Pages

ShareThis

Powered by Blogger.
 
Friday, July 19, 2013

மின்சார கட்டண உயர்வை திரும்பபெறக்கோரி

0 comments
புதுச்சேரி,ஜுலை-19
மின்சார கட்டண உயர்வை திரும்பபெறக்கோரி வாயில் கருப்பு துணியுடன் ஆர்ப்பாட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.

300கோடிக்கு மேல் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.பொதுவினியோக முறையை சீர்குலைக்கும் உங்கள் கையில் உங்கள் பணம் என்ற மோசடி திட்டத்தை உடனே கைவிட வேண்டும்.கிராமப்புற 100 நாள் வேலை திட்டத்தை  100சதவீதம் முறையாக அமல்படுத்த வேண்டும்.தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்.நடைபெறும் சட்டமன்றக்கூட்டத்தில் மக்கள் வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னூரிமை கொடுத்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி சட்டமன்றம் அருகில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் கே.முருகன் தலைமை தாங்கினார்.கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் சுமதி,ராஜாங்கங்,நிலவழகன்,கலிவரதன்,ராமசாமி,ராமச்சந்திரன்,இடைகமிட்டி செயலாளர்கள் சரவணன்,முருகையன்,தமிழ்ச்செல்வன்,லெனின்துரை,பிரபுராஜ் உள்ளிட்ட பிரதேசக்குழு உறுப்பினர்கள் உட்பட திரளானோர் வாயில் கருப்பு துணி கட்டி கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.முன்னதாக பழைய பேரூந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்தனர்.
Read more...
Wednesday, July 10, 2013

இளவரசனின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

0 comments
புதுச்சேரி,ஜுலை-9
இளவரசனின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரியில் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன் மர்மமான முறையில் இறந்துள்ளதை கண்டித்தும் இவ்வழக்கை சிபிஐ க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சுப்பையா சிலை அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி துணை தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,முன்னணியின் செயலாளர் ராமசாமி,மாதர் சங்க நிர்வாகி சுமதி,ஆசிரியர் சங்க தலைவர் ஜெயராமன்,அருந்ததியினர் அமைப்பின் தலைவர் தவமணி,அரசு ஊழியர் சம்மேளன கவுரவத்தலைவர் பாலமோகனன்,நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக தமிழக அரசு இளவரசனின் மரணம் குறித்து சிபிஐ க்கு மாற்றக்கோரி முழக்க மிட்டனர்.

Read more...
Tuesday, July 9, 2013

என்.எல்.சி தொழிலாளர்களுக்கு ஆதரவாக புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

0 comments
புதுச்சேரி,ஜுலை-5
என்.எல்.சி  தொழிலாளர்களுக்கு ஆதரவாக புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

என்.எல்.சியின் 5சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசை கண்டித்தும் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி வணிகவரித்துறை முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் நிலவழகன் தலைமை தாங்கினார்.கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,எல்.கலிவரதன்,ராஜாங்கம்,ராமசாமி,சுமதி,ராமச்சந்திரன்,கே.முருகன்,மற்றும் இடைகமிட்டி செயலாளர்கள் லெனின்துரை,தமிழ்செல்வன்,முருகையன்,சரவணன்,பிரபுராஜ் உள்ளிட்ட பிரதேசக்குழு உறுப்பினர்கள் உட்பட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக மத்திய அரசை எதிர்த்து முழக்கமிட்டனர்.
Read more...
Monday, July 1, 2013

சாதி மறுப்பு திருமணம் செய்த காதல்கஜோடியிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

0 comments
புதுச்சேரி,ஜுலை-1
சாதி மறுப்பு திருமணம் செய்த காதல்கஜோடியிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி காவல்துறையை வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி வீமகவுன்டம்பாளைய ஓடைத்தெருவை  சேர்ந்தவர் கே.சண்முகம் இவரது மகன் விஜயகுமார் (வயது 31).அதே தெருவை சேர்ந்த எ.சவரிமுத்துவின் மகள் ஆரோக்கியமேரி (வயது 25) ஆகியோர் ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விஜயகுமாரும்-ஆரோக்கியமேரியும் கடலூரில் பதிவு திருமணம் செய்துள்ளனர்.ஆரோக்கிய மேரி தலித் கிருத்துவ பிரிவை சேர்ந்தவர் என்பதாலும், வன்னியர் சமுகத்தை சேர்ந்த சண்முகம் குடும்பத்தில் இத்திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன்,சண்முகத்தை அடித்து  கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

எனவே தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் காதல்ஜோடி தஞ்சமடைந்த னர்.கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாளிடம் நடந்த சம்பவத்தை கூறியதுடன் தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு கொண்டனர்.உடனே சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு பாதுகாப்பு வழங்ககோரி மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் பெருமாள்,செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் ஆகியோர் புதுச்சேரி காவல்துறை  முதுநிலை கண்கானிப்பாளர் பர்வே°அகமதுவை சந்தித்து புகார் மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட அதிகாரி காதல்ஜோடியினருக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு டிநகர் காவல்நிலைய உயர் அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டுள்ளார்.

Read more...

புதுச்சேரி அரசு தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில் வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

0 comments
புதுச்சேரி அரசு தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில் வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழுக் கூட்டம் செயற்குழு உறுப்பினர் வே.கு.நிலவழகன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் கலந்து கொண்டு பேசினார்.இக்கூட்டத்தல் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள் வருமாறு,
மக்கள் விரோத காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டு என்.ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகளாகிவிட்டது.ஆனால் மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றும் வகையில் என்.ஆர்.காங்கிரஸ் அரசு செயல்படவில்லை.வீடுகட்டும் மானியம்,சென்டாக் கல்வி உதவி,இலவச அரிசி,ரொட்டிபால்திட்டம்……... போன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.தேர்தல்கால வாக்குறுதிகளும் அறிவிப்போடு நிர்கிறது.இரண்டு மடங்கு மின்கட்டண உயர்வு,பால்விலை உயர்வு,மதிப்புக்கூட்டிய வரி என மக்கள் மீது விலை உயர்வு ,வரிஉயர்வு திணிக்கப்படுகிறது.மொத்தத்தில் மத்திய காங்கிரஸ் அரசு புதுச்சேரி மாநிலத்திற்கு உரிய நிதி வழங்குவதில் செய்யும் வஞ்சகமும்,மாநில அரசின் தவறான அனுகுமுறையும் மாநில மக்களை படுமோசமாக பாதித்து வருகிறது.

2013-2014 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மாநில அரசு மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க, சமூகப் பொருளாதாரத்தை உயர்த்திட வளர்ச்சித்திட்டங்களுக்கு மாநில அரசு முனனூரிமை அளித்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயற்குழு வலியுறுத்துகிறது.விளைநிலங்கள் பயன்பாட்டு சட்டம்  இயற்றி விளை நிலங்களை பாதுகாத்து, விவசாயத்தையும்,தொழில் வளர்ச்சிக்கு முன்னூரிமை அளித்திட வேண்டும்.கிராமப்புற வேலைத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதோடு நகர்புற ஏழைகளுக்கும் இத்திட்டத்தை விரிவுப்படுத்துவது,பொதுவினியோக திட்டத்தை வலுப்படுத்துவது வீடில்லாத ஏழைகளுக்கு இலவச மணைப்பட்டா,வீடுகட்டும் மானியம் சென்டாக் கல்வி உதவி நிதி,மாற்றுத்திறனாளிகளுக்கு ஓராண்டுகளாக தர வேண்டிய இலவச அரிசி உள்ளிட்ட நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதை உறுதி செய்திட வேண்டும்.அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை,அடிப்படை வசதியின்மை உள்ளிட்ட குறைபாடுகளுக்கு இடையில்  10,12ம் வகுப்பு  மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிகளுக்கு  வரும் பட்ஜெட்டில் கூடுதல் நிதி  ஒதுக்கிடு செய்திட  வேண்டும்.

அரசு பொது மருத்துவனையில் இயற்கை சுவாசக் கருவிகள் பலது செயலற்ற நிலையில் உள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள்,ஊழியர்கள் பணியிடங்கள் நிரப்படவில்லை. தேவையான உப கரணங்கள்,படுக்கைகள் இல்லை.அரசுப் பொது மருத்துவமனை,மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவனைகளையும் மேம்படுத்தி அனைவருக்கும்  மருத்துவ சிகிச்சையை உறுதிபடுத்திட தேவையான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்திட வேண்டும்.ஆகவே மாநில அரசு நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலன் பாதுகாத்திட,சமூக பொருளாதாரம் உயர்ந்திட வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னூரிமை அளித்திட மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

Read more...

பால்டெக்னிக் மாணவர்களுக்கான சென்டாக் இடஒதுக்கீட்டில் நடைமுறையில் உள்ளபடி நுழைவுத் தேர்வை தொடர்ந்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

0 comments
புதுச்சேரி,ஜுலை-1
பால்டெக்னிக் மாணவர்களுக்கான சென்டாக் இடஒதுக்கீட்டில் நடைமுறையில் உள்ளபடி நுழைவுத் தேர்வை தொடர்ந்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது வருமாறு,

பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு வகுப்பில் சேர்வதற்கு ஒவ்வொரு துறையிலும் 12இடங்கள் சேர்க்கப்படுகின்றன.அந்த இடங்களுக்கு சென்டாக் மூலம் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இதனால் தகுதியும்,திறமையும் உள்ள அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் முன்னணி பொறியியல் கல்லூரிகளில் போட்டிபோட்டு பெரும் பகுதி இடங்களை கைப்பற்றி பயின்று  வருகின்றனர்.தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை.இந்நிலையில் மாநில அரசு நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வருகிற நுழைவத்தேர்வை ரத்து செய்து நடப்பு கல்வியாண்டு முதல் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் அன்று அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சேபிக்கிறது.
மத்திய காங்கிரஸ் அரசு ரிலையன்ஸ் நிறுவனம் கொழுப்பதற்கு எரிவாயு விலையை இரண்டு மடங்காக உய்ர்த்தியதைப்போல புதுச்சேரி என்.ஆர்.காங்கிர° அரசு தனியார் பாலிடெக்னிக் நிறுவனங்களின் இலாபத்திற்கு  வழிவகுக்கும் வகையில்  நுழைவுத்தேர்வை ரத்து செய்தது ஏற்க முடியாது.இத்தயை தவறான முடிவை அரசு எடுத்ததிற்கு என்ன நிர்பந்தம் ஏற்பட்டது.என்று புதிராக உள்ளது.ஆகவே,மாநில முதல்வர் உடனடியாக தலையிட்டு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு 2ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு முறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மாநில அரசை வலியுறுத்துகிறது.

தனியார் பள்ளிகளில் மாணவர்களின் திறன்,பெற்றோர்களின்  கல்வி மற்றும் பணம் செலுத்தும் தகுதியை அடிப்படையாகக்  கொண்டு சேர்க்கப்படுகிறர்கள்.சில தனியார் கல்வி நிறுவனங்கள் பணம் சம்பாதிக்க +2 வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை 11-ம் வகுப்பிலேயே துவங்குகின்றன.இதனால் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று சென்டாக் இட ஒதுக்கீட்டில் பெரும்பகுதி இடங்களை பிடிக்கின்றார்கள்.அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ,அடிப்படை வசதியின்மை,குடும்பத்தின் வறுமை நிலையிலும் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றாலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சென்டாக் இடஒதுக்கீட்டில்  உயர்கல்வி வாய்ப்புகள் மிகக்குறைவாக உள்ளன.ஆகவே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சென்டாக்கில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக முன்னுக்கு வந்துள்ளன.
மேலும் தனியார் பாலிடெக்னிக் நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசின்முடிவை மாற்றியதின் மூலம் யார் யார் எத்தகைய ஆதாயம் அடைந்துள்ளனர் என்ற கேள்வி எழுகிறது. இந்நிலையில் மாநில அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதும்,மறுபுறத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் அரசு முடிவுக்கு கட்டுப்பட மறுக்கிறது எனறு பேசுவதும் மக்களை திசைதிருப்பும் நடவடிக்கையாகும்.ஆகவே மாநில அரசு கல்வி முறையில்  மாற்றத்தையும்,தனியார் கல்வி நிறுவனங்களின் மீது  சமூக கட்டுப்பாட்டை  ஏற்படுத்தவும்,மாநில அரசு முன்வர வேண்டும்.
மேலும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான 2ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரி  மாணவர் சேர்க்கையில் நுழைவுத் தேர்வு நடைமுறையை தொடர வேண்டும் என மார்க்சி°ட் கட்சி வலியுறுத்துகிறது.
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com