
புதுச்சேரி ஜூலை 9
கருப்பு பண மோசடி மன்னன் ஹசன்அலிக்கு போலி பாஸ்பார்ட் வழங்க பரிந்துரைத்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள புதுச்சேரி துனைநிலைஆளுநர் இக்பால்சிங்கை மத்திய அரசு உடனே திரும்பபெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு ஜூலை 12ல் கருப்பு பேட்ஜ் அனிந்து போராட்டம் நடைபெறுகிறது.இப்போராட்டத்தை விலக்கி தண்டோர போட்டு புதுச்சேரி முழுவதும் பிரச்சாரம் நடைபெற்றது.பிரச்சாரத்தில் சிபிஎம் பிரதேசசெயலாளர் வி.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் மற்றும் செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,நிலவழகன்,ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் கலந்து கொண்டன