Pages

ShareThis

Powered by Blogger.
 
Monday, October 11, 2010

உலக வெப்பமயமாதல் புதுவையில் விழிப்புணர்வு பேரணி

0 comments


புதுச்சேரி, அக். 10 -

புதுவை அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் மற்றும் புதுச்சேரி அறிவி யல் இயக்கம் சார்பில் உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

புதுச்சேரி முல்லை நகரில் துவங்கிய பேரணிக்கு அரசு ஊழியர் சம்மேளன தலைவர் ஆனந்தராஜன் தலைமை தாங்கினார். அறி வியல் இயக்க பொதுச்செய லாளர் சேகர் முன்னிலை வகித்தார். புதுச்சேரி நகர மன்ற உறுப்பினர் சக்திவேல் மரக்கன்றுகளை நட்டார். சம்மேளன கவுரவத் தலை வர் பாலமோகனன் சைக் கிள் பேரணியை துவக்கி வைத்தார். சம்மேளன பொதுச் செயலாளர் புகழேந்தி, மற்றும் சம்மேளன நிர்வாகி கள் கீதா, இளங்கோ, கிரிஸ் டோபர், கலைச்செல்வன், பாலு, நமச்சிவாயம், அறிவி யல் இயக்க நிர்வாகிகள் ரகுநாத், பரசுராமன், சுதர் சனன், விஜயமுர்த்தி, முஎகச மாநில துணைபொதுச் செயலாளர் ராமச்சந்திரன் எல்ஐசி ஊழியர் சங்க புதுவை தலைவர் ராம்ஜி உள்ளிட்ட திரளான அரசு ஊழியர்கள் மற்றும் மாண வர்கள் இப்பேரணியில் பங்கேற்றனர்.

முன்னதாக உருளையன் பேட்டையில் துவங்கிய சைக்கிள் பேரணி, மறை மலைஅடிகள் சாலை, அண்ணாசாலை, பட்டேல் சாலை வழியாக சென்று கடற்கரை காந்தி சிலை எதிரே விழிப்புணர்வு பேரணி முடிவடைந்தது

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com