புதுச்சேரி,ஜூன்-13
பாக்கி தொகை வழங்காத கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் காசோலை நகலை எரித்த கரும்பு விவசாயிகள் 70பேர் புதுச்சேரியில் கைது.
புதுச்சேரி அரசுக்கு சொந்தமான லிங்காரெட்டியார்பாளைய கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பி பல மாதங்கள் ஆகியும் விவசாயிகளுக்கு பாக்கிதொகை வழங்காததை கண்டித்தும்.காலதாமத தொகைக்கு 14சதவீத வட்டியுடன் பணப்பட்டுவாட செய்யகோரியும்,ஆலை நிர்வாகத்தால் விவசாயிகளுக்கு சமிபத்தில் வழங்கப்பட்ட காசோலை கணக்கில் பணம் இல்லாமல் வங்கிகள் திருப்பி அனுப்பட்டதை கண்டித்து கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் காசோலை எரிப்பு போராட்டம் நடைபெற்றது
புதுச்சேரி சட்டமன்றம் முன்பு நடந்த இப்போராட்டத்திற்கு எல்.ஆர் பாளைய கூட்றவு சர்க்கரை ஆலையின் சங்க தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.முன்னதாக அகில இந்திய விவசாயிகள் சங்க பிரதேச தலைவர் நிலவழகன் போராட்டத்தை துவக்கிவைத்து பேசினார்.தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க விழுப்புர மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் இராதாகிருஷ்ணன்,புதுச்சேரி அமைப்பாளர் ஆர்.சரவணன்,விவசாயிகள் சங்க பிரதேச செயலாளர் பத்மநாபன்,வி.தொ.ச பிரதேச தலைவர் கலிவரதன் மற்றும் நிர்வாகிகள் சுப்புரமணியன்,துரை,சுப்புரமணி ,ராஜராமன்,சுதாகர்,கருணாகரன் உள்ளிட்ட திரளான கரும்பு விவசாயிகள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக அண்ணாசிலை எதிரில் இருந்து ஊர்வலமாக வந்த விவசாயிகள் ஆலை நிர்வாகத்தை கண்டித்து முழக்கமிட்டவாறு காசோலையின் நகலை சட்டமன்றம் எதிரே எரிக்க முயன்ற போது 70க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
பாக்கி தொகை வழங்காத கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் காசோலை நகலை எரித்த கரும்பு விவசாயிகள் 70பேர் புதுச்சேரியில் கைது.
புதுச்சேரி அரசுக்கு சொந்தமான லிங்காரெட்டியார்பாளைய கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பி பல மாதங்கள் ஆகியும் விவசாயிகளுக்கு பாக்கிதொகை வழங்காததை கண்டித்தும்.காலதாமத தொகைக்கு 14சதவீத வட்டியுடன் பணப்பட்டுவாட செய்யகோரியும்,ஆலை நிர்வாகத்தால் விவசாயிகளுக்கு சமிபத்தில் வழங்கப்பட்ட காசோலை கணக்கில் பணம் இல்லாமல் வங்கிகள் திருப்பி அனுப்பட்டதை கண்டித்து கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் காசோலை எரிப்பு போராட்டம் நடைபெற்றது
புதுச்சேரி சட்டமன்றம் முன்பு நடந்த இப்போராட்டத்திற்கு எல்.ஆர் பாளைய கூட்றவு சர்க்கரை ஆலையின் சங்க தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.முன்னதாக அகில இந்திய விவசாயிகள் சங்க பிரதேச தலைவர் நிலவழகன் போராட்டத்தை துவக்கிவைத்து பேசினார்.தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க விழுப்புர மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் இராதாகிருஷ்ணன்,புதுச்சேரி அமைப்பாளர் ஆர்.சரவணன்,விவசாயிகள் சங்க பிரதேச செயலாளர் பத்மநாபன்,வி.தொ.ச பிரதேச தலைவர் கலிவரதன் மற்றும் நிர்வாகிகள் சுப்புரமணியன்,துரை,சுப்புரமணி ,ராஜராமன்,சுதாகர்,கருணாகரன் உள்ளிட்ட திரளான கரும்பு விவசாயிகள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக அண்ணாசிலை எதிரில் இருந்து ஊர்வலமாக வந்த விவசாயிகள் ஆலை நிர்வாகத்தை கண்டித்து முழக்கமிட்டவாறு காசோலையின் நகலை சட்டமன்றம் எதிரே எரிக்க முயன்ற போது 70க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
