Pages

ShareThis

Powered by Blogger.
 
Thursday, February 9, 2012

தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு போர்கால அடிப்படையில் நிவாரணம் வழங்ககோரி

0 comments

புதுச்சேரி,பிப்-9
தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு போர்கால அடிப்படையில் நிவாரணம் வழங்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
தானே புயலால் வீடு இழந்த மக்களுக்கும்,விவசாய நிலங்களை இழந்த விவசாயிகளுக்கும்,புதுச்சேரி அரசு அறிவித்த நிவாரணத்தை இரட்டிப்பாக உயர்த்தி வழங்க வேண்டும்.மாநில அரசு கோரி இருந்த நிவாரணத்தொகை ரூ.2500கோடி மத்திய அரசு பாராபட்சமில்லாமல் வழங்க வேண்டும்.அதிகரித்துள்ள சமூக குற்றங்களை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி தலைமை தபால்நிலையம் எதிரில் நடந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை தாங்கினார்.மாநிலக்குழு உற்ப்பினர் தா.முருகன் ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,ராஜாங்கம்,கலிவரதன்,ராமசாமி,முருகன்,ராமச்சந்திரன்,சுமதி இடைகமிட்டி செயலாளரகள் பிரபுராஜ்,லெனின்துரை,தமிழ்ச்செல்வன்,சரவணன்,கொளஞ்சியப்பன்,முருகையன் உள்ளிட்ட பிரதேசக்குழு உறுப்பினர்கள்,கிளைசெயலாளர்கள் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com