Pages

ShareThis

Powered by Blogger.
 
Friday, June 1, 2012

உயர்த்திய பெட்ரோல் விலை உயர்வை உடனே திரும்பபெறக்கோரி

0 comments
புதுச்சேரி,மே-24
உயர்த்திய பெட்ரோல் விலை உயர்வை உடனே  திரும்பபெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரியில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் திடீர் பெட்ரோல் உயர்வை உடனடியாக திரும்பபெறவேண்டும்.பெட்ரோல் விலையை நிர்னைக்கும் உரிமையை அரசின் கட்டுபாட்டிலேயே மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
பாகூர்
பாகூர் மேற்குவீதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேசக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன்,கமிட்டி உறுப்பினர்கள் செல்வராசு,ராமசாமி,சேகர்,கலியன் உள்ளிட்ட 40பேரை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.
கரிகலாம்பாக்கம்
கரிகலாம்பாக்கம் நான்கு முனைசந்திப்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் வில்லியனூர் கொம்யூன் செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார்.கமிட்டி உறுப்பினர் ரத்தினவேலு, வாலிபர் சங்க நிர்வாகிகள் சண்முகம்,அரி,ராமமூர்த்தி உள்ளிட்ட 30பேரை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.
புதுச்சேரி நகரம்
புதுச்சேரி நேருவீதி காந்திவீதி சந்திப்பில் நடைபெற்ற கண்ட ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நகர கமிட்டி செயலாளர் பிரபுராஜ் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் கமிட்டி உறுப்பினர்கள் மதிவானன்,மது,சரவணன், உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
புதுச்சேரி,மே-24
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சிஐடியு ஆட்டோ சங்கம் சார்பில் புதுச்சேரியில் துhக்கில் தொங்கும் நுhதன போராட்டம் நடைபெற்றது.
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.50 பைசா உயர்த்தியதை கண்டித்தும் ,உயர்த்திய கட்டணத்தை உடனடியாக திரும்பபெறவேண்டும் என வலியுறுத்தி  ஆட்டோ ஓட்டுநர்கள் துhக்கு போட்டு கொள்ளும்  நுhதனபோராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே நடந்த இப்போராட்டத்திற்கு சிஐடியு ஆட்டோ சங்க பிரதேச செயலாளர் ஜி.சினிவாசன் தலைமை தாங்கினார்.சிஐடியு மாவட்ட துணை தலைவர் நிலவழகன் கண்டன உரையை துவக்கிவைத்து வைத்து பேசினார்.மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.ஆட்டோ சங்க நிர்வாகிகள் மது,மதிவானன்,பழனிபாலன்,பக்கிரி,முருகன் உள்ளிட்ட திரளான ஆட்டோ ஒட்டுநர்கள் இந்நுhதன போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக துhக்கில் தொங்கியவாறு  மத்திய அரசை எதிர்த்து முழக்கமிட்டது பொதுமக்களிடத்தில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com