
புதுச்சேரி,ஏப்ரல்-14
மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான தோழர் என்.வரதராஜன் மறைவையொட்டி புதுச்சேரியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்று மறைந்த தலைவருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும்,சுதந்திர போராட்டவீராருமான தோழர் என்.வரதராஜன் மறைiக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் நடைபெற்றது.சிபிஎம் பிரதேசகுழு அலுவலகத்தில் நடந்த இரங்கல் கூட்டத்திற்கு கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை தாங்கினார்.கட்சியின் செயற்குழு உறுப்பினர் தா.முருகன்,சிபிஜ மாநில செயலாளர் ஆர்.விசுவநாதன்,துனை செயலாளர் கீதநாதன்,திமுக மாநில நிர்வாகிகளில் ஒருவர் ராஜ்பவன் பாலா ,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பாளர் பாவாணன்,இந்திகுடியரசு கட்சி தலைவர் லெயோன்,பார்வர்டுபிளாக் கட்சி தலைவர் முத்து,புரட்சிகர சோஸலி°ட் கட்சி தலைவர் லெனின்,அருந்ததியினர் சங்க தலைவர் தவமணி உள்ளிட்டோர் பங்கேற்று மறைந்த தலைவருக்கு புகழஞ்சலி செலுத்தி பேசினர்.முன்னதாக மார்க்சி°ட் கட்யினர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்கள் கூட்டத்தில் பங்கேற்று தோழர் என்.வரதாஜன் உருவபடத்திற்கு மலர்துhவி அஞ்சலி செலுத்தினர்.