Pages

ShareThis

Powered by Blogger.
 
Saturday, February 11, 2012

CPIM Kerala State committee

0 comments

CPIM Kerala State committee has decided to hold the 20th cpim party congress at Kozhikode on April 2012. Earlier it was decided at the Central Committee meeting held in the last month decided to hold the 20th Party Congress in Kerala. The state committee conference at Thiruvananthapuram.
Read more...
Thursday, February 9, 2012

தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு போர்கால அடிப்படையில் நிவாரணம் வழங்ககோரி

0 comments

புதுச்சேரி,பிப்-9
தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு போர்கால அடிப்படையில் நிவாரணம் வழங்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
தானே புயலால் வீடு இழந்த மக்களுக்கும்,விவசாய நிலங்களை இழந்த விவசாயிகளுக்கும்,புதுச்சேரி அரசு அறிவித்த நிவாரணத்தை இரட்டிப்பாக உயர்த்தி வழங்க வேண்டும்.மாநில அரசு கோரி இருந்த நிவாரணத்தொகை ரூ.2500கோடி மத்திய அரசு பாராபட்சமில்லாமல் வழங்க வேண்டும்.அதிகரித்துள்ள சமூக குற்றங்களை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி தலைமை தபால்நிலையம் எதிரில் நடந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை தாங்கினார்.மாநிலக்குழு உற்ப்பினர் தா.முருகன் ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,ராஜாங்கம்,கலிவரதன்,ராமசாமி,முருகன்,ராமச்சந்திரன்,சுமதி இடைகமிட்டி செயலாளரகள் பிரபுராஜ்,லெனின்துரை,தமிழ்ச்செல்வன்,சரவணன்,கொளஞ்சியப்பன்,முருகையன் உள்ளிட்ட பிரதேசக்குழு உறுப்பினர்கள்,கிளைசெயலாளர்கள் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
Read more...

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவரம் வருமாறு

0 comments

புதுச்சேரி,பிப்-7
புதுச்சேரி ஆளுநர் இக்பால்சிங்; நீக்ககோரி; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்;ட் கட்சி தாக்கல் செய்த மனு மீது நான்குவாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
;.இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோர் கூட்டாக செவ்வாயன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவரம் வருமாறு,
புதுச்சேரி துனணநிலை ஆளுநர் இக்பால்சிங் தனது மகன்கள் இடம்பெற்றிருந்த சவுத் டிரஸ்ட என்ற அறக்கட்டளைக்கு காரைக்காலில் மருத்துவகல்லூரி துவங்க தடையில்லா சான்று வழங்கினார்.புதுச்சேரி அமைச்சரவைக்கு தெரியாமல் தனது அதிகாரத்தை தவறாக பயண்படுத்திய ஆளுநரை பதவி நீக்கம் செய்யக்கோரி சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தோம்.மேலும் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார்.
.வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மார்க்சிஸ்ட் கட்சிகூறிய குற்;;;;றசாட்டின் ஆதரங்களை எடுத்து கொண்டது.மேலும் ஆளுநர் மீது மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதன்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தயது.மேலும் மனுதாரர் மேல்நடவடிக்கைக்கு செல்ல கோர்ட் தடையாக இருக்காது என்று கூறி இருந்தனர்.
அதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்காத நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தோம்.அதன்படி பிப்ரவரி 3ஆம்தேதி மனுவை ஏற்றுகொண்ட நீதிபதிகள் ஆளுநர் இக்பால்சிங் மீதான புகார் குறித்து புதுச்சேரி அரசம்,மத்திய உள்துறை அமைச்சகமும் நான்கு வாரத்திற்குள் பதிலளிக்;க வேண்டும்; என்று உத்தரவிட்டுள்ளனர்.
இதன்படி ஆளுநரை மத்திய அரசு உடனே திரும்பபெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட்கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது என்றனர்.

மேலும் புதுச்சேரி பிரதேசம் மாபியா கும்பல் நிரைந்த நகரமாக மாறியுள்ளது.2006ஆம் ஆண்டு முதல் 2011வரை காங்கிரஸ் ஆட்சி காலங்களில் தொடர்ந்து குற்றங்கள் அதிகரித்து வந்துள்ளது.தற்போது என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியிலும் குற்றங்கள் அதிகரித்துள்ளது.இதனாலே சமிபநாட்களாக வர்த்தகர்களை சமுக விரேத காரியத்தில் ஈடுபடுபவர்கள் மிரட்டுவதும்,தாக்குவதும் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துவருகிறது.
காவல்துறையின் தவறான அனுகுமுறையும்,ஆட்சியாளர்களின் கொள்கைகளுமே இதற்கு காரணமாகும்.
மேலும் ஜி தங்கும் விடுதியில் பெண் பாலியலுக்கு உட்படுத்தபட்ட சம்பவத்தில் அப்பெண் காவல்துறை கட்டுபாட்டிலிருந்து காணாமல் போன சம்பவம் தொடர்பாக மாநில முதல்வர் தலையிட வேண்டும்.ஏனாமில் நடந்த ரிஜென்சி செராமிக்ஸ் நிறுவன பிரச்சனை 92ஆம்ஆண்டிலிருந்தே நிலவிவந்துள்ளது.தற்போது மாவட்ட அளவிளான விசாரனை உண்மை மூடிமறைக்கும் வேலை எனவே உயர்மட்ட விசாரணைக்கு மாநில முதல்வர் உத்தரவிட வேண்டும.சிபிஎம் தமிழக சட்டமன்ற குழு தலைவர் அ.சவுந்தரராசன் பிப்பரவரி 10ஆம்தேதி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வலியுறுத்த உள்ளனர்.மேலும் ஏனாம் பிரச்சனை தொடர்பாக சிஐடியு சார்பில் தமிழக மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்பாட்டமும் அன்றைய தினத்தில் நடைபெறுகிறது.மேலும் தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணத்ததை வழங்க கோரி பிப்ரவரி 9ஆம்தேதி தலைமை தபால்நிலையம் எதிரில் கண்டன ஆர்பாட்டமும் கட்சியின் பிரதேசக்குழு சார்பில் மத்திய,மாநில அரசுகளை வலிறுத்தி நடைபெறுகிறது என்றனர்.
இவ்வாறு கூறினார்கள்.செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் உடன் இருந்தார்.
Read more...
Friday, February 3, 2012

நிவாரணம் வழங்க கோரி

0 comments

புதுச்சேரி,பிப்-1
தானே புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்,விவசாய தொழிலாளர்களக்கு நிவாரணம் வழங்க கோரி புதுச்சேரி சட்டமன்றம் முன்பு ஆர்பு;பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலத்திற்கு புயல்பாதிப்பு நிவாரணமாக மத்திய அரசு ரூ.2500கோடி நிவாரணம் வழங்க வேண்டும்.புதுச்சேரி அரசு விவசாயிகளுக்கு அறிவித்த நிவராணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.விவசாய பயிர்களுக்கு ஒரு எக்டெருக்கு என்று அறிவித்துள்ள நிவாரணத்தொகையை ஒரு ஏக்கருக்கு என்று அறிவிக்க வேண்டும்.சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.20ஆயிரம் வழங்க வேண்டும்.விவசாயிகள் அரசு வங்கிகளில் வாங்கியுள்ள விவசாய நகை கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.நூறுநாள்வேலை உறுதிதிட்டத்தை உடனே துவக்க வேண்டும்.புயல்பாதித்த பகுதியான காரைக்காலுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சட்டமன்றம் எதிரே நடந்த இப்போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பிரதேச தலைவர்; நிலவழகன்,விவசாய தொழிலாளர் சங்க பிரதேச தலைவர் கலிவரதன் ஆகியயோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.இ;ப்போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விவசாயிகள் சங்கத்தின் தமிழ்மாநில பொதுச்செயலாளர் பி.சண்முகம் கலந்து கொண்டு ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,விவசாய சங்க செயலாளர் பத்மநாபன்,விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் மணிபாலன் மற்றும் நிர்வாகிகள் சரவணன்,ராமமூர்த்தி,வடிவேல்,சிவப்பிரகாசம்,சேகர்,மாதர் சங்க பிரதேச தலைவர் தெய்வானை உள்ளிட்ட திரளாக விவசாயிகள்,விவசாய தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கெற்றனர்.
முதல்வர் உறுதி
போராட்டத்தின் இறுதியில் முதல்வர் என்.ரங்கசாமியை சங்கத்தின் தமிழ்மாநில பொதுச்செயலாளர் பி.சண்முகம்,பிரதேச நிர்வாகிகள் நிலவழகன்,கலிவரதன்,பத்மநாபன்,மணிபாலன் ஆகியோர் கோரிக்கை மனுவை கோடுத்தனர்.மனுவை பெற்று கொண்ட முதல்வர் புயல் நிவாரணம்; பாதிக்க பட்ட விவசாயிகளுக்கு வழங்க அரசு தயாராக உள்ளது.அதேப்போல் காரைக்கால் விவசாயிகளுக்கும் புயல் நிவாரணம் வழங்கபடும் என்றார்.இதேப்போல் வேலான் அமைச்சர் சந்திரகாசு வை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
முன்னதாக விவசாயிகள்,விவசாய தொழிலாளர்கள் பழையபேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சட்டமன்றமும் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Read more...

இளம் பெண்ணை ஈடுபடுத்திய சம்பவத்தில் உண்மை குற்றவாலிகளை கைது செய்யக்கோரி

0 comments

புதுச்சேரி,பிப்-3
புதுச்சேரி ஜி தங்கும் விடுதியில் பாலியல் தொழிலில் இளம் பெண்ணை ஈடுபடுத்திய சம்பவத்தில் உண்மை குற்றவாலிகளை கைது செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அண்ணாசாலையில் உள்ள ஜி தங்கும் விடுதியில் இளம் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற
போது விடுதியின் ஜன்னலில் இருந்து கூச்சலிட்டதால் அப்பெண்ணை அருகில் இருந்து பெரியகடை காவல் நிலையத்தில் ஒப்படைக்கபட்டது.அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் விடுதியின் உரிமையாளர் உட்பட 5பேர் மீது வழக்கு பதிவ செய்யப்பட்டது.மேலும் பாதிக்க பட்ட இளம் பெண் ரம்யா (17)மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு ரம்யா திடிரென்று
மாயமானார்.காவல்துறை கட்டுபாட்டில் இருந்த போது ரம்யா மாயமானது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியது.அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம்,வாலிபர் சங்கங்களின் போராட்டத்தாலும்,மார்க்சிஸ்ட் கட்சியின் தலையீட்டால் இவ்வழக்கை சிஐடி பிரிவுக்கு மாற்றபட்டது.
இந்நிலையில் இரண்டு மாதமாகியும் காணமல் போன ரம்யாவை கண்டுபிடிக்காததை கண்டித்தும்.இவ்வழக்கில் விடுதி
உரிமையாளர் உள்ளிட்ட உண்மை குற்றவாலிகளை காவல்துறை கைது செய்யாததை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
அண்ணாசாலை கோவிந்தசாலை சந்திப்பில் நடந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ் தலைமை தாங்கினார்.உழவர் கரை நகர செயலாளர் லெனின்துரை முன்னிலை வகித்தார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,மாநிலக்குழு
உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,ராமச்சந்திரன்,சுமதி,மாதர்சங்க பிரதேச தலைவர் தெய்வானை,நிர்;வாகிகள் ஜெயலக்ஷ்மி உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
Read more...

பந்த் போராட்டம் - ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிசெய்ய கூடிய ரிஜென்சி செராமிக்ஸ் தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று சிஐடியு மாவட்ட செயலாளர்

0 comments






புதுச்சேரி,பிப்-2
ஏனாம் சம்பவத்தை கண்டித்து புதுச்சேரியில் வணிகர்கள் ஆதரவோடு பந்த் போராட்டம் அமைதியாக நடைபெற்றது.
ஏனாம் ரீஜென்சி செராமிக்ஸ் நிறுவனத்தின் தொழிற்சங்க தலைவர் முரளிமோகன் மரணம் தொடர்பாக உயர்நீதி மன்ற நீதிபதி கொண்டு விசாரிக்க வேண்டும்.;.இறந்த தொழிலாளி முரளிமோகன் குடும்பத்திற்கு ரூ.25லட்சம் வழங்க வேண்டும்.இச் சம்பவத்தை தொடர்ந்து போலிஸாசாரின்; துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 9தொழிலாளர்களுக்கு தலா ரூ.10லட்சம் வழங்க வேண்டும்.தொழிற்சங்க உரிமை, தொழிலாளர்கள்
உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று(பிப்-2) சிஐடியு,ஏஐடியுசி,பிஎம்எஸ்,ஏஐசிசிடியு,டியுசிசி,யுடியுசி,உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் அரைகூவலுக்கு இனங்க புதுச்சேரி மாநிலம் தழுவிய முழு பந்த் போராட்டம் வியாபார காடைகள்,வர்த்தக நிறுவனங்கள், பேருந்து,ஆட்டோ,டெம்போ உரிமையாளர்களின் ஆதரவோடு அமைதியாக நடைபெற்றது.
வர்த்தக சபையின் உத்தரவை மீறி
பந்த் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த வர்த்தக சபை தலைவர் சென்பகராஜன் கடைகள் திறந்திருக்கும் என்று அரசுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுருந்தார். மேலும் வியாழனன்று காலை நேருவீதியில் மூடப்பட்டு இருந்த வணிக உரிமையாளர்களை வலுகட்டாயமாக கடைகளை திறக்க வலிறுத்தினர்.வர்த்தக சபை தலைவர்களின் வேண்டுகோலை மீறி வணிகர்கள் தங்களது கடைகளை திறக்க
மருத்தனர்.உடனே மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோரும் சம்பவஇடத்திற்கு வந்தனர்.இச்சம்பவத்தால் சிறிது நேரம் நேருவீதியில் பரபரப்பு காணப்பட்டது.புதுச்சேரி நகர பகுதியான நேருவீதி,அண்ணாசாலை,பெரியஆங்காடி, காந்தி வீதி,பாரதி வீதி,சின்னகடை,மறைமலை அடிகள் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் அதேபோல் கிராபுரங்களான
முத்தியாள்பேட்டை,நெல்லிதோப்பு,அரியாங்குப்பம்,வில்லியனூர்,லாஸ்பேட்டை,பாகூர்,மதகடிப்பட்டு,திருக்கனூர், ஆகிய பகுதிகளில் உள்ள வணிக கடைகளும் முற்றிலும் மூடப்பட்டிருந்தது.
பேருந்துகள்; ஓடவில்லை
புதுச்சேரியில் பெரும்பாளான வழிதடங்களில் தனியார் பேருந்துகளே இயக்கபடுகிறது.இப்போராட்டத்திற்கு தனியார்பேருந்து உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்திருந்தால் அரசு பேருந்தான பிஆர்டிசி பேருந்துகளை மட்டுமே போலீஸ் பாதுகாப்போடு பயணிகள் கூட்டம் இல்லாமல் இயக்கபட்டது.அரசு பள்ளிகள் போலீஸ் பாதுகாப்போடு இயக்கப்பட்டது.தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
அறிவிக்கப்பட்டது.இதேப்போல் காரைக்காலிலும்,மாகே,ஏனாம் ஆகிய பகுதிகளுலும் பந்த் போராட்டம் நடைபெற்றது.இப்Nபுhராட்டத்திற்கு முதலில் ஆதரவு அளித்திருந்த ஐஎன்டியுசி,தொமுச,ஏடியு பின்னர் முழு அடைப்பிற்கு ஆதரவு அளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
ஆதரவளித்தவர்களுக்கு சிஐடியு நன்றி
ஏனாம் சம்பவத்தை கண்டித்தும் சிஐடியு,ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்திருந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு புதுச்சேரிமுதல்வர்,வர்த்தக சபை ஆகியோரின் வேண்டுகோலை மீறி ஆதரவு அளித்து தங்களது எதிரப்;புகளை பதிவு செய்துள்ள வர்தக நிறுவனங்களுக்கும்,பேருந்து,ஆட்டோ,உரிமையாளர்களுக்கும்,அனைத்து தொழிலாளர்களுக்கும்,மார்க்சிஸ்ட்,இந்திய
கம்யுனிஸ்ட்,விடுதலை சிறுத்தைகள் கட்சி,பிஜேபி,பார்வர்டு பிளாக்,மார்க்சிஸ்ட்-லெனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கும் சிஜடியு மாவட்டக்குழு சார்பில் தனது நன்றியை தெரிவித்து கொள்கிறது.புதுச்சேரி அரசு தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதோடு ஏனாம் பகுதி நிர்வாகத்திற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரியை பணியில் அமர்த்த வேண்டும்.ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிசெய்ய
கூடிய ரிஜென்சி செராமிக்ஸ் தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று சிஐடியு மாவட்ட செயலாளர் கே.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
Read more...
Thursday, February 2, 2012

ஏனாம் காவல்நிலையத்தில் தொழிலாளி மரணத்தை கண்டித்து புதுச்சேரியில் இன்று நடைபெறும் பந்த் போராட்டத்தை விளக்கி தெருமுனைப்பிரச்சாரம்

0 comments

புதுச்சேரி,பிப்-1
தானே புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்,விவசாய தொழிலாளர்களக்கு நிவாரணம் வழங்க கோரி புதுச்சேரி சட்டமன்றம் முன்பு ஆர்பு;பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலத்திற்கு புயல்பாதிப்பு நிவாரணமாக மத்திய அரசு ரூ.2500கோடி நிவாரணம் வழங்க வேண்டும்.புதுச்சேரி அரசு விவசாயிகளுக்கு அறிவித்த நிவராணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.விவசாய பயிர்களுக்கு ஒரு எக்டெருக்கு என்று அறிவித்துள்ள நிவாரணத்தொகையை ஒரு ஏக்கருக்கு என்று அறிவிக்க வேண்டும்.சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.20ஆயிரம் வழங்க வேண்டும்.விவசாயிகள் அரசு வங்கிகளில் வாங்கியுள்ள விவசாய நகை கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.நூறுநாள்வேலை உறுதிதிட்டத்தை உடனே துவக்க வேண்டும்.புயல்பாதித்த பகுதியான காரைக்காலுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சட்டமன்றம் எதிரே நடந்த இப்போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பிரதேச தலைவர்; நிலவழகன்,விவசாய தொழிலாளர் சங்க பிரதேச தலைவர் கலிவரதன் ஆகியயோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.இ;ப்போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விவசாயிகள் சங்கத்தின் தமிழ்மாநில பொதுச்செயலாளர் பி.சண்முகம் கலந்து கொண்டு ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,விவசாய சங்க செயலாளர் பத்மநாபன்,விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் மணிபாலன் மற்றும் நிர்வாகிகள் சரவணன்,ராமமூர்த்தி,வடிவேல்,சிவப்பிரகாசம்,சேகர்,மாதர் சங்க பிரதேச தலைவர் தெய்வானை உள்ளிட்ட திரளாக விவசாயிகள்,விவசாய தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கெற்றனர்.
முதல்வர் உறுதி
போராட்டத்தின் இறுதியில் முதல்வர் என்.ரங்கசாமியை சங்கத்தின் தமிழ்மாநில பொதுச்செயலாளர் பி.சண்முகம்,பிரதேச நிர்வாகிகள் நிலவழகன்,கலிவரதன்,பத்மநாபன்,மணிபாலன் ஆகியோர் கோரிக்கை மனுவை கோடுத்தனர்.மனுவை பெற்று கொண்ட முதல்வர் புயல் நிவாரணம்; பாதிக்க பட்ட விவசாயிகளுக்கு வழங்க அரசு தயாராக உள்ளது.அதேப்போல் காரைக்கால் விவசாயிகளுக்கும் புயல் நிவாரணம் வழங்கபடும் என்றார்.இதேப்போல் வேலான் அமைச்சர் சந்திரகாசு வை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
முன்னதாக விவசாயிகள்,விவசாய தொழிலாளர்கள் பழையபேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சட்டமன்றமும் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


புதுச்சேரி,பிப்-1
ஏனாம் காவல்நிலையத்தில் தொழிலாளி மரணத்தை கண்டித்து புதுச்சேரியில் இன்று நடைபெறும் பந்த் போராட்டத்தை விளக்கி தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
ஏனாம் ரீஜென்சி செராமிக்ஸ் நிறுவனத்தின் தொழிற்சங்க தலைவர் முரளிமோகன் மரணம் தொடர்பாக உயர்நீதி மன்ற நீதிபதி கொண்டு விசாரிக்க வேண்டும்.இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.25லட்சம் வழங்க வேண்டும்.போலிஸாசாரின்; துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 9தொழிலாளர்களுக்கு தலா ரூ.10லட்சம் வழங்க வேண்டும்.தொழிற்சங்க உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (பிப்-2) புதுச்சேரி மாநிலம் தழுவிய முழு பந்த் போராட்டத்திற்கு வியாபார காடைகள்,வர்த்தக நிறுவனங்கள்,பேருந்து,ஆட்டோ,டெம்போ, உரிமையாளர்கள்,பொதுமக்கள் ஆகியோரிடம் ஆதரவு கேட்டு வாகன தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
புழைய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய வாகன தெருமுனைப்பிரச்சாரத்திற்கு ஏஐடியுசி மாநில தலைவர் அபிஷேகம் தலைமை தாங்கினர்.சிஐடியு மாவட்ட செயலாளர் முருகன்,ஏடியு தலைவர் பாப்புசாமி,பிஎம்எஸ் தலைவர் ராமச்சந்திரன்,ஏஐடியுசிசி நிர்வாகி மோதிலால் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் இப்பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.

ஆரசியல் கட்சிகள்
முதலியர் பேட்டையில் நடந்த தெருமுனைப்பிரச்சாரத்தில் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.விசுவநாதன்,தேசியக்குழு உறுப்பினர்; நாரா.கலைநாதன்,மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில குழு உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,பார்வர்டு கட்சி தலைவர் முத்து,விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பொருளாளர் இளவரசன்,ராஷ்டிர ஜனதாதளத் தலைவர் சஞ்சீவ்,பிஎஸ்பி தலைவர் சோமசுந்தரம் ஆகியோர் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு பேசினார்கள்.
புதுச்சேரி பிரதேசத்தில் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ்,என்.ஆர்.காங்கிரஸ்,திமுக ஆகிய கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com