புதுச்சேரி மே 6
இரண்டு சக்கர மோட்டார் வாடகை நிலையங்களை தடை செய்யக்கோரி சிஜடியூ உள்ளிட்ட அனைத்து ஆட்டோ சங்கங்களின் சார்பில் புதுச்சேரியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரிக்கு வரும் சுற்றுளாவாசிகளிடம் சட்டத்திற்கு புறம்பாக இரண்டு சக்கர மோட்டார் வாகனங்களை வாடகைக்கு விடப்படுவதை தடுக்க வேண்டும். மிஷ்ன் வீதியில் இயங்கி கொண்டிருக்கும் வாடகை நிலையங்களில் உள்ள இரண்டு சக்கர மோட்டார் வாகணங்களை போக்குவரத்து துறை பறிமுதல் செய்ய வெண்டும் என்பன கோரிக்கைகளை வலியுருத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
நேருவிதியில்- மிஷ்ன் வீதிசந்திப்பில் நடந்த இத்தர்ணா போராட்டத்திற்கு புதுவை மாநில ஆட்டோ சங்கத் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார்.சிஜடியூ ஆட்டோ சங்கத் பொதுச்செயலாளர் சீனூவாசன் முன்னிலை வகித்தார்.சிஜடியூ ஆட்டோ சங்கத் கவுரவத் தலைவர் தா.முருகன்,சிஜடியூ மாவட்ட செயலாளர் கே.முருகன்,சங்கத்தலைவர் ராஜாங்கம்,ஏஜடியூசி மாநில பொதுச்செயலாளர் அபிnஷ்கம்,அண்ணா தொழிற்சங்கத் தலைவர் பாப்புசாமி,ஜஎன்டியூசி சங்த் நிர்வாகி குமார்ஆகிnய்hர் பங்கேற்று பேசினார்கள்.இப்போராட்டத்தில் அனைத்து ஆட்டோ சங்கங்களை சேர்ந்த திரளான ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்றனர்.