இந்தியன் காபி ஹவுஸ் கட்டிடத்தின் புதுபிக்கும் பாணியை உடனே துவங்க வேண்டும் என்று காபி ஹவுஸ் தொழிலாளர்களின் பாதுகாப்பு மாநாடு அரசை வலியுறுத்தியுள்ளது.
இந்தியன் காபி ஹவுஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் (சிஜடியூ)மாநாடு அஜிஸ்நகர் ரெட்டியார்பாளைத்தில் நடைபெற்றது.காந்தி அரங்கத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் ராஜாங்கம் தலைமை தாங்கினார்.துணை தலைவர் விஜயன் மாநாட்டு பிரதிநிதிகளை வரவேற்று பேசினார்.சங்கத்தின் கௌரவத்தலைவர் தா.முருகன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.மாநாட்டின் அறிக்கையை சங்க செயலாளர் கே.ராமச்சந்திரன் வாசித்தார். மாநாட்டை வாழ்த்தி சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள், சிஜடியூ மாவட்ட செயலாளர் கே.முருகன்,ஆட்டோ சங்க பொதுச்செயலாளர் சீனூவாசன் ஆகியோர் பேசினார்கள்.நுhற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருhமாறு,
புதுச்சேரி நேருவீதியில் உள்ள இந்தியன் காபிஹவுஸ் கூட்டுறவு சங்க கட்டிடத்தின் புதுபிக்கும் பணியை உடனே துவங்க வேண்டும்.அதற்கு தேவையான நிதியை புதுச்சேரி அரசு வழங்க வேண்டும்.காபி ஹவுஸ் கிளைகளை நவீனப்படுத்தி புதிய கிளைகளை துவக்க ரூ.5 கோடி ஓதுக்க வேண்டும்.கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ஜந்தாவது ஊதியக்கு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி மே 1
அகிலஇந்திய பிஎஸ்என்எல்-டிஒடீ ஓய்வூதியர்கள் சங்கத்தின் புதுச்சேரி கிளை துவக்கும் விழா நடைபெற்றது.பிஎஸ்என்எல் ஊழியர் சங்க அலுவலகத்தில் நடந்த இப்புதிய கிளை துவக்க விழாவிற்கு கே.சிவக்குமார் தலைமை தாங்கினார்.ஏ.நாராயணசாமி வரவேற்புரையாற்றினார். பிஎ°என்எல் ஊழியர் சங்கத்தின் அகிலஇந்திய பொதுச்செயலாளர் பி.அபிமன்யு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.சங்கத்தின் மாநிலத்தலைவர் எஸ்.மோகன் தாஸ்,மாநில செயலாளர் சி.கே.நரசிம்மன் ,புதுச்சேரி ஓய்வுதியர்கள் சங்கத்தின் தலைவர்கள் நடராஜன்,பாலமோகனன்,மாவட்ட தலைவர் கொளஞ்சியப்பன்,செயலாளர் சங்கரன்,ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க செயலாளர் குமார் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள்.ஓய்வூதியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மதியழகன்,பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.