Pages

ShareThis

Powered by Blogger.
 
Wednesday, January 25, 2012

இந்திராநகரில் தீ விபத்தால் எரிந்த வீடுகளுக்கு தலா ஐந்து லட்சம் வழங்க கோரி

0 comments

புதுச்சேரி,ஜன-22,
இந்திராநகரில் தீ விபத்தால் எரிந்த வீடுகளுக்கு தலா ஐந்து லட்சம் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்ய+னிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அடுத்த சாமிப்பிள்ளை தோட்டம் இந்திராநகரில் த Pவிபத்தால் வீடுகளையும,; உடமைகளையும் இழந்த மக்களுக்கு உடனடியாக வீடுகளை கட்டிகொள்ள தலா 5லட்சம் வழங்க வேண்டும்.குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவனங்களை இழந்தவர்களுக்கு மாற்று ஆவணத்தையும்,உடமைகளையும் வழங்க வேண்டும்.தற்காலிக குளியல் அறை மற்றும் கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இ;;ப்போராட்;டம் நடைபெற்றது.
கருவடிகுப்பத்தில் நடந்த ஆர்பாட்டத்திற்கு கட்சியின் உழவர்கரை நகர கமிட்டி செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் ராஐhங்கம்,பிரதேசகுழு உறுப்பினர் நடராஜன்,மாதர் சங்க பிரதேசதலைவர் தெய்வானை,செயலாளர் சத்தியா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இப்போராட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
Read more...
Saturday, January 21, 2012

மத்திய அரசின் தொகுப்பு நிதியிலிருந்து ஜிப்மர் ஊழியர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும் என்று போராட்டக்குழு வலியுறுத்தியுள்ளது

0 comments

புதுச்சேரி,ஜன-21
மத்திய அரசின் தொகுப்பு நிதியிலிருந்து ஜிப்மர் ஊழியர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும் என்று போராட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.

ஜிப்மர் தன்னாட்சி எதிர்ப்பு மக்கள் போராட்டக்குழு தலைவர் தா.முருகன்,பொதுச்செயலாளர் பாலமோகனன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவரம் வருமாறு,
புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையை தன்னாட்சி நிருவனமாக மத்திய அரசு மாற்றுவதற்கு முயற்சி செய்த போது ஊழியர்களும்,பொதுமக்களும் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் அடங்கிய பொராட்டக்குழுவின் கோரிககைகள் முன்வைக்கபபட்டது.அதன்படி
ஜப்மர் ஊழியர்கள் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களாக நீடிப்பது,புதுச்சேரி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிக்கான இடஒதுக்கீடு,புதுச்சேரி வேலைவாய்பு அலுவலகம் மூலம் காலிபணிகளை நிரப்புவது,உள்ளிட்ட கோரிக்கைகள் கொண்ட திருத்தங்களின் ஒப்புதலோடு பாராளுமன்றத்தில் ஜிப்மர் மசோதா ஏற்றுகொள்ளப்பட்டது.
அதன்படி ஊழியர்களுக்கு மத்திய அரசின் தொகுப்பு நிதியிலிருந்து ஓயவ+தியம் அளிப்பது என்ற உறுதியை மத்திய சுகாதாரத்துறையும் ஏற்றுகொண்டது.அதன்படி தற்போது பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு ஓய்வ+தியம் வழங்கிவருவதைப்போல் ஜிப்மர்ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்.அனால் ; ஓய்வ+தியம் வழங்குவதற்கான ஆணையில் மத்திய ஓய்வ+திய்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கமால் மறுத்துவருகிறது.இத்துறையின் அமைச்சராக புதுச்சேரியை சேர்ந்த வே.நாராயணசாமி பொறுப்புவகித்துவருகிறார் அவரும் இதற்கு ஒப்புதல் அளிக்க மருத்துவருவது கண்டனத்துகுறியது.இதேநிலை நீடிக்கும்மென்றால் புதுச்சேரியில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தை ஊழியர்களைதிரட்டி முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றனர்.
Read more...

புயல்நிவாரண நடவடிக்கைகளை துரிதபடுத்தக்கோரி விவாசாயிகள்,விவசாய தொழிலாளர்கள் சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

0 comments

புதுச்சேரி,ஜன-13
புயல்நிவாரண நடவடிக்கைகளை துரிதபடுத்தக்கோரி விவாசாயிகள்,விவசாய தொழிலாளர்கள் சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தானே புயலால் வீடிழந்த மக்களுக்கு சுத்தமான குடிநீர்,உணவு,மின்சாரம் உடணடியாக வழங்க வேண்டும்.பாதிக்கப்பட்ட நெல் ஏக்கருக்கு ரூ.20ஆயிரம் மும்,கரும்பு ஏககருக்கு ரூ.35ஆயிரமும்,வாழைக்கு ரூ.40ஆயிரமும்,தென்னை ஒன்றுக்கு ரூ.1500 ம் நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும்.சேதமடைந்த வீடுகயை கட்டி கொள்ள ரூ.20ஆயிரம் வழங்க வேண்டும்.காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தை உடன துவக்கவேண்டும்.தலித் மக்களுக்கு வீடுகட்டி கொள்ள ரூ.4லட்சம் மாண்யம் வழங்க வேண்டும்.100நாள் வேலை உறுதி திட்டத்தை உடனே துவக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
வில்லியனூர் வட்டாச்சியர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க பிரதேச தலைவர் எல்.கலிவரதன் தலைமை தாங்கினார்.செயலாளர் மணிபாலன் முன்னிலைவகித்தார்.சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் எஸ்.திருநாவுக்கரசு கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.சிபிஎம் கொம்யூன் செயலாளர் முருகையன்,வி.ச பிரதேச செயலாளர் எஸ்.பத்மநாபன்,கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் வடிவேலு,தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் ஜி.ராமசாமி,மாதர் சங்க தலைவர் தெய்வானை,உள்ளிட்ட ஜய்ப்பன்,ரத்திணவேல் உட்பட திரளான விவசாயிகள்,விவசாய தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
Read more...

புதுச்சேரி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வீட்டுவரியை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது

0 comments
ஐன-16,
மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவரம் வருமாறு,
தானே புயல் சேதத்தை மார்;க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கடந்த டிசம்பர் 31முதல ஐனவரி 5ஆம் தேதி வரை பார்வையிட்டு சேதாரமதிப்பீட்டுனையும்,கொடுக்க வேண்டிய நிவாரண தொகை குறித்து 6ஆம் தேதி மாநில முதல்வருக்கு விரிவான மனு ஒன்றை அளித்தோம்.மாநில அரசு கோரியுள்ள 2446 கோடியை மத்திய அரசு வழங்கவும்,சேதமதிப்பீட்டில் 50சதவீதத்தை உடனே மத்திய அரசு வழங்க மாநில அரசு வலியுறுத்தியது.தற்போது மாநில அரசு கோரிய தொகையில் மத்திய அரசு வெறும் 7சதவீதத்தை மட்டுமே வழங்கியிருப்பது எதிர்;கட்சிகள் ஆளுகின்ற மாநிலத்தில் மாற்றாந்தாய் மணப்பான்மையை காங்கிரஸ்கட்சியினால் ; காட்டபடுவது வெட்டவெளிச்சம்.
மேலும் முதல்வர் அறிவித்துள்ள நிவாரணம் ஏற்றுகொள்ள தக்கதல்ல மார்க்சிஸ்ட் கட்சி கோரியபடி விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.20ஆயிரமும்,தென்னை மரத்திற்கு 2ஆயிரமும்,வீடுகளுக்கு தலா 20ஆயிரமும்,முறைசார தொழிலாளர்களுக்கும் நிவாரணம் அரசு வழங்க வேண்டும்.மாநில அரசு புதுச்சேரியை பேரிடர் பகுதியாக அறிவத்துள்ள நிலையில் மத்திய அரசும் பேரிடர்பகுதியாக அறிவிக்க வேண்டும்.

மேலும் தானேபுயலால் பாதிக்கபட்டுள்ள புதுச்சேரியில் நகராட்சி நடப்பாண்டுக்கான வீட்டுவரி அறிவித்து இருப்பதும்,வரியை கட்டதவறினால் வீட்டை ஐப்திசெய்யப்படும் என்று அறிவித்திருப்பது மிகவும் கண்டனத்துக்குறியது.எனவே புதுச்சேரி அரசு இந்தாண்டுக்கான வரியை ரத்து செய்ய வேண்டும். பொருட்களுக்கான வாட்வரி,பேருந்து கட்டண உயர்வு கண்டனத்துகுறியது.எனவெ மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத கோள்கைகளை கண்டித்து தானே புயலால் பாதிக்கபட்டுள்ள மக்களுக்கு உடணடியாக முழு நிவாரணத்தை உடனே வழங்க வலியுறுத்தி ஐனவரி 21முதல்27வரை புதுச்சேரி பிரதேசம் முழுவதும் தெருமுனை பிரச்சாரமும்,பிப்ரவரி முதல் வாரத்தில் ஆர்பாட்டமும் கட்சியின் சார்பில் நடைபெறும்.
மேலும் புதுச்சேரியில் உள்ள ஐpப்மர்மருத்தவனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவனையாக அந்தஸ்த்து பெற்றாலும் தொடர்ந்து மத்திய அரசின் கட்டுபாட்டிலேயே இயங்கும் என பாரளுமன்றத்தில் உறுதி கூறப்பட்டது.
இந் நிலையில் தற்போது ஐப்மரில் உள்ள ஊழியர்களுக்கு பென்சன் திட்டம் பழையநிலையெ தொடராமல் உறுதி மொழிக்கு மாறாக மத்திய ஓய்ஊதிய துறை அமைச்சராக உள்ள வே.நாராயணசாமி பென்சன் திட்டத்தில் கைப்பம்மிட மறுத்துவருகிறார் இதே நிலை தொடருமே ஆனால் புதுவையில் உள்ள அவரது அலுவலகத்தை ஐpப்மர் ஊழியர்களொடு மார்க்சிஸ்ட் கட்சி முற்றுகை போராட்டம் நடத்தும் என்றனர.இவ்வாறு கூறினார்கள்;.


1.புதுச்சேரியில் பேருந்து கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து மார்க்சிஸ்ட்கட்சியின் நகரகமிட்டி சார்பில் நெல்லிதோப்பு கடைவீதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினர் ராஐhங்கம்,நகரகமிட்டி செயலாளர் பிரபுராஐ;,கமிட்டி உறுப்பினர் சரவணன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
Read more...
Thursday, January 12, 2012

வெடிகுண்டு வீசிய ரவுடிகளை தமிழக அரசு கைது செய்யக்கோரி புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

0 comments

புதுச்சேரி,ஜன-11
நில அபகரிப்பை எதிர்த்து போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துhத்துகுடி மாவட்ட செயலாளர் கே.கனகராஜ் வீட்டின் மீது வெடிகுண்டு வீசிய ரவுடிகளை தமிழக அரசு கைது செய்யக்கோரி புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
துhத்துகுடி மாவட்டம் தெய்வசெயல்புரம் கிராம விவசாயிகளின் நிலங்களை திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.செல்வம் தனது பினாமிகளின் பெயரில் மோசடியான ஆவணம் தயாரித்து அவகரிக்க முயன்றதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியும்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் இணைந்து போராடிவருகின்றனர்.இந்நிலையில் ஜன-6ல் சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.கனகராஜ் வீட்டின் மீது நில அபகரிப்பு கும்பல் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தியுள்ளனர்.நடந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை கைதுசெய்யகோரியும்.நில அவகரிப்பு கும்பல் மீது பாரபட்சமான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி காந்திவீதி நேருவீதி சந்திப்பில் நடந்த போராட்டத்திற்கு கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இப்போரட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் நிலவழகன்,ராமச்சந்திரன்,கலிவரதன் இடைகமிட்டி செயலாளர்கள் பிரபுராஜ்,முருகையன்,தமிழ்ச்செல்வன்,சரவணன் உள்ளிட்ட பிரதேசக்குழு உறுப்பினர்கள் உட்பட திரளான கட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
Read more...

அமைப்புசார தொழிலாளர்களின் நலச்சங்கமூலமாக புயல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்திய தொழிற்சங்கம் மையம் சிஜடியு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது

0 comments
புதுச்சேரி,ஜன-7
அமைப்புசார தொழிலாளர்களின் நலச்சங்கமூலமாக புயல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்திய தொழிற்சங்கம் மையம் சிஜடியு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்த சிஜடியு புதுவை மாவட்ட செயலாளர் கே.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிறுப்பதாவது,
புதுச்சேரி பகுதியை தானே புயல் மிகக் கொடுராமாக தாக்கியதன் விளைவாக புதுசேசரி நகரம் உட்பட அனைத்து பகுதிமக்களும் கடுமையாக பாதித்து ஸ்தம்பித்த நிலையில் அன்றாட உழைப்பின் மூலம் வருமானத்தை நம்பியுள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தை இழந்தது மட்டுமின்றி தங்கள் வாழ்வாதாரங்களையும் இழந்து வாடி வருகின்றனர்.இந்த அசாதாரண சூழ்நிலையில் கட்டுமான நலவாரியம் மற்றும் அமைப்புசாரா நலச்சங்கம் மூலமாக முறைச்சாரா தொழிலாள்ரகளுக்கு புயல் நிவாரணம் உடனடியாக வழங்கிடு மாறு புதுச்சேரி அரசை சிஜடியு வலியுறுத்துகிறது.
மேலும் புயல் தீவிரம் காரணமாக பெரும்பாலான தொழிற்சாலைகள் பாதிப்புகுள்ளாகியுள்ளன. சேதாராப்பட்டு உள்ளிட்ட அனைத்து தொழிற்பேட்டைகளும் மரங்கள் விழுந்தும் சாலை போக்குவரத்து மற்றும் மின்சாரம் இல்லாமலும் தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன.இதனால் தொழிலாளர்கள் வேலையின்றி உள்ளனர். பாராம்பரியமிக்க எ.எப்.டி சுதேசி மற்றும் பாரதி பஞ்சாலைகள் புயலின் தீவிரத்தால் முற்றிலும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டு முடங்கிப் போயுள்ளன.அரசின் தொழில்துறையும் ,தொழிலாளர்துறையும் விரைந்து செயல்பட்டு தொழிற்சாலைகளை மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்கவும் அனைத்து வகைபட்ட தொழிலாளர்களும் வருமான இழப்பின்றி பணியாற்றிட தேவைப்படும் நிவாரண உதவிகளை செய்திடுமாறும் சிஜடியு புதுச்சேரி அரசைக் கொட்டுகொள்கிறது.மேலும் மத்திய குழுவின் பார்வைக்கு பஞ்சாலைகள்,தொழிற்சமாலைகள் ,தொழிலாளிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கொண்டு செல்ல வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com