப்பிரச்சாரம் நடைபெற்றது.
உழவர்கரை சாமிப்பிள்ளை தோட்டத்தில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரத்திற்கு சிபிஎம் உழவர்கரை நகரகமிட்டி செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,பிரதேசக்குழு உறுப்பினர் நடராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
புதுச்சேரி அஜந்தா சிக்னல் எதிரில் நடைபெற்ற தெருமுனைக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரகமிட்டி செயலாளர் என்.பிரபுராஜ் தலைமை தாங்கினார்.கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,ஆர்.ராஜாங்கம்,வி.சுமதி,நகரகமிட்டி உறுப்பினர்கள் சரவணன்,மணவாளன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.பி.எஸ் பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் எல்.கலிவரதன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் அன்புமணி,உலகநாதன்,ஆவணியப்பன் ஆகியோர் பேசினார்கள்.
குருவிநத்தத்தில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரத்திற்கு பாகூர் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்று பேசினார்கள்.
மங்களத்தில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரத்திற்கு வில்லியனூர் கொம்யூன் செயலாளர் டி.முருகையன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் ஜி.இராமசாமி,பிரதேசக்குழு உறுப்பினர்கள் மணிபாலன்,தெய்வானை உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள்.ஐந்து மையங்களில் நடைபெற்ற இப்பிரச்சாரத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் கடந்த மூன்று ஆண்டுகளில் 47 பெண்கள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.வன்புணர்ச்சிக்குள்ளானவர்களின் வழக்குகளும்,ஈவ்டீசிங்,வரதட்சணைக் கொடுமைகுள்ளான வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாலிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெண்கள் தாக்கப்படும் வழக்குகளை உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இத்தெருமுணைப்பிரச்சாரம் நடைபெற்றது.
உழவர்கரை சாமிப்பிள்ளை தோட்டத்தில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரத்திற்கு சிபிஎம் உழவர்கரை நகரகமிட்டி செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,பிரதேசக்குழு உறுப்பினர் நடராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
புதுச்சேரி அஜந்தா சிக்னல் எதிரில் நடைபெற்ற தெருமுனைக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரகமிட்டி செயலாளர் என்.பிரபுராஜ் தலைமை தாங்கினார்.கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,ஆர்.ராஜாங்கம்,வி.சுமதி,நகரகமிட்டி உறுப்பினர்கள் சரவணன்,மணவாளன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.பி.எஸ் பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் எல்.கலிவரதன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் அன்புமணி,உலகநாதன்,ஆவணியப்பன் ஆகியோர் பேசினார்கள்.
குருவிநத்தத்தில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரத்திற்கு பாகூர் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்று பேசினார்கள்.
மங்களத்தில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரத்திற்கு வில்லியனூர் கொம்யூன் செயலாளர் டி.முருகையன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் ஜி.இராமசாமி,பிரதேசக்குழு உறுப்பினர்கள் மணிபாலன்,தெய்வானை உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள்.ஐந்து மையங்களில் நடைபெற்ற இப்பிரச்சாரத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.




