Pages

ShareThis

Powered by Blogger.
 
Monday, June 6, 2011

கூட்டுறவு இயக்கத்தை காலத்திற்கேற்ப நவீனப்படுத்தி சீரமைக்க வேண்டும்

0 comments

புதுச்சேரி ஜூன் 5
கூட்டுறவு இயக்கத்தை காலத்திற்கேற்ப நவீனப்படுத்தி சீரமைக்க வேண்டும் என புதுச்சேரி கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரி கூட்டுறவு சங்க ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் சார்பில் ரோஷ்மா திருமணமண்டபத்தில் கூட்டுறவு இயக்கத்தை காப்பாற்றிட ஊழியரின் பணிநிலைமைகள் மேம்பட என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.சங்க கொடியேற்றத்துடன் துவங்கிய கருத்தரங்கத்திற்கு சம்மேளனத் தலைவர் சீதாராமன் தலைமை தாங்கினார்.அமைப்புச்செயலாளர் புருnஷ்hத்தம்மன் வரவேற்புரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளராக முதல்வர் ரங்கசாமி பங்கேற்று பேசினார் அப்பொது கூட்டுறவு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் தனது அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.முன்னதாக தமிழ்நாடு கூட்டுறவு தொழிலாளர்கள் சம்மேளனம்(சிஜடியூ) பொதுச்செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி,சிஜடியூ புதுவை கூட்டுறவு சங்க கவுரவத்தலைவர் தா.முருகன்,அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவத்தவைர் பாலமோகனன்,தலைவர் ஆனந்தராசன்,பொதுச்செயலளர் புகழேந்தி துணைபொதுச்செயலாளர் பிரேமதாசன் ஆகியோர் கருத்தரங்கத்தை வாழ்த்தி பேசினார்கள்.
திரளான ஊழியர்கள் பங்கேற்ற கருத்தரங்கத்தில் கூட்டுறவு சங்க ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்.காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.கூட்டுறவு சங்கங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு விற்பனை வரி விளக்கு அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் நிரைவேற்றப்பட்டது

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com