Pages

ShareThis

Powered by Blogger.
 
Monday, June 6, 2011

துப்புரவு பணி தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டது குறித்து புதுச்சேரி அரசு சிபிஜ விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்

0 comments

புதுச்சேரி மே 26
துப்புரவு பணி தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டது குறித்து புதுச்சேரி அரசு சிபிஜ விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழுக்கூட்டம் செயற்குழு உறுப்பினர் பி.உலகநாதன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கட்சியின் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் என்.குணசேகரன் கலந்துகொண்டார்.இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள் வருமாறு,
மக்கள் விரோத கொள்கைகளும்,தவறான ஆட்சி நடைமுறையால் புதுச்சேரி சட்டசபை த்தோர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணியை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றி என்.ஆர் காங்கிரஸ்-அதிமுக கூட்டணியை மக்கள் வெற்றிபெறச்செய்துள்ளனர்.புதிய அரசு மாநில மக்களின் எதிர்பார்ப்புகளையும்,முடங்கியுள்ள மக்கள்நலத்திட்டங்களையும்,குவிந்துள்ள மக்கள்பிரச்சனைகளை காலம் தாழ்த்தாமல் முழுமையான அமைச்சரவை அமைத்து சட்டபேரவை கூட்டத்தை கூட்டி நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுகொள்கிறது.மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவம்,பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்லுhரிகளில் மாணவர்கள் சேர்க்கையை துவங்குவதோடு அரசு இடஒதுக்கீடான 50 சதவீதத்தை தனியார் கல்லுhரிகளிலிருந்து பெறுவதை உறுதிபடுத்த வேண்டும்.மேலும் குறைக்கப்பட்ட காமராஜர் கல்வி உதவிதொகையை இந்தாண்டு முதல் உயர்த்தி வழங்க வேண்டும். அரசு மருத்துவக்கல்லுhரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்கையை துவங்க நடவடிக்கை எடுக்க வெண்டும்.
நிதி மோசடி-கறுப்பு பணப்பதுக்கள் பேர்வழி ஹசன் அலிக்கு போலி பா°போர்ட் எடுத்து கொடுத்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள புதுச்சேரி ஆளுநர் இக்பால்சிங்கை ஆளுநர் பதவிலிருந்து நீக்க குடியரசுத்தலைவர் தயக்கம் காட்டுவது கவலையளிப்பதாகும்.இந்தநிலையில் புதுச்சேரி முழுவதும் துப்புரவு பணியை 19 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனத்திற்க்கு ஆளுநர் இக்பால்சிங் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.மேற்படி நிறுவனம் கருப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.எனவே தனியார் நிறுவனத்திற்கு துப்புரவு பணி ஒப்பந்தம் வழங்கியது குறித்து சிபிஜ விசரானணக்கு உத்திரவிட வேண்டும்.மேலும் இக்பால்சிங் பதவி காலத்தில் அவரால் கையெப்பம் மிட்டு அனுமதிக்கப்பட்ட கோப்புகள் குறித்து மறு ஆய்வு நடத்தி மாநிலத்தின் மரியாதையை பாதுகாக்க வேண்டும்.மேலும் ஆளுநர் இக்பால்சிங்கை இந்திய பதவியிலிருந்து நீக்க குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வி.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com