Pages

ShareThis

Powered by Blogger.
 
Thursday, July 7, 2011

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கொலை வெறி தாக்குதலை கண்டித்து

0 comments

புதுச்சேரி ஜூலை 5
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கொலை வெறி தாக்குதலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரி முழுவதும் தெரு முனைப்பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
மேற்குவங்கத்தில் மாவோயிஸ்ட் ஆதரவோடு ஆட்சி பொருப்பேற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கடந்த 40 நாட்களில் 20க்கும் மேற்பட்ட மார்க்சி°ட் ஊழியர்களை படுகொலை செய்துள்ளதை கண்டித்தும்.கொள்ளப்பட்ட ஊழியர்களின் குடுபங்களை பாதுகாக்க பொதுமக்களிடம் நிதி திரட்டும் இயக்குமும் புதுச்சேரியில் நடைபெற்றது.

புதுச்சேரி நகரம்
புதுச்சேரி நகரகமிட்டி சார்பில் நேருவீதி காந்திவீதி சந்திப்பில் துவங்கிய பிரச்சாரத்திற்கு செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் தலைமை தாங்கினார்.சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார்.கட்சியின் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் கே.முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.பிரதேசக்குழு உறுப்பினர் பிரபுராஜ்,கமிட்டிஉறுப்பினர்கள்,கிளைசெயலாளர்கள் மதிவானன்,ரமேஷ்,சிவசோலை,அழகர்ராஜ்,துரைமுருகன்,மணவாளன்,சரவணன்,பாலாஜி,முன்னா,சிஜடியூ இணைச்செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
காந்திவீதியில் துவங்கிய நிதி திரட்டும் இயக்கம் பு°சிவீதி,அண்ணாசாலை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
உழவர்கரை
உழவர்கரை நகர கமிட்டி சார்பில் பெத்துசெட்டி பேட்டையில் நடந்த நிதி திரட்டும் இயக்கத்திற்கு கமிட்டி செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் நிதி வசூல் இயக்கத்தை துவக்கிவைத்தார்.கமிட்டி உறுப்பினர் நடராஜன் மற்றும் சத்தியா,பாஸ்கர்,முருகதாஸ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com