Pages

ShareThis

Powered by Blogger.
 
Tuesday, May 31, 2011

புதுச்சேரியில் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

0 comments
புதுச்சேரி, மே 30-

ஒப்பந்த தொழிலாளர் களுக்கு முதல் வாரத்தி லேயே மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என வலி யுறுத்தி பிஎஸ்என்எல் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதந் தோறும் 7 ஆம் தேதிக்குள் சம்பள பட்டுவாடா செய்ய வேண்டும், இபிஎப், இஎஸ்ஐ யை முறையாக பிடித்தம் செய்து கட்ட வேண்டும், சமவேலைக்கு சமஊதி யத்தை அமல்படுத்த வேண் டும், சட்டவிரோத சம்பள வெட்டை கைவிட வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பிஎஸ் என்எல் தலைமை பொது மேலாளர் அலுவலகம் எதி ரில் நடந்த இந்த ஆர்ப் பாட்டத்திற்கு தமிழ்நாடு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலை வர் முருகையன் தலைமை தாங்கினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கொளஞ்சியப்பன், செயலாளர் சங்கரன், ஒப் பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் குமார், மாநில உதவி தலைவர் தமிழ்வேந்தன், உதவி செய லாளர் செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இப்போராட்டத்தில் திர ளான ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com