Pages

ShareThis

Powered by Blogger.
 
Sunday, May 8, 2011

புதுச்சேரி துனைநிலை ஆளுநர் இக்பால் சிங்கை திரும்பபெறக்கோரி கையெழுத்து இயக்கம்

0 comments

புதுச்சேரி மே 8
புதுச்சேரி துனைநிலை ஆளுநர் இக்பால் சிங்கை திரும்பபெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
கருப்பு பணமோசடி மன்னன் ஹசன் அலிக்கு போலி பாஸ்போர்ட் எடுத்து கொடுத்த வழக்கிளும் புதுச்சேரி அமைச்சரவைக்கே தெரியாமல் தனது மகன்கள் இடம் பெற்றுள்ள சவுத் எஜிகேஷ்னல் டிரஸ்டிற்கு காரைக்காலில் மருத்துவ கல்லுhரி துவங்க தடை இல்லா சான்றிதழ் வழங்கிய குற்றத்திலும் சிக்கியுள்ள ஆளுநர் இக்பால்சிங்கை உடனே மத்திய அரசு திரும்பபெறக்கோரி புதுச்சேரி முழுவதும் பல்வேறு கட்ட போரட்டங்கள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து புதுச்சேரி மக்களிடையே கையெழுத்து நடைபயண இயக்கம் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி நேருவீதியில் சனிக்கிழமை துவங்கிய இவ்வியக்த்திற்கு நகர கமிட்டி செயலாளர் ஜி.சீனூவாசன் தலைமை தாங்கினார்.மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து பேசினார்.கட்சியின் பிரதேச செயலாளர் வி.பெருமாள் கண்டன உரையாற்றினார்.செயற்துகுழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,உழவர்கரை செயலாளர் லெனின்துரை,பிரதேசக்குழு உறுப்பினர் பிரபுராஜ் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் திரளாக கருப்பு பேட்ஜ் அனிந்தவாறு பங்கேற்றனர்.முன்னதாக நேருவீதியில் துவங்கிய நடைபயண இயக்கம் மிஷ்ன் வீதி,ரங்கபிள்ளைவீதி உள்ளிட்ட புதுச்சேரி நகரம் முழுவதும் நடைபெற்றது. அப்போழுது நுhற்றுக்கனக்கான மக்களை சந்தித்து கையெப்பம் பெறப்பட்டது.திங்கள்கிழமையும்,செவ்வாய்கிழமையும் இவ்வியக்கம் நடைபெறுகிறது.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com