Pages

ShareThis

Powered by Blogger.
 
Thursday, June 28, 2012

புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வை உடனடியாக திரும்பபெறக்கோரி

0 comments
புதுச்சேரி,ஜூன்-26
புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வை உடனடியாக திரும்பபெறக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 கட்டுமான பணிகளில் நடந்துள்ள ஊழல் முறைகேடுகள் குறித்து சிபிஜ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.பல்கலைகழகத்தால் 100மடங்கு உயர்த்தப்பட்ட கட்டணத் உயர்வை  உடனே திரும்ப பெறவேண்டும்.பல்கலைகழகத்தில் நடந்த மதிப்பெண் மோசடியை கண்டறிந்த ஊழியர் ஜெயராமன் படுகொலை வழக்கை  சிபிஐ  விசாரணைக்கு மாற்றப்பட்டு  இன்னும் குற்றவாலிகளை கண்டுபிடிக்க படவில்லை.எனவே உடணடியாக குற்றவாலிகளை கண்டுபிடிக்கவேண்டும்.பல்கலைகழகத்துக்கு நிலம் ஒதுக்கிய விவசாயிகளின் குடும்பத்தாருக்கு வேலை வழங்க வேண்டும்.புதிய துணைவேந்தரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
சின்ன காலாப்பட்டில் உள்ள பல்கலைகழக வாயில் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சி°ட் கட்சியின் உழவர்கரை நகர கமிட்டி செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,நிலவழகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இடைகமிட்டி செயலாளர்கள் சரவணன்,முருகையன்,தமிழ்ச்செல்வன்,பிரபுராஜ்,டிஒய்எப்ஜ பிரதேச செயாளர் ப.சரவணன்,பொருளாளர் ஆர்.சரவணன்,எஸ்எப்ஐ பிரதேச செயலாளர் ஆனந்து மற்றும் பல்கலைகழக மாணவர்கள் இப்போராட்டத்தில் திரளாக பங்கேற்றனர்.
Read more...
Wednesday, June 13, 2012
0 comments
புதுச்சேரி,ஜூன்-13
பாக்கி தொகை வழங்காத கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் காசோலை நகலை எரித்த கரும்பு விவசாயிகள் 70பேர் புதுச்சேரியில் கைது.
 புதுச்சேரி அரசுக்கு சொந்தமான லிங்காரெட்டியார்பாளைய  கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு  கரும்பு வெட்டி அனுப்பி பல மாதங்கள் ஆகியும் விவசாயிகளுக்கு பாக்கிதொகை வழங்காததை   கண்டித்தும்.காலதாமத தொகைக்கு 14சதவீத வட்டியுடன் பணப்பட்டுவாட செய்யகோரியும்,ஆலை நிர்வாகத்தால் விவசாயிகளுக்கு  சமிபத்தில் வழங்கப்பட்ட காசோலை கணக்கில்  பணம் இல்லாமல்  வங்கிகள் திருப்பி அனுப்பட்டதை கண்டித்து கரும்பு விவசாயிகள் சங்கம்  சார்பில் காசோலை எரிப்பு போராட்டம் நடைபெற்றது
புதுச்சேரி சட்டமன்றம் முன்பு நடந்த இப்போராட்டத்திற்கு எல்.ஆர் பாளைய கூட்றவு சர்க்கரை ஆலையின் சங்க  தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.முன்னதாக அகில இந்திய விவசாயிகள் சங்க பிரதேச தலைவர் நிலவழகன் போராட்டத்தை துவக்கிவைத்து பேசினார்.தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க விழுப்புர மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் இராதாகிருஷ்ணன்,புதுச்சேரி அமைப்பாளர் ஆர்.சரவணன்,விவசாயிகள் சங்க பிரதேச செயலாளர் பத்மநாபன்,வி.தொ.ச பிரதேச தலைவர் கலிவரதன் மற்றும் நிர்வாகிகள் சுப்புரமணியன்,துரை,சுப்புரமணி ,ராஜராமன்,சுதாகர்,கருணாகரன் உள்ளிட்ட திரளான கரும்பு விவசாயிகள் இப்போராட்டத்தில்  பங்கேற்றனர்.முன்னதாக அண்ணாசிலை எதிரில் இருந்து ஊர்வலமாக வந்த விவசாயிகள் ஆலை நிர்வாகத்தை கண்டித்து முழக்கமிட்டவாறு காசோலையின் நகலை சட்டமன்றம் எதிரே  எரிக்க முயன்ற போது  70க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
Read more...
Sunday, June 10, 2012

சிபிஎம் இமாலய வெற்றி

0 comments
புதுச்சேரி,ஜூன்-6
மாநில அரசின் நிதி ஆதாரத்தை மத்திய அரசு சுரண்டி கொண்டு மாற்றந்தாய் மணப்பான்மையுடன் செயல்படுகிறது என்று  மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் குற்றஞ்சாட்டினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் புதுச்சேரி   பிரதேசக்குழு சார்பில்  மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து அரசியல் விளக்க பொதுக்கூட்டம்  அண்ணாசாலை வைசியாள்வீதி சந்திப்பில் நடைபெற்றது.இப்பொதுக்கூட்டத்திற்கு நகரகமிட்டி செயலாளர் என்.பிரபுராஜ் தலைமை தாங்கினார்.மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில்,
நாட்டில் உள்ள 30 மாநிலங்களை பாதுகாக்கும் பொருட்டு மத்திய திட்டக்குழுவுக்கு உள்ளது.தமிழக முதல்வர் சமிபத்தில் மத்திய திட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்டு வெளியே வந்த முதல்வர் பத்திரிக்கையாளர்களைகூட சந்திக்காமல் சென்னை வந்தார்.சென்னை வந்த முதல்வர் தமிழகத்தின் வரிவருவாய் அனைத்தையும் மத்திய அரசு எடுத்து செல்கிறது என்று குற்றம்சுமத்தியுள்ளார்.கடந்த 1970 ஆம் ஆண்டிலேயே இந்த குற்றச்சாட்டை மார்க்சி°ட் கட்சி முன்வைத்தது.மாற்றாந்தாய் மணப்பான்மையுடன் மத்திய அரசு செயல்படுகிறது  என்று அப்போது மாநில கட்சிகள் மார்க்சிஸ்ட் கட்சி சொன்னதை கேட்டி இருந்தால் இந்த நிலை இப்போது ஏற்பட்டு இருக்காது.
எனவே மாநில வளர்ச்சிக்கு தேவையான நிதியை பெற மக்களை திரட்டி மாநில அரசுகள் போராட முன்வரவேண்டும்.மாநில அரசு சிக்கனமாக இருக்க வேண்டும் என்று கூறும் மத்திய திட்டகமிஷன் துணை தலைவர்   அவர் பயணம் செய்த ஒரு நாள் செலவு மட்டும் ரூ.1லட்சம்.ஆனால் இவரே கிராமத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.22 க்கு மேல் செலவு செய்பவர்கள் வருமை கோட்டுக்கு மேலே உள்ளவர்கள்  என்று கூறுகிறார்.
நாளோரும் வண்ணமும் பொழுதொருமேனியும் மத்திய மாநில அரசுகள் விலை வாசியை  உயர்த்தி  உழைப்பாளி மக்கள் மீது  தாக்குதல் தொடுத்துவருகிறது.மத்தியில் 3ஆண்டுகாள மான்மோகன்சிங் ஆட்சியும்,மாநிலத்தில் ஒரு ஆண்டுகால நிறைவு செய்துள்ள என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்து செயல்படுகிறது.இன்றைக்கு ஊழலில் சிக்கி தவிக்கும் மத்திய அரசு தங்களை காப்பாற்றி கொள்ள விலைவாசி உயர்வை மக்கள் தலையில் உயர்த்தி வருவது கண்டனத்துகுறியது.
 
சிபிஎம் இமாலய வெற்றி
இன்றைக்கு தாராளமய கொள்கைகளை கடைபிடித்துவரும் காங்கிரஸ் ஆட்சியானாலும்,முந்தைய பாஜக ஆட்சியானலும் மக்கள் விரோத கொள்கைகளை கடைபிடித்ததின் விலைவு இமாச்சல்பிரதேசத்தில் சமிபத்தில் நடந்த மேயர்,துனைமேயர் தேர்தலில் தேல்வியைசந்தித்துள்ளனர்.அங்கு மார்க்சிஸ்ட் கட்சி மக்களின் அமோக ஆதரவை பெற்று வெற்றி பெற்றுள்ளது.அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த வெற்றி தொடரும்.எனவே இந்தியாவிற்கு தேவை இடது முன்னனி பாதை அந்த பாதையை புதுச்சேரியில் ஏற்படுத்தவும்,புதிய தாரளமய கொள்கைகளை எதிர்த்து போராட முன்வர  வேண்டும் என்று குணசேகரன் கேட்டுகொண்டார்.
முன்னதாக கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் ராஜாஙகம்,நிலவழகன்,முருகன்,கலிவரதன்,சுமதி ஆகியோர் பேசினார்கள்.இப்போதுக்கூட்டத்தில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Read more...
Friday, June 1, 2012

புதுச்சேரி இடது சாரிகட்சிகள் சார்பில் நடந்த மறியல்

0 comments
புதுச்சேரி,மே-31
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரிகட்சிகள் நடத்திய மறியல் போராட்டத்தில் புதுச்சேரியில் 450பேர் கைது செய்யப்பட்டனர்.
காங்கிர° தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.50பைசா உயர்த்தியதை கண்டித்தும்.விலை உயர்வை உடனே திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சி°ட் கட்சி,இந்திய கம்யூனி°ட் கட்சி,பார்வர்டு பிளாக் உள்ளிட்ட இடது சாரிகட்சிகள் சார்பில் நாடு தழுவிய மாறியல் போராட்டத்திற்கு வியாழனன்று( மே-31) ல்அழைப்பு விடுக்கப்பட்டது.அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி நகரம்
புதுச்சேரி அண்ணாசாலை அருகில் இருந்து துவங்கிய மறியல் போராட்டத்திற்கு சிபிஐ மாநில செயலாளர் விசுவநாதன்,சிபிஎம் பிரதேச செயலாளர் பெருமாள்,பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் முத்து ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.சிபிஎம் செற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,நிலவழகன்,ராஜாங்கம்,ராமசாமி,கே.முருகன்,ராமச்சந்திரன்,இடைகமிட்டி செயலாளர்கள் முருகையன்,லெனின்துரை,பிரபுராஜ்,சிபிஐ மாநில நிர்வாகிகள் நாரா.கலைநாதன், சலீம்,கீதநாதன் ,அபிஷேகம்,முருகன்,சரளா,உள்ளிட்ட இடதுசாரிகட்சிகளின் ஊழியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக அண்ணாசிலையிலிருந்து ஊர்வளமாக வந்து காமராஜர் சிலை எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 40பெண்கள் உட்பட  320பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.இதேப்போல் பாகூர் தபால் நிலையம் எதிரில் நடந்த மறியலுக்கு சிபிஎம் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.பிரதேச குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன்  உள்ளிட்ட  60பேரை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.மதகடிப்பட்டில் நடந்த மறியலுக்கு சிபிஎம் செயற்குழு உறுப்பினர் கலிவரதன் தலைமை தாங்கினார்.கொம்யூன்செயலாளர் சரவணன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் உலகநாதன்,அன்புமணி,ஆவணியப்பன்,சங்கர்,உள்ளிட்ட 70 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வர்த்தக நிறுவனங்கள் அடைப்பு
இப்போராட்டத்தை யொட்டி புதுச்சேரி நேருவீதி,காந்தி வீதி, அண்ணாசாலை,சின்னகடை,முத்தியாள்பேட்டை,நெல்லித்தோப்பு,முதலிhயர் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள்,வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தது.புதுச்சேரியில் பெரும்பாளான இடங்களில் சாலைகளில் மக்கள் கூட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது .

ஆட்டோ ஓட்டுநர்கள்  வேலைநிறுத்தம்
சிஐடியு,ஏஐடியுசி,தொமுச,புதுச்சேரி மாநில ஆட்டோ சங்கம் உள்ளிட்ட ஆட்டோ சங்கங்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றதால் புதுச்சேரியில் 80சதவீத ஆட்டோக்கள் இயங்வில்லை.காமராஜர் சிலை எதிரே சிஐடியு ஆட்டோ ஒட்டுநர்கள் சங்கத்தின் பிரதேச பொதுச்செயலாளர் சீனுவாசன்,ஏஐடியுசி ஆட்டோ சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் தலைமையில் திரளான ஆட்டோ ஓட்டுநர்கள் மறியல் போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானார்கள்.
Read more...

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மே-31ல் புதுச்சேரியில் மறியல் போராட்டம் நடத்த இடதுசாரிகட்சிகள் முடிவு

0 comments
புதுச்சேரி,மே-26
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மே-31ல் புதுச்சேரியில் மறியல் போராட்டம் நடத்த இடதுசாரிகட்சிகள் முடிவு.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலகுழு அலுவலகத்தில் இடதுசாரிகட்சி; தலைவர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிபிஜ மாநில செயலாளர் ஆர்.விசுவநாதன்,தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன்,நிர்வாகக்குழு உறுப்பினர் கீதநாதன்,சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் ராஐhங்கம்,பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் முத்து,புரச்சிகர சோஸலிஸ்ட் கட்சி தலைவர் லெனின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் இக்கூட்டத்திற்கு பிறகு இக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியது வருமாறு,
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு பாராளுமன்ற கூட்டம் முடிந்த பிறகு வரலாறு கானதா வகையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.7.50பைசா உயர்த்தியுள்ளது.இந்த விலை ஏற்றம் 39வது முறையாக மககள் தலையில் பேரிடியாக அமைந்துள்ளது.அமேரிக்கா நாட்டின் பொருளாளதார பின்டைவில் இருந்து அந்நாட்டை காப்பாற்றவே இந்த விலைஏற்றத்தை மத்திய மன்மோகன்சிங் அரசு மக்கள் தலையில் சுமத்தியுள்ளது கண்டனத்துகுறியது.மேலும் இந்த விலை உயர்வை மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி நியாயபடுத்தும் வகையில் கூறியிருப்பது கண்டனத்திற்குறியது.எனவே இந்த விலைஉயர்வை ரத்து செய்யக்கோரி மே 29,30 ஆகிய இருதினங்களில் புதுச்சேரி முழுவதும் 40மையங்களில் தெருமுனைக்கூட்டமும்,மே 31ல் மறியல் போராட்டமும் நடத்த இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இப்போராட்டத்தில் அனைத்து பகுதி மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என இக்கட்சி தலைவர்கள் கேட்டுகொண்டனர்.
Read more...

உயர்த்திய பெட்ரோல் விலை உயர்வை உடனே திரும்பபெறக்கோரி

0 comments
புதுச்சேரி,மே-24
உயர்த்திய பெட்ரோல் விலை உயர்வை உடனே  திரும்பபெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரியில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் திடீர் பெட்ரோல் உயர்வை உடனடியாக திரும்பபெறவேண்டும்.பெட்ரோல் விலையை நிர்னைக்கும் உரிமையை அரசின் கட்டுபாட்டிலேயே மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
பாகூர்
பாகூர் மேற்குவீதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேசக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன்,கமிட்டி உறுப்பினர்கள் செல்வராசு,ராமசாமி,சேகர்,கலியன் உள்ளிட்ட 40பேரை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.
கரிகலாம்பாக்கம்
கரிகலாம்பாக்கம் நான்கு முனைசந்திப்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் வில்லியனூர் கொம்யூன் செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார்.கமிட்டி உறுப்பினர் ரத்தினவேலு, வாலிபர் சங்க நிர்வாகிகள் சண்முகம்,அரி,ராமமூர்த்தி உள்ளிட்ட 30பேரை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.
புதுச்சேரி நகரம்
புதுச்சேரி நேருவீதி காந்திவீதி சந்திப்பில் நடைபெற்ற கண்ட ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நகர கமிட்டி செயலாளர் பிரபுராஜ் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் கமிட்டி உறுப்பினர்கள் மதிவானன்,மது,சரவணன், உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
புதுச்சேரி,மே-24
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சிஐடியு ஆட்டோ சங்கம் சார்பில் புதுச்சேரியில் துhக்கில் தொங்கும் நுhதன போராட்டம் நடைபெற்றது.
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.50 பைசா உயர்த்தியதை கண்டித்தும் ,உயர்த்திய கட்டணத்தை உடனடியாக திரும்பபெறவேண்டும் என வலியுறுத்தி  ஆட்டோ ஓட்டுநர்கள் துhக்கு போட்டு கொள்ளும்  நுhதனபோராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே நடந்த இப்போராட்டத்திற்கு சிஐடியு ஆட்டோ சங்க பிரதேச செயலாளர் ஜி.சினிவாசன் தலைமை தாங்கினார்.சிஐடியு மாவட்ட துணை தலைவர் நிலவழகன் கண்டன உரையை துவக்கிவைத்து வைத்து பேசினார்.மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.ஆட்டோ சங்க நிர்வாகிகள் மது,மதிவானன்,பழனிபாலன்,பக்கிரி,முருகன் உள்ளிட்ட திரளான ஆட்டோ ஒட்டுநர்கள் இந்நுhதன போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக துhக்கில் தொங்கியவாறு  மத்திய அரசை எதிர்த்து முழக்கமிட்டது பொதுமக்களிடத்தில் மிகுந்த வரவேற்பு பெற்றது.
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com