Pages

ShareThis

Powered by Blogger.
 
Sunday, April 1, 2012

நகராட்சி ஊழியர்களுக்கு அரசே ஊதியம் வழங்க வேண்டும்

0 comments

புதுச்சேரி,மார்ச்-28
நகராட்சி ஊழியர்களுக்கு அரசே ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி சட்டமன்றம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
5வது ஊதியக்குழு அறிவித்த 21 ஆண்டு பணிமுடித்த ஊழியர்களுக்கு ஏசிபியை உடனே வழங்க வேண்டும்.பணிகாலத்தில் இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு மற்றும் பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பென்ஷன் மற்றும் பணிக்கொடை காலத்தோடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
கம்பன் கலையரங்கத்தில் இருந்து பேரணியாக சென்று சட்டமன்றம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு உழவர்கரை நகராட்சியின் தொழிற்சங்க கூட்டுகுழுவின் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.சிஐடியு மாவட்ட செயலாளர் கே.முருகன்,ஏஐடியுசி பொதுசெயலாளர் அபிஷேகம்,ஏடியு சங்க தலைவர் பாப்புசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.பழனிவேல்,ராமச்சந்திரன்,பொன்னம்பலம் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com