Pages

ShareThis

Powered by Blogger.
 
Monday, November 5, 2012

வீடற்ற மக்களுக்கு மணைப்பட்டா வழங்க வலியுறுத்தி

0 comments
புதுச்சேரி,அக்-18
வீடற்ற மக்களுக்கு மணைப்பட்டா வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் வேன் பிரச்சாரம் நடைபெற்றது.

உயர்த்திய பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு விலையை உடனே குறைக்க வேண்டும்.சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதை கைவிட வேண்டும்.தானே புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும்.புதுச்சேரியில் நிலவும் சட்டஒழங்கு பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.விவசாய விளைநிலங்கள் வணிகமயமாவதை தடுக்க வேண்டும் என்பன மத்திய ,மாநில அரசுகளை வலியுறுத்தி இப்பிரச்சார வேன் பயணம் நடைபெற்றது.
கடலுhர் மாவட்டம் சிதம்பரத்தில் துவங்கிய பிரச்சாரப்பயணம் வியாழனன்று புதுச்சேரி எல்லையான பி.எஸ் பாளையத்தில் வந்தடைந்து.கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன் தலைமையில் விழுப்புரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன்,கடலுhர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வாலன்டினா,ரமேஷ்பாபு ஆகியோருடன் வந்தடைந்த பிரச்சாரபயணத்தை  சிபிஎம் புதுச்சேரி பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் கலிவரதன்,நிலவழகன், கொம்யூன்  கமிட்டி செயலாளர்கள்  சரவணன்,முருகையன்,தமிச்செல்வன்,லெனின்துரை,பிரபுராஜ் உள்ளிட்ட பிரதேசக்குழு உறுப்பினர்கள்,இடைகமிட்டி உறுப்பினர்கள் வரவேற்றனர்.
பிஎஸ்பாளையத்தில் துவங்கிய பிரச்சாரபயணம் மதகடிப்பட்டு,வில்லியனூர்,கரிகலாம்பாக்கம்,பாகூர்,அரியாங்குப்பம்,முத்தியாள்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
முன்னதாக இப்பிரச்சாரபயணத்தில் புதுச்சேரி சப்தர் ஹஸ்மி கலைக்குழுவினர்கள் அன்புமணி,விநாயகம்,செல்வம்,அமர்,சேகர் ஆகியோரது கிராமிய பாடல்கள் நிகழ்ச்சியும்  நடைபெற்றது.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com