Pages

ShareThis

Powered by Blogger.
 
Friday, April 6, 2012

ஜி கட் ஹவு, சூர்யா ஹெரி டேஜ், லிட்டில் பேர்ள் ஆகிய மூன்று தங்கும் விடுதிகளில் பாலியல் பலாத்காரம் தொடர்பான புகார்கள்

0 comments

புதுச்சேரி, ஏப். 5-

சட்டமன்ற கூட்டத் தின் போது மாவட்ட ஆட்சியர் விடுமுறையிலிருந்தது குறித்து புதுச்சேரி அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இது குறித்து கட்சியின் பிரதேசச் செயலாளர் வெ. பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:-

புதுச்சேரி சட்டமன்றம் கூட்டம்நடைபெறும் நேரத்தில் மாவட்ட ஆட்சியர் இருக்க வேண்டும். ஆனால் அவர் இல்லை. எனவே விடுமுறையில் சென் றாரா? விடுமுறையில் செல்ல நிர்பந்திக்கப்பட்டாரா? என்ற சந்தேகம் மக்கள் மத் தியில் எழுந்துள் ளது.

சமீபத்தில் ஜி கட் ஹவு, சூர்யா ஹெரி டேஜ், லிட்டில் பேர்ள் ஆகிய மூன்று தங்கும் விடுதிகளில் பாலியல் பலாத்காரம் தொடர்பான புகார்கள் எழுந்தது. இதன் மீது உரிய விசாரணை நடத்தி விடுதி களை மூட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி தொடர் இயக்கங் களை நடத்தியது. இதன் விளைவாக மாவட்ட ஆட் சியர் உரிய விசாரனை நடத்தி அந்த விடுதிகளை மூட உத்தரவிட்டார்.இந்நிலையில், ஆட்சியாளர்களை காப்பாற்றும் பொருட்டு அந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் தடை செய்ய வேண்டும் என சிலர் முயற்சித்துள்ளதாக கூறப் படுகிறது. இது ஆட்சிய ருக்கு நெருக்கடியை ஏற்ப டுத்தியுள்ளது. மேலும் தானே புயல் நிவாரணம் வழங்கு வதில் அரசியல் தலையீடு இருந்துள்ளது. இதேப் போல் ஏனாம் பிரச்சனைக்கு சட்டப்படி செயல்பட்ட மாவட்ட துணை ஆட்சி யர்,துணை ஆய்வாளர் ஆகியோரை இடமாற்றம் செய்யும் பணியும் நடந்துள் ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 35 கொலைகள் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப் பதை எடுத் துக்காட்டுகிறது. எனவே மாவட்ட ஆட் சியர் விடுமுறை விவகாரம், மூன்று விடுதிகளின் நடவ டிக்கை குறித்து புதுச்சேரி அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் இவ்வாறு பெருமாள் தெரிவித்துள்ளார்

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com