Pages

ShareThis

Powered by Blogger.
 
Tuesday, July 9, 2013

என்.எல்.சி தொழிலாளர்களுக்கு ஆதரவாக புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

0 comments
புதுச்சேரி,ஜுலை-5
என்.எல்.சி  தொழிலாளர்களுக்கு ஆதரவாக புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

என்.எல்.சியின் 5சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசை கண்டித்தும் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி வணிகவரித்துறை முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் நிலவழகன் தலைமை தாங்கினார்.கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,எல்.கலிவரதன்,ராஜாங்கம்,ராமசாமி,சுமதி,ராமச்சந்திரன்,கே.முருகன்,மற்றும் இடைகமிட்டி செயலாளர்கள் லெனின்துரை,தமிழ்செல்வன்,முருகையன்,சரவணன்,பிரபுராஜ் உள்ளிட்ட பிரதேசக்குழு உறுப்பினர்கள் உட்பட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக மத்திய அரசை எதிர்த்து முழக்கமிட்டனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com