Pages

ShareThis

Powered by Blogger.
 
Monday, May 2, 2011

அடக்கு முறைகளை பின்னுக்கு தள்ளிய தொழிலாளி வர்க்கம் - உ.வாசுகி

0 comments


புதுச்சேரி மே 2
மெகா ஊழல்களால் ஏழை மக்களின் நலத்திட்டங்கள் முடக்கபடுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி குற்றம்சாட்டினார்.
சிஜடியூ-ஏஜடியூசி தொழிற்சங்கள் சார்பில் புதுச்சேரி சிங்காரவேலர் சதுக்கத்தில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.சிஜடியூ மாவட்ட செயலாளர் கே.முருகன்,ஏஜடியூசி மாநில பொதுச்செயலாளர் வி.எஸ்.அபிnஷ்கம் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.இப்பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பங்கேற்று பேசுகையில் ,சிகாகோ நகரில் 8 மணிநேரம் வேலை உரிமைக்காக போராடிய தொழிலாளர்களை காவல்துறை வைத்து அடக்கு முறையை கையாண்டனர்.அத்தகைய அடக்கு முறைகளை பின்னுக்கு தள்ளிய தொழிலாளி வர்க்கம் சுனாமி பேரலைகளை போல் ஒரு நாள் எழும்.போராடி பேற்ற உரிமைகளை இன்றைக்கு நம்மை ஆளுகின்ற அரசுகள் பரித்து வருகிறது.கடந்த மாதங்களில் மத்திய மன்மோகன் சிங் அரசு இரண்டுதொழிலாளர் விரோத மசோதாக்களை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.அதில் அரசு ஊழியர்களின் பென்சன் தொகையை பங்குசந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்க வழிவகை செய்யும் மசோத மற்றொன்று 40 தொழிலாளர்களுக்கு குறைவாக வேலை செய்யும் நிறுவனங்களில் தொழிலாளர் நலச்சட்டங்கள் தொழிலாளர்களுக்கு பொருந்தாதது என வலியுறுத்தும் மசோதாகளை பிஜேபி அனுமதியோடு மத்திய அரசு தாக்கள் செய்தது.கடந்த காலங்களில் இடது சாரி கட்சிகள் மத்திய அரசுக்கு ஆதரவு அளித்த போது தொழிலாளர் விரோத சட்டங்களை திருத்தும் மசோதாக்களை தாக்கல் செய்ய அனுமதிக்க பட வில்லை.ஆனால் இன்றைக்கு காங்கிரஸ் கட்சியும் பிஜேபியும் தொழிலாளர்களின் உரிமைகளை பரித்து வருகின்றனர்.2ஜி ஸ்பெக்டரம் அலைவரிசை ஒதுக்கீடு ஊழல் குற்றச்சாட்டில் 80ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையை முதலில் தாக்கல் செய்துள்ள சிபிஜ ஏன் ஒரு பக்கத்தில் கூட திமுக வின் கனிமொழி பெயரையும்,கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் பெயரை சேர்க்கவில்லை? தற்போது துனை குற்றப்பத்திரிக்கையில் சேர்த்து இருப்பதின் மூலம் கலைஞர் அரசிற்கு சிபிஜ மறைமுகமாக சிபாரிசு செய்யவில்லையா? காமன் வெல்த் போட்டியில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த புகார் எழுந்த போது டில்லி காங்கிர° அரசு கண்டு கொல்ல வில்லை.தற்போது கல்மாடி கைது செய்யப்பட்டுள்ளார்.ஸ்பெக்ட்ரம்,காமன் வெல்த்போட்டி,ஆதர்ஸ் குடியிருப்பு உள்ளிட்ட மெகா ஊழல்களால் நாட்டின் வளர்ச்சி தடுக்கபடுகிறது.ஏழை எளிய மக்களின் நலத்திட்டங்கள் முடக்கப்படுகிறது.ஊழல்களை எதிர்த்து உழைப்பாளி மக்கள் போராடவேண்டும்.இவ்வாறு உ.வாசுகி பேசினார்.முன்னதாக சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,சிபிஜ மாநில செயலாளர் நாரா.கலைநாதன்,ஏஜடியூசி மாநில தலைவர் ஆர்.விசுவநாதன் மற்றும் நிர்வாகிகள் பேசினார்கள்.முன்னதாக பெரியார் சிலையிலிருந்து துவங்கிய மேதின பேரணியில் இரண்டயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
படம் உள்ளது

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com