Pages

ShareThis

Powered by Blogger.
 
Wednesday, July 10, 2013

இளவரசனின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

0 comments
புதுச்சேரி,ஜுலை-9
இளவரசனின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரியில் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன் மர்மமான முறையில் இறந்துள்ளதை கண்டித்தும் இவ்வழக்கை சிபிஐ க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சுப்பையா சிலை அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி துணை தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,முன்னணியின் செயலாளர் ராமசாமி,மாதர் சங்க நிர்வாகி சுமதி,ஆசிரியர் சங்க தலைவர் ஜெயராமன்,அருந்ததியினர் அமைப்பின் தலைவர் தவமணி,அரசு ஊழியர் சம்மேளன கவுரவத்தலைவர் பாலமோகனன்,நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக தமிழக அரசு இளவரசனின் மரணம் குறித்து சிபிஐ க்கு மாற்றக்கோரி முழக்க மிட்டனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com