
புதுச்சேரி,ஏப்ரல்-14
அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மறியாதை செலுத்தப்பட்டது.
டாக்டர் பி.ஆர் அம்பேத்கரின் 121வது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி சட்டமன்றம் எதிரில் அமைந்துள்ள அவரது திருவுருவசிலைக்கு முதல்வர் என்.ரங்கசாமி,சபாநாயகர் சபாபதி,ஆங்கிலோ பிரேஞ்சு டெக்°டைல் தலைவர் பாலன்,அமைச்சர்கள்,தியாகராஜன்,ராஜவேல்,பன்னீர்செல்வம்,மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்று மாலை அனிவித்து மறியாதை செலுத்தினர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி
இதேப்போல் மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,நிலவழகன்,முருகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி பொதுசெயலாளர் இராமசாமி,நிர்வாகிகள் லெயோன்,தவமணி,கலிவரதன்,தமிழ்செல்வன்,பாலமோகனன்,சண்முகம்,சத்தியா உள்ளிட்டோர் பங்கேற்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மறியாதை செலுத்தினர்.டிஒய்எப்ஜ சார்பில் புதுச்சேரி முழுவதும் உள்ள கிளைகளில், தெருமுனைகளில் அலங்கரித்து வைக்கப்பட்ட அம்பேத்கர் உருபடத்திற்கு மாலை அணிவித்து மறியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான வாலிபர்கள் கலந்து கொண்டனர்.