புதுச்சேரி,ஜூன்-6
மாநில அரசின் நிதி ஆதாரத்தை மத்திய அரசு சுரண்டி கொண்டு மாற்றந்தாய் மணப்பான்மையுடன் செயல்படுகிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் குற்றஞ்சாட்டினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழு சார்பில் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து அரசியல் விளக்க பொதுக்கூட்டம் அண்ணாசாலை வைசியாள்வீதி சந்திப்பில் நடைபெற்றது.இப்பொதுக்கூட்டத்திற்கு நகரகமிட்டி செயலாளர் என்.பிரபுராஜ் தலைமை தாங்கினார்.மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில்,
நாட்டில் உள்ள 30 மாநிலங்களை பாதுகாக்கும் பொருட்டு மத்திய திட்டக்குழுவுக்கு உள்ளது.தமிழக முதல்வர் சமிபத்தில் மத்திய திட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்டு வெளியே வந்த முதல்வர் பத்திரிக்கையாளர்களைகூட சந்திக்காமல் சென்னை வந்தார்.சென்னை வந்த முதல்வர் தமிழகத்தின் வரிவருவாய் அனைத்தையும் மத்திய அரசு எடுத்து செல்கிறது என்று குற்றம்சுமத்தியுள்ளார்.கடந்த 1970 ஆம் ஆண்டிலேயே இந்த குற்றச்சாட்டை மார்க்சி°ட் கட்சி முன்வைத்தது.மாற்றாந்தாய் மணப்பான்மையுடன் மத்திய அரசு செயல்படுகிறது என்று அப்போது மாநில கட்சிகள் மார்க்சிஸ்ட் கட்சி சொன்னதை கேட்டி இருந்தால் இந்த நிலை இப்போது ஏற்பட்டு இருக்காது.
எனவே மாநில வளர்ச்சிக்கு தேவையான நிதியை பெற மக்களை திரட்டி மாநில அரசுகள் போராட முன்வரவேண்டும்.மாநில அரசு சிக்கனமாக இருக்க வேண்டும் என்று கூறும் மத்திய திட்டகமிஷன் துணை தலைவர் அவர் பயணம் செய்த ஒரு நாள் செலவு மட்டும் ரூ.1லட்சம்.ஆனால் இவரே கிராமத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.22 க்கு மேல் செலவு செய்பவர்கள் வருமை கோட்டுக்கு மேலே உள்ளவர்கள் என்று கூறுகிறார்.
நாளோரும் வண்ணமும் பொழுதொருமேனியும் மத்திய மாநில அரசுகள் விலை வாசியை உயர்த்தி உழைப்பாளி மக்கள் மீது தாக்குதல் தொடுத்துவருகிறது.மத்தியில் 3ஆண்டுகாள மான்மோகன்சிங் ஆட்சியும்,மாநிலத்தில் ஒரு ஆண்டுகால நிறைவு செய்துள்ள என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்து செயல்படுகிறது.இன்றைக்கு ஊழலில் சிக்கி தவிக்கும் மத்திய அரசு தங்களை காப்பாற்றி கொள்ள விலைவாசி உயர்வை மக்கள் தலையில் உயர்த்தி வருவது கண்டனத்துகுறியது.
சிபிஎம் இமாலய வெற்றி
இன்றைக்கு தாராளமய கொள்கைகளை கடைபிடித்துவரும் காங்கிரஸ் ஆட்சியானாலும்,முந்தைய பாஜக ஆட்சியானலும் மக்கள் விரோத கொள்கைகளை கடைபிடித்ததின் விலைவு இமாச்சல்பிரதேசத்தில் சமிபத்தில் நடந்த மேயர்,துனைமேயர் தேர்தலில் தேல்வியைசந்தித்துள்ளனர்.அங்கு மார்க்சிஸ்ட் கட்சி மக்களின் அமோக ஆதரவை பெற்று வெற்றி பெற்றுள்ளது.அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த வெற்றி தொடரும்.எனவே இந்தியாவிற்கு தேவை இடது முன்னனி பாதை அந்த பாதையை புதுச்சேரியில் ஏற்படுத்தவும்,புதிய தாரளமய கொள்கைகளை எதிர்த்து போராட முன்வர வேண்டும் என்று குணசேகரன் கேட்டுகொண்டார்.
முன்னதாக கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் ராஜாஙகம்,நிலவழகன்,முருகன்,கலிவரதன்,சுமதி ஆகியோர் பேசினார்கள்.இப்போதுக்கூட்டத்தில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மாநில அரசின் நிதி ஆதாரத்தை மத்திய அரசு சுரண்டி கொண்டு மாற்றந்தாய் மணப்பான்மையுடன் செயல்படுகிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் குற்றஞ்சாட்டினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழு சார்பில் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து அரசியல் விளக்க பொதுக்கூட்டம் அண்ணாசாலை வைசியாள்வீதி சந்திப்பில் நடைபெற்றது.இப்பொதுக்கூட்டத்திற்கு நகரகமிட்டி செயலாளர் என்.பிரபுராஜ் தலைமை தாங்கினார்.மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில்,
நாட்டில் உள்ள 30 மாநிலங்களை பாதுகாக்கும் பொருட்டு மத்திய திட்டக்குழுவுக்கு உள்ளது.தமிழக முதல்வர் சமிபத்தில் மத்திய திட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்டு வெளியே வந்த முதல்வர் பத்திரிக்கையாளர்களைகூட சந்திக்காமல் சென்னை வந்தார்.சென்னை வந்த முதல்வர் தமிழகத்தின் வரிவருவாய் அனைத்தையும் மத்திய அரசு எடுத்து செல்கிறது என்று குற்றம்சுமத்தியுள்ளார்.கடந்த 1970 ஆம் ஆண்டிலேயே இந்த குற்றச்சாட்டை மார்க்சி°ட் கட்சி முன்வைத்தது.மாற்றாந்தாய் மணப்பான்மையுடன் மத்திய அரசு செயல்படுகிறது என்று அப்போது மாநில கட்சிகள் மார்க்சிஸ்ட் கட்சி சொன்னதை கேட்டி இருந்தால் இந்த நிலை இப்போது ஏற்பட்டு இருக்காது.
எனவே மாநில வளர்ச்சிக்கு தேவையான நிதியை பெற மக்களை திரட்டி மாநில அரசுகள் போராட முன்வரவேண்டும்.மாநில அரசு சிக்கனமாக இருக்க வேண்டும் என்று கூறும் மத்திய திட்டகமிஷன் துணை தலைவர் அவர் பயணம் செய்த ஒரு நாள் செலவு மட்டும் ரூ.1லட்சம்.ஆனால் இவரே கிராமத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.22 க்கு மேல் செலவு செய்பவர்கள் வருமை கோட்டுக்கு மேலே உள்ளவர்கள் என்று கூறுகிறார்.
நாளோரும் வண்ணமும் பொழுதொருமேனியும் மத்திய மாநில அரசுகள் விலை வாசியை உயர்த்தி உழைப்பாளி மக்கள் மீது தாக்குதல் தொடுத்துவருகிறது.மத்தியில் 3ஆண்டுகாள மான்மோகன்சிங் ஆட்சியும்,மாநிலத்தில் ஒரு ஆண்டுகால நிறைவு செய்துள்ள என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்து செயல்படுகிறது.இன்றைக்கு ஊழலில் சிக்கி தவிக்கும் மத்திய அரசு தங்களை காப்பாற்றி கொள்ள விலைவாசி உயர்வை மக்கள் தலையில் உயர்த்தி வருவது கண்டனத்துகுறியது.
சிபிஎம் இமாலய வெற்றி
இன்றைக்கு தாராளமய கொள்கைகளை கடைபிடித்துவரும் காங்கிரஸ் ஆட்சியானாலும்,முந்தைய பாஜக ஆட்சியானலும் மக்கள் விரோத கொள்கைகளை கடைபிடித்ததின் விலைவு இமாச்சல்பிரதேசத்தில் சமிபத்தில் நடந்த மேயர்,துனைமேயர் தேர்தலில் தேல்வியைசந்தித்துள்ளனர்.அங்கு மார்க்சிஸ்ட் கட்சி மக்களின் அமோக ஆதரவை பெற்று வெற்றி பெற்றுள்ளது.அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த வெற்றி தொடரும்.எனவே இந்தியாவிற்கு தேவை இடது முன்னனி பாதை அந்த பாதையை புதுச்சேரியில் ஏற்படுத்தவும்,புதிய தாரளமய கொள்கைகளை எதிர்த்து போராட முன்வர வேண்டும் என்று குணசேகரன் கேட்டுகொண்டார்.
முன்னதாக கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் ராஜாஙகம்,நிலவழகன்,முருகன்,கலிவரதன்,சுமதி ஆகியோர் பேசினார்கள்.இப்போதுக்கூட்டத்தில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
